Saturday, February 4, 2017

மீட்டெடுக்கபடவேண்டிய பாரம்பரிய உணவுகள்

                                                                                                          -சாவித்திரிகண்ணன்

நம் முன்னோர்கள், பரம்பரைபரம்பரையாக எந்த உணவை உண்டு, உடல்திறன்பெற்று வாழ்ந்தார்களோ...., அந்த உணவைத் தான் பாரம்பரிய உணவுகள் என்றழைக்கிறோம். அன்று நம் முன்னோர்கள் உண்ட சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசிகளின் பெயர்களை சொன்னாலே இன்றுள்ள தலைமுறைக்கு தெரிவதில்லை.

சிறுதானியங்கள், ஆனால் பெரும் பலன்கள்!

சிறுதானியங்கள் அரிசியைக் காட்டிலும் அதிமுக்கியத்துவமானவையா?
ஆமாம். காரணம் அரிசியில் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்தும், கொழுப்பும் அதிகம்.

அதனால் அரிசி அமிலத்தன்மை கொண்ட உணவாகும். ஆனால் சிறுதானியத்திலோ புரதம் அரிசியைக்காட்டிலும் இருமடங்காகும். நார்சத்தோ பல நூறுமடங்கு அதிகமாகும்.
மினரல்ஸ் எனப்படும் தாது உப்புகள், இரும்புசத்து, கால்சியம் போன்றவை அரிசியைக் காட்டிலும் பற்பல மடங்கு கூடுதலாகும்.
எனவே தான் குமரிமுனை தொடங்கி இமயம் வரை சிறுதானியம் பன்னெடுங்காலமாகப் பயிரிடப்படுகின்றன உலகில் 20க்கு மேற்பட்ட நாடுகளில் சிறுதானிய உற்பத்தி சிறப்பிடம் பெற்றுள்ளது. இதிலுள்ள கரையாத நார்சத்துகள் மலச்சிக்கலுக்கு மருந்தாகின்றன.

இதயத்தை அரண்செய்கின்றன.
பருவ வயதினருக்கு பலம் சேர்க்கின்றன.
மாதவிடாய் நின்ற நின்ற பெண்களுக்கு மகத்துவமாகின்றன
 நீரிழிவு நோயை நிருமூலமாக்குகின்றன.
புற்றுநோயை புறமிடவைக்கின்றன.
பித்தகற்களை சத்தமின்றி கரைக்கின்றன! அல்லது வராமலே தவிர்கின்றன.
மொத்தத்தில் சிறுதானியங்கள் ஆரோக்கியத்தின் திறவுகோலாகின்றன.

சிறுதானியங்கள் என்றால் அவை வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, பனிவரகு, சின்னசோளம் ஆகிய எட்டையும் குறிக்கும்.

 அரிசி, கோதுமை, மக்காசோளம்.... போன்றவற்றை நாம் பெருதானியங்கள் என்கிறோம்.

 நவதானியங்கள் என்பவை பச்சைபயிறு, கொண்டைக்கடலை, நிலக்கடலை, மொச்சை, கருப்பு உளுந்து,காராமணி, சோயாபீன்ஸ், கொள்ளு, பச்சை பட்டாணி போன்றவையாகும்.

அந்தந்த மண்ணில் பிறந்தவர்கள், எந்தெந்த இடத்தில் வாழ்ந்தாலும் பிறந்த மண்ணுக்குரிய உணவே அவர்கள் உடலுக்கும். உள்ளத்திற்கும் உகந்ததாகும். காற்றும், நெருப்பும், ஆகாயமும் உலகத்திற்கே பொதுவானவை.

ஆனால், நிலமும், நீரும் அந்தந்தச் சூழலுக்கு உகந்தவை. உணவென்பது நிலமும், நீரும் கலந்த கலவையே.

நம் முன்னோர்கள் காலத்தில் பணம், காசுக்கு மாற்றாக பண்டமாற்று என்றொரு வழக்கம் இருந்தது. இதனால் சமூகத்தின் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யப்பட்டு ஒன்றைக் கொடுத்து, மற்றெல்லாவற்றையும் பெற்றனர்.

மூன்று கி.மீக்கு ஒரு விதை நெல் புழக்கத்திலிருக்கும். அரிசியும், சிறுதானியங்களும் நிலத்திற்கு நிலம் வேறுபட்டன.
அவை அனைத்தும் அந்தந்த நிலத்திற்குரிய மக்களால் பெயர்சூட்டப்பட்டன. யானைமுக்கன், கம்மன்சம்பா, காட்டுயாணம், மிளகுச்சம்பா, குள்ளக்கார், பெருங்கார்....
என ஆயிரத்திற்கும் மேலான விதவிதமான பெயர்களில் அரிசி ரகங்கள் இருந்தன.

இவை போன்றே சிறுதானியங்களிலும் நிறைய ரகங்கள் உள்ளன. தினை என்றால் நாற்பத்துக்கு மேற்பட்ட ரகங்கள் உள்ளன.

நமது கல்வியிலும், கலாச்சாரத்திலும், ஆட்சி அதிகாரத்திலும் அந்நிய ஆதிக்கம் நுழைந்ததைப் போலவே உணவிலும் அந்நிய ஆதிக்கம் படிப்படியாக நுழைந்தது.

உணவில் நுழைந்த அந்நிய ஆதிக்கம் எதிர்புகளின்றி ஏகபோக மாயிற்று.

விளைவு, பலசாலிகளாத் திகழ்ந்த தமிழ்ச்சமூகம் பலஹீன மடைந்துவிட்டது.

தன்மான சிங்கங்களாக சிலிர்த்து திரிந்த சமூகம் அற்பச் சுகங்களுக்காக அடிமை மனோபாவத்தில் ஆழ்ந்து திளைக்கிறது.

நாக்குச் சுவைக்காகவும், பார்வைப் பசிக்காகவும் நாம் அனுமதித்த உணவுகள்
நம் உடலை பலஹீனமாக்கி, உணர்ச்சிகளை மலடாக்கி, உள்ளத்தை வெறுமையாக்கி மொத்தத்தில் நம் நலத்தையும், குணத்தையும் மாற்றி விட்டன.

நாம் உண்ணும் உணவு தான் நம் உடலாகிறது.
 உதிரமாகிறது.
தசையாகிறது,
மஞ்ஜையாகிறது
என்பதெல்லாவற்றையும் விட அவையே நம் எண்ணங்களுக்கும், சிந்தனைக்கும், செயல்பாடுகளுக்கும் அடித்தளமாகின்றன.

இவற்றின் வழியே நம் அடையாளத்தை கட்டமைக்கின்றன. அந்த வகையில் நாம் நம் அடையாளத்தை இழந்துவிட்டோம்.

அன்று ஆண்களிடமிருந்த வீரம் இன்று என்னவாயிற்று? பெண்களிடமிருந்த நாணம் ஏன் நழுவிப் போயிற்று?
குழந்தை பருவத்திற்கேயுரிய 'இன்னாசென்ஸ்' தற்போது இல்லாமலாகிவருகிறது.
 பிஞ்சிலே பழுத்து, நஞ்சிலே துவைத்தெடுத்த நச்சு முத்துக்களாக இன்றைய இளம் சமூகத்தை வளர்த்தெடுக்கப் போகிறோமா?

தமிழனுக்கேயுரிய தன்மானமான உணர்வு குறைந்து வருகிறது. விருந்தினரை உபசரிக்கும் விருந்தோம்பல் எனும் அடிப்படை பண்புநலன் அருகிவருகிறது. பெரியாரைப்பணிதல், சிறியோரை அரவணைத்தல், சமூகநலனுக்காக கூடி உழைத்தல், பிறர்நலன்விழைதல், உழைத்து வாழ்வதில் உவகைகொள்ளுதல், பழிபாவத்திற்கு அஞ்சுவது, பொதுநலனில் ஈடுபாடு, தாய்மொழிபற்று, நாட்டுப்பற்று... என சென்ற தலைமுறைகளின் அடையாளங்களாகத் திகழ்நதவை யாவும் இப்போது உருக்குலைந்து வருகின்றன.

எல்லாவற்றுக்கும் உணவுக்கலாச்சாரம் உருக்குலைந்ததே அடிப்படையாகும்.

 புறநானுறு காவியத்தில் போரில் புறமுதுகிட்டு, முதுகில் ஈட்டிபாய்ந்து கிடந்த மகனைக் கண்ட அவன் தாய், அவனுக்கு பாலூட்டிய தன் முளையை வெட்டி எறிந்த நிகழ்வு உணர்த்தும் செய்தி என்ன? என் மார்பகத்து தாய்பால் இவனுக்கு வீரத்தை யல்லவா ஊட்டியிருக்க வேண்டும்? அன்றி இவன் கோழையாகிப் போனானென்றால் இவனுக்கு பாலூட்டிய என் குற்றமன்றோ அது? என்று அந்தத் தாய் சிந்தித்தன் விளைவாகத் தான் தன் மார்பகத்தை அறுத்தெறிந்தாள்! கேட்கவே சிலிர்க்கிறதல்லவா?

 நாட்டு மாட்டில் பால் குடித்து வளர்ந்த காலத்தில் நம் நரம்புகளில் தன் மான ரத்தம் ஓடியது.
சீமைமாட்டுப்பாலை, அதிலும் அதீத பாலுக்காக ஊசிபோட்டு கறக்கப்பட்டு, பின்பு பதப்படுத்தவென்று பலவிதங்களில் பாழ்பட்டு,
நாம் குடிக்கின்ற பாலில் வீரமா விளையும்?
இல்லை இது சோரத்திற்கே துணைபுரியும்.
பாலில் மட்டுமா?
நம் உணவே ஏறத்தாழ நம்மிடமிருந்து அபகரிக்கபட்டு விட்டதல்லவா?
சிலகாலத்திற்கு சிறுதானியங்களே வழுக்கொழிந்து போனது எப்படி நிகழ்ந்தது?
சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பெயர் குறிப்பிடப்படும் வரகும், திணையும் வழக்கொழிந்ததன் மாயம் என்ன?

தேனும், திணைமாவும் உண்டு, தினவெடுத்த தோளும், வாளும் கொண்டு போர்புரிந்த இனம் இன்று பம்மிீககிடப்பதென்ன? 'வரகரிச்சோறும் வழுதுணங்காய்வாட்டும் முரமுரெனவே புளித்த மோரும்.....'

என நம் ஔவைபாட்டி சுவைத்து எழுதிய உணவு தடம் மாறி காணாமலானதென்ன?

உடல்வலுப்பெற, உயிரணுக்கள் விருத்தியாக வேண்டுமென்றால், சாப்பிடவேண்டிய சம்பா அரிசிக்குப் பெயரே, மாப்பிள்ளை சம்பா என வைத்து, மலட்டுத் தன்மையற்ற சமூகத்தை மருந்துகளின்றி உணவின் வழியே புரந்த தமிழ்சமூகத்தின் உணவு கலாச்சாரம் என்னானது?

கருவுற்ற பெண் ஆரோக்கியமாக குழந்தையைப் பெற்றடுக்கவும், சுகப்பிரசவம் காணவும் வேண்டி கண்டெடுக்கப்பட்ட பூங்கார் அரிசியும், சுகப்பிரசவத்திற்குப் பின் தாய்ப்பால் சுரப்பிற்கென கொடுக்கப்பட்ட திணையரிசியும், கிச்சலிசம்பாவும், நிலச்சம்பாவும், குழிவெடிச்சான் அரிசியும் காணாமலாக்கப்பட்டு ஐ.ஆர்.எட்டு, ஐ.ஆர் இருபது, சூப்பர் பொன்னி... என ஏதேதோ பெயர்களில் ஓட்டுரகங்களும், வீரியவிதை அரிசி ரகங்களும் பட்டைதீட்டபட்டு, பளபளப்பாக பந்தி வைக்கப்பட்ட காலத்தின் கோலத்தை என்னென்பது?

 மூங்கில் அரிசியும், காட்டுயாணமும் நூறுவயதைக் கடந்த முதியோர்களைக் கூட மூட்டுவலிகளின்றி திண்ணென திகழச் செய்த அரிசி ரகங்களல்லவா?

அறுசுவைக்குள் ஆரோக்கியத்தை புதைத்து பேணிவந்த சமூகமல்லவா தமிழ்ச் சமூகம்!

பாகற்காய், கடுக்காய், கறிவேப்பிலை, வாழைப்பூ, மாம்பருப்பு, ஓமம், வெந்தயம் போன்றவை நம் உணவிலிருந்து விடுபட்ட காலத்திலிந்து தான் நீரிழிவு நோய் நீக்கமறப் பரவியது.

மைதா, வெள்ளைச் சீனி, டால்டா, ரீபைண்ட் ஆயில், பாலீஸ் செய்யப்பட்ட பாரம்பரியமில்லா அரிசி... இவற்றின் வருகைக்கு முன் உள்ள தமிழ்ச்சமூகம் எப்படி இருந்தது?

இவற்றின் வருகைக்கு பின் தமிழ்ச்சமூகம் எப்படி வீழ்ந்தது?
என்பதை குறித்த ஆய்வுகள் வருங்காலத்தில் ஆயிரமாயிரம் பக்கங்களுக்கு வரக்கூடும்.

இன்று எங்கெங்கு காணினும் பரோட்டா, நாண், பீட்சா, பர்க்கர், நூடுல்ஸ், ப்ப்ஸ், சமோச்சா, குளாப்ஜாமுன், பாதுஷா விதவிதமான கேக்குகள், பன்கள், ரொட்டிகள், சான்விட்ச்சுகள்... என எல்லாம் மைதா மயம்...!

 தமிழர்களின் தேசிய உணவாகிவிட்டதா மைதா?
மைதா என்பது உண்ணத்தகாத ஒரு கழிவு....

 கழிவிலிருந்து சமூகத்திற்கு பயன்படும் ஆக்கப் பொருளை உருவாக்கலாம்.
ஆனால் கழிவுகளிலிருந்து உணவு தயாராகலாமா?
கழிவுகளையே உணவுகளாக கருதி கொண்டாட்ட மனோபாவத்தில் திளைக்கும் சமூகம் கழிசடைச் சமூகமல்லவா?

மைதாவை மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் ஏன் தடை செய்துள்ளன......?

பென்சாயில் பெராக்சைடால், அயிலட்டசான் போன்ற ரசாயணக் கலவைகளின் விளைவல்லவா மைதா?

மலச்சிக்கல், நீரிழிவு, மூட்டுவலி, ரத்த அழுத்தம்.... என அனைத்து நோய்களுக்கும் ஆதார மூலமல்லவா மைதா?

தீண்டக் கூடாத குப்பைக்கழிவு தீஞ்சுவை உணவாகியுள்ளதே?

இதுபோல் மற்றொரு பெருந்தீமை வெள்ளைச்சீனி;
 இது ஒரு வெள்ளைவிஷம். இதில் தான் நாம் தமிழர்கள் பாயாசம் செய்து பரவசத்துடன் பருகுகிறார்கள்.

பாஸ்போரிக் ஆசிட், சல்பர்டை ஆக்சைட், காஸ்டிக் சோடா, வாஷிங்சோடா இந்தக் கலவையில் மனித எலும்புகளையும் கூட்டு சேர்த்து தயாரிக்கப்படும் வெண்மைவிஷம் தான் சீனி. இதில் தயாரிக்கப்படுவதற்கு பாயாசம் என்பதா?

 'பாய்சன்' என்பதா?
இது மட்டுமல்ல இன்றைக்கு பழச்சாறுகள் தொடங்கி காபி, டீ, பலகாரங்கள், பால்கோவா, லட்டு, ஜிலேபி, அல்வா.. . என அனைத்து இனிப்புகளும் வெள்ளை சீனியால் தான் செய்யப்படுகின்றன.
 ஒரு ஸ்பூன் சீனியானாலும் அது நம் உடம்பிலுள்ள கால்சியத்தை களவாடிவிடும்.

தினசரி சீனியை ஏதோ ஒரு வகையில் நாம் உட்கொண்டபடியே தான் இருக்கிறோம்.
அப்படி ஒவ்வொரு முறை உட்கொள்ளும் போதும் நம் உடம்பிலுள்ள கால்சியம் களவாடப் பட்டுக் கொண்டேதான் இருக்கும். பிறகு ஏன் மூட்டுவலி வராது.
சிலருக்கு சாதாரணமாக அடிபட்டாலே தற்போதெல்லாம் எலும்புகள் நொறுங்கிவிடுகின்றன. தடுமாறிக் கீழே விழுந்து எலும்பு முறிவு கொள்பவர்கள் ஏராளம்.
எல்லாம் வெள்ளைச் சீனியின் விபரீதங்களே! இது மட்டுமின்றி நீரிழிவு எனப்படும் சக்கரைவியாதி, சிறுநீரகநோய், ஜீரணக்கோளாறு, ஆண்மையின்மை என பல நோய்களை சீனி தோற்றுவிக்கும்.

 சீனி என்பது அடிப்படையில் ஒரு அமிலமாகும்.
எனவே உடம்பில் இது பித்தத்தை அதிகரிக்கும்.
பித்த அதிகரிப்பில் உண்டாகும் நோய்களுக்கெல்லாம் இது துணைபுரியும்.

ஐம்பது வருஷத்திற்கு முன்பு தமிழகத்தில் சீனி எத்தனை பேருக்குத் தெரியும்?

மிகச்சிறிய அளவே புழுகத்திலிருந்தது. சீமைச்சீனி என்பார்கள்.

பனைவெல்லம், தென்னைவெல்லம், பனங்கற்கண்டு, நாட்டுசர்க்கரை, மண்டைவெல்லம் இவை தாம் நாம் இனிப்புக்கு பயன்படுத்தியவை.

தேநீர், காபி, பாயாசம், பொங்கல், மிட்டாய், கும்மாயம், பணியாரம், அதிரசம், புட்டு, களி... என எல்லாவற்றிக்குமே நாம் கருப்பட்டியையும், மண்டைவெல்லத்தையும் அல்லவா பயன்படுத்திவந்தோம்.

 சக்கரைவியாதி என்பது அன்று மிகவும் ஆபூர்வம். அது பணக்காரர்களின் நோயாகத் தான் பார்க்கப்பட்டது.
இன்றோ சக்கரைவியாதி என்பதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அது ஒரு தேசிய நோயாக விஸ்வரூபமெடுத்துள்ளது.
காரணம் நாம் உண்ணும் பாரம்பரியம் தொலைத்த - பாலீஸ் செய்யப்பட்ட - அரிசி,
வெள்ளைச்சீனி, மைதா, டால்டா, ரீபைண்ட்ஆயில் மற்றும் செக்கில் ஆட்டாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவையே!

எனவே, 'பாஸ்ட்புட்' கலாச்சாரத்தை தொலைத்து
பாரம்பரிய கலாச்சாரத்தை நாடுவோம். 

விவசாயம் - நேற்று இன்று நாளை



                                                                                                                -சாவித்திரிகண்ணன்

எங்கெங்கும் காணினும் பச்சைபசேல் பயிர்கள்....
நெற்கதிர்கள், சிறுதானியங்கள், ஊடுபயிர்கள்....
சத்துமிக்க காய்கறிகள், மணம்வீசும் பூக்கள்
வாழை, தென்னை, பனை, மா, பலா, கொய்யா.... என எண்ணற்ற பழ மரங்கள்...,
கிராமங்கள் தோறும் அரசமரம், ஆலமரம்,பூங்கன், வேம்பு, வாகை, முருங்கை...செழிதோங்கிய மரங்கள்!
கால்நடைகள் இல்லாத விவசாயி வீட்டை பார்க்க முடியாது.

மண் என்றால் செம்மண்,கரிசல்மண்.வண்டல்மண்,களிமண்..என்பது பொது புரிதல்
ஆனால்,மண்ணை அதன் இயற்கை சூழல் சார்ந்து
குறிஞ்சி(மலை),முல்லை(காடு),மருதம்(நாடு),நெய்தல்(கடல்),பாலை(வற்ட்சி பகுதி) என பகுத்து அந்தந்த மண்ணுகுரிய பயிர் செய்து வாழ்ந்தவன் தமிழன்.
'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது என
ஆனை கட்டிப் போரடித்ததது' தமிழ் மண்!
விவசாய தொழில் நுட்பத்தில், வேளாண்துறை சார்ந்த பட்டறிவில் உலகத்திற்கே முன்னோடியாகத் திகழ்ந்த பூமி தமிழகம் !

வேட்டைச் சமூகமாகத் திரிந்த மனிதகுலம் நிலவுடைமைச் சமுதாயத்திற்கு மாறியதிலிருந்து சுமார் 10,000 ஆண்டுகளுக்கும் மேலாக தாவரப்பயிர்கள் குறித்த தன்நிகரற்ற நுண்ணறிவைக் கொண்டது நம் தமிழ்ச்சமூகம்!

நம் உழவுக்கு பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் உள்ளது.

உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்
தொழுதுஉண்டு பின் செல் பவர்.
என உழவை முதன்மை படுத்திய சமூகம்

விவசாயம் என்பது ஏதோ பிழைப்பதற்கான தொழிலல்ல!
அது வாழ்வின் ஒரு அங்கம்! மிகப்புனிதமானது!

தமிழனின் வாழ்வியல் அறநெறிகளோடு பின்னிப் பிணைந்தது

இங்கே விதைப்பது தொடங்கி அறுவடை வரை அனைத்துமே புனிதமான சடங்குகளாக கொண்டாடப்பட்டன.

குழந்தைக்கு முதன் முதலாக சோறுட்டுவதே சோறு தித்துதல் என்ற கொண்டாட்டமானது!

ஐயாயிரம் வகை நெல்ரகங்கள் கதிராடிச் செழித்தோங்கிய பூமி வேறெங்காவது உண்டா?

ஒவ்வொரு அரிசிக்கும் ஒரு தனிச்சுவை, தனி மருத்துவ குணம்!

ஆண்டவனுக்கு நிகராக அரிசியை கொண்டாடியவன் தமிழன்

பசியால் துடித்தாலும் அவன் விதைநெல்லை சாப்பிடமாட்டான்! அது அடுத்த உழவுக்கானது! அடுத்தடுத்த தலைமுறைக்கானது என்பதை ஆணித்தரமாக நம்பினான்!

வறட்சி, வெள்ளம், இயற்கை சீற்றத்தில் தான் அழிந்தாலும், விதை நெல்லை அழியவிடக்கூடாது என அவற்றை ஆலயங்களின் கோபுரக் கலசங்களில் சேகரித்து வைத்தனர் நம் முன்னோர்.!

வெள்ளத்தை சமாளிக்க மடுமுழங்கி சம்பா, உவர்நிலத்திற்கு உவர் சம்பா, புஞ்சை நிலமென்றால் சிறுதானியங்கள்.... என இயற்கையின் இயல்பிற்கேற்ப பட்டறிவால் பயிர்களை பயிரிட்டது தமிழ்ச்சமூகம்.

இன்று வரை இந்த பூமியின் நிலப்பரப்பில் காணப்படும் தாவரங்களில் 15,000 வகையினங்கள் வரையிலுமே அதன் மருத்துவ பயன்பாடு கண்டறியப்பட்டுள்ளன.

ஆனால், நம் தமிழ்மண்கண்ட சித்தர்களோ பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே 8,700வகை தாவரங்களின் மருத்துவகுணங்கள், அவற்றை பண்படுத்தி பயன்படுத்தும் முறைகள் ஆகியவற்றை கூறிச்சென்றுள்ளனர்!
நீர் மேலாண்மைககு ஒரு நிகரற்ற சான்றாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட கல்லணை! கட்டியவன் கரிகாழச்சோழன் எனும் தமிழன்!
ஆனால், அப்படிப்பட்ட பெருமை படைத்திருந்த இன்று நம் தமிழ்நாட்டிற்கு என்னாயிற்று?

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதொர் வைகை பொருணைநதி - என
மேவிய ஆறு பல ஓடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு
என்று பரவசத்துடன் பாரதி பாடிவியந்ததெல்லாம் கனவா? பழங்கதையா?
நாள்தோறும் விவசாயிகளின் தற்கொலைகள்.....
நகரங்கள் தோறும் புகழிடம் தேடும் விவசாயிக் கூலிகள்,
வெறிச்சோடிய வயல்வெளிகள்,
விரிவாக்கமடைந்து கொண்டிருக்கும் நகர்புறங்கள்,
கான்கிரிட் காடுகளாகும் விளைநிலங்கள்,
வற்றிப் போன ஆறுகள்,
ஆலைக்கழிவுகளால் அலங்கோலமான ஆற்றுப்படுகைகள்,
மறுபுறம் சூறையாடப்பட்ட ஆற்றோர மணற்பரப்புகள்.... ௨
தோண்டிப் பார்த்தும் நீர் எடுக்க முடியாமல்
துளைபோட்டு நீர் எடுத்து சக்கையாக உறிஞ்சி
சல்லடையாக்கப்பட்ட நிலத்தடி நீர்வளம்.

ஏன் இந்த நிலைமை?

'சுழன்றும் ஏர் பின்னது உலகம்'
என்ற பொய்யாமொழிப் புலவனின் வார்த்தை பொய்யாகுமா?

இல்லை, இது தற்காலிகப் பின்னடைவே!

ஆனால், நம் வீழ்ச்சியின் விபரிதத்தைத்தை உணர்ந்தால் தான் நாம் எழுச்சிக்கான பாதை புலப்படும்.

நமது தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 325லட்சம் ஏக்கராகும்.

இதில் 17 முக்கிய ஆற்றுப்படுகைகள்,61நீர்தேக்கங்கள் மூலம் பாசன வசதி பெற்ற நிலப்பரப்பு சுமார் 80லட்சம் ஏக்கர் தான்!

அதே சமயம் கிணறு, ஏரி, குளம் மூலம் மழைநீரை சேகரித்து விவசாயம் செய்ய முடிந்த நிலப்பரப்பு சுமார் 90லட்சம் ஏக்கர்களாகும்!
இப்படியாக விவசாயத்திற்கான விளைநிலங்கள் 180லட்சம் ஏக்கர்களாக இருந்தது - 40ஆண்டுகளுக்கு முன்பு வரை!

ஆனால், இது படிப்படியாகக் குறைந்து தற்போது சுமார் 50லட்சம் ஏக்கரில் மட்டுமே விவசாயம் நடக்கின்றது.
இதற்கெல்லாம் காரணம் என்ன?
காவேரியை கர்நாடகம் சிறைபிடித்தது.
பாலாற்றை ஆந்திரா பதுக்க முயற்சிக்கிறது
முல்லை பெரியாரை கேரளா முழங்கிய வண்ணமுள்ளது
என்றாலும் கூட நீர்மேலாண்மை இங்கு நீர்மூலமாக்கப்பட்டது ஒரு பிரதான காரணமாகும்!

ஆண்டுக்கு சராசரியாக தமிழ்மண்ணில் 950மி.மி மழைபெய்கிறது.
நம் மண்ணில் முன்னோர்கள் சுமார் 49,000 ஏரி குளங்களை உருவாக்கி தந்தனர்.
இவற்றில் பெருமளவை நாம் தொலைத்துவிட்டோம் 7கி.மீ வரை நீண்டிருந்த ஏரிகெளல்லாம் எங்கே போனதென்றே தெரியாமல் அடுக்குமாடிக்கட்டிடங்களாக ஆக்கிரமித்துவிட்டோம்.
மண்மேடிட்ட ஏரி குளங்களை நமக்கு தூர்வாரத்துப்பின்றி வாழ்கிறோம்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மேட்டூர் அணைக்குள் மூன்றில் ஒரு பங்கு மணலால் மூடப்பட்டு, அதனால் தண்ணீர் சேதாரமாவது பற்றி சிந்திக்காமல் அரசியல் செய்கிறோம்.

நம் பக்கத்து மாநிலங்கள் நூற்றுக்கணக்கில் கதவணைகள், தடுப்பணைகள், சிற்றணைகள் கட்டி நமக்கு சேரவேண்டிய தண்ணீரை பிடித்து வைக்கின்றன.
ஆனால் நாமோ கிடைக்கும் மழைநீரில் சரிபாதியை கடலுக்கு தாரை வார்க்கிறோம்.

கர்நாடகத்துடன் காவேரி நீருக்காக சண்டையிட்டுக் கொண்டே ஆண்டுதோறும் சராசரியாக 90டி.எம்.சி தண்ணீரை கடலுக்கு அரிபணிக்கிறோம்

விஞ்ஞான வளர்ச்சி நமக்கு கைகொடுத்த காரணத்தால் நிலத்தின் நீர்வளத்தை ஆயிரம் அடிக்கு மேலாக போர்போட்டு துளைத்து சூறையாடி வருகிறோம்!
1950ல் அன்றைய விரிந்து பரந்த மதராஸ் மாநிலத்தில் இருந்த போர்பம்புகள் 14000 தான்1

ஆனால் இன்றோ சுருங்கிப் போன தமிழகத்தில் 20லட்சம் பம்புசெட்டுகள் இந்த நிலத்தை சல்லடையாக்கி நீரை உறிஞ்சி வருகின்றன!

1960களில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைபுரட்சி விவசாயத்தின் அறக்கோட்பாடுகளையெல்லாம் ஆழப்புதைத்தது.
அதன் விளைவு நமக்கு உணவிட்ட அன்னை பூமியில் அதிக விளைச்சலுக்காக அளவில்லாமல் ரசாயன உரங்களை கொட்டி அணுஅணுவாக அதன் வளத்தை சாகடித்தோம்!

இயற்கை விவசாய பயிர்விளைச்சலில் நுனிமட்டுமே வீட்டுக்கு கிடைத்தது. நடுப்பகுதி தீவினமாக மாட்டுக்குவைக்கோலானது.

ஆக விளைச்சலில் ஒரு பங்கு தானியமாக மனிதனுக்கென்றால் இருபங்கு மாட்டுக்கானது. பால் நமக்கு உணவானது. அதன் சாணமும், மூத்திரமும் நிலத்திற்கு ஊட்டசத்து மிக்க உணவானது. பசுமைபுரட்சியில் தானியம் இருமடங்கு வைக்கோல் ஒரு பங்குமாக மாறியது. இதனால் கால்நடைச் செல்வங்கள் காணமலானது, மண்மலடானது, விளைந்த தானியங்களோ மனிதர்களை நோயாளிகளாக்கியது.

சுமார் அரை நூற்றாண்டு பசுமைபுரட்சியின் கசப்பு அனுபவங்கள் நம்மை பாரம்பரியவிவசாயத்தை நோக்கி பயணித்தே ஆக வேண்டிய கட்டாயத்தை நமக்கு நிர்பந்தித்துள்ளது.

இப்போதைய நிலை அப்படியே தொடருமானால் இன்னும் ஒரிரு தசாப்தங்களில் உலக மக்கள் தொகையில் 25 சதவிகிதத்தனருக்கு மட்டுமே உணவு கிடைக்கும் என ஐ.நாவின் அங்கமானதும், ஆப்ரிக்க ஐரோப்பிய நாடுகளின் பல்கலை அங்கமானதுமான 'கானா இயற்கை வளங்கள் நிறுவனம்' எச்சரித்துள்ளது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலே செயற்கை விவசாயம் முளைவிட்டபோதே அன்று கடுமையாக எதிர்த்தவர் சர்.ஆர்பர்ட்ஹார்வார்டு. இயற்கைக்கு இணைந்த வேளாண்மையே மனிதகுலத்திற்கு உகந்தது என்றார். இதைத்தான் ஜப்பானின் மசனோபுஃபுகோகாவும் வலியுறுத்தினார்.

இயற்கை விவசாயத்திற்கான குரல்கள் இந்தியாவிலும் எதிரொலித்தது. மகாராஷ்டிராவில் பாஸ்கர் ஹிராஜிசாவே, நரேந்திர தபோல்கர், சுபாஷ் பாலேக்கர் போன்றவர்கள் எடுத்த பகீரத முயற்சிகளாலும், தமிழ்நாட்டில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ நம்மாழ்வாரின் அயராத பேருழைப்பும் நமக்கு ஓரளவு நம்பிக்கையை துளிர்க்க வைத்துள்ளது.

காணாமல் மறைந்துபோன பல்லாயிர கணக்கான அரிய பாரம்பரிய நெல் ரகங்களில் 600 வகை நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
இன்று தமிழகத்தில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு திரும்பியுள்ளனர்.
இயற்கை விவசாயத்தில் நல்லவிளைச்சலும், லாபமும் உள்ளது என்பதன் அத்தாட்சியாக இன்று நகரங்களெங்கும் முளைத்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான இயற்கை அங்காடிகள் திகழ்கின்றன.

நகர்புறத்தில் படித்து தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றிய மென் பொறியாளர்களான இளைஞர்களும், பல்வேறு துறை சார்ந்த இளைஞர்களும் தற்போது கிராமங்களில் ஆங்காங்கே தங்கள் சக்திகேற்ப நிலங்கள் வாங்கி விவசாயத்தில் அர்பணிப்போடு ஈடுபடுகின்ற ஆச்சிரியத்தை கடந்த 10 ஆண்டுகளாக பார்க்க முடிகிறது!

இவர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும் வழிகாட்டிகளாகவும் தஞ்சை கோ.சித்தர், கொடுமுடி டாக்டரும், பஞ்சகவ்ய சித்தருமான நடராஜன், நெல்ஜெயராமன், நாகர்கோவில் இரா. பொன்னம்பலம், பரமக்குடி முனைவர்.பி.துரைசிங்கம், அரச்சலூர் செல்வம், உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமம், திண்டுக்கல் காந்திகிராமிய பல்கலைக்கழகம், கரூர் மாவட்ட வானகம்,புதுச்சேரியின் பூர்வீகம் அறக்கட்டளை, புதுக்கோட்டையின் ரோஸ் தொண்டு நிறுவனம், குடும்பம்..... போன்ற எண்ணற்ற ஆளுமைகளும், நிறுவனங்களும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் போரில் முனைப்புடன் செயலாற்றி வருகின்றனர்.

நம் பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்க முடியுமா? நோயற்ற ஆரோக்கியமான உணவுகான விளைச்சலை பெருக்கமுடியுமா? என்ற கேள்விகள் எழுந்த வண்ணமுள்ளன.
இது நீண்ட நெடிய போராட்டம்தான்! காலம் தான் இதற்கு விடை சொல்லும். அந்த மகத்தான காலக்கட்டத்திற்கு கைகொடுக்கும் முயற்சியாகத்தான் நாம் இந்த தொடரில் நேற்றைய விவசாயத்தின் நிலை, இன்றுள்ள சிக்கல்கள், நாளை நாம் சென்றடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை பற்றி அலச உள்ளோம்.


நன்றி: குமுதம் மண்வாசனை, பிப்ரவரி 1 

ஆஸ்த்துமாவை அஸ்த்தமிக்க செய்வோம்

   தேவாமிர்தம்சாவித்திரிகண்ணன்.


-  

சுவாசம்என்பதுசுகமாகநடந்தால்அதுநலமானஉடம்பாகும்.அந்தசுவாசமேசுமையாகிப்போனால்அதுநரகமானவாழ்வாகும்!
அதைத்தான்ஆஸ்த்துமாஎன்றழைக்கிறார்கள்!  ஆஸ்த்துமாவந்தவர்கள்அடையும்அவஸ்த்தைஅதைப்பார்ப்பவர்களையும்பதைபதைக்கவைக்கும்!
இப்படியாகஆஸ்த்துமாவில்அவதிப்படுபவர்கள்இந்தியாவில்இரண்டுகோடிபேர்என்பதுஅதிகாரபூர்வதகவல்! ஆனால்இந்தஎண்ணிக்கைஇரண்டுமடங்கிற்கும்அதிகமாகவேஇருக்கலாம்!
காரணம்ஆஸ்த்துமாவருவதற்கானசுற்றுச்சூழல்கேடுஇந்தியாவில்இங்கிங்கெனாதபடிஎங்கும்வியாபித்திருப்பதால்வியாதிஸ்தர்களும்விருத்தியாகிக்கொண்டேஉள்ளனர்.
குப்பைக்கூளங்கள், சாக்கடைநாற்றம், வாகனப்புகை, தொழிற்சாலைப்புகை, ரசாயனமருந்து, பூச்சிக்கொல்லிமருந்துகளின்நெடி, காற்றோட்டமில்லாவீடுகள், அதீதவெப்பம், அதீதக்குளிர், புகைப்பிடிக்கும்பழக்கம், பான்பராக், குட்கா, மதுப்பழக்கங்கள்ஆஸ்த்துமாவிற்குஅடித்தளமிடுகின்றன.!
மனதைசமநிலையில்வைக்கஇயலாமல்எடுத்ததற்கெல்லாம்உணர்ச்சிவசப்படுபவர்களுக்குகுறிப்பாககோபம், பயம், படபடப்பு, கவலை, அதிர்ச்சிபோன்றஉணர்ச்சிகள்மிகுந்திருப்பவர்களுக்குசுவாசம்சீராகஇல்லாமலாகிவிடுவதுஇயல்பே.
வலிநிவாரணமாத்திரைகள், ஆஸ்பரின்போன்றவற்றைஅதிகமாகஉட்கொண்டதால்ஆஸ்த்துமாவிற்குஆட்பட்டவர்களும்உண்டு.
அடிக்கடிஇருமல், சளி, தொடர்தும்மல், மூக்கடைப்பு, மூக்குஒழுகல்உள்ளகுழந்தைகளைஉடனேகவனிக்காவிட்டால்ஆஸ்த்துமாஅவர்களைஅரவணைத்துக்கொள்ளும்.
பரம்பரையாகஆஸ்த்துமாதாக்குவதும், உணவுஒவ்வாமையால்ஆஸ்த்துமாவிற்குஆட்படுவதும்மற்றொருவகையாகும்!
எப்படிநமக்குஆஸ்த்துமாவந்தாலும்அதைஇயற்கைவாழ்வியல்மூலம்இல்லாதொழிக்கமுடியும்.
ஆனால், ஆங்கிலமருத்துவத்தில்ஆயுள்முடியும்வரைமருந்துமாத்திரைகளைஉட்கொண்டுஆஸ்த்துமாவைகட்டுப்படுத்துகிறேன்என்றுமுயற்சித்துகலங்கித்தவிப்பதுதான்நடைமுறையாகவுள்ளது.
மற்றபலவியாதிஸ்தர்களைவிடஆஸ்த்துமாநோயாளிகள்அனுபவிக்கமுடியாதஉணவுகளின்பட்டியல்நீளமானது!  ஆனால், அதேசமயம்இயற்கைவாழ்வியலோடுஇரண்டறக்கலந்துவாழமுடிந்தவர்கள்ஆஸ்த்துமாவைஅஸ்தமிக்கவைக்கவும், அர்த்தமுள்ளஒருவாழ்க்கையைஅனுபவிக்கவும்முடியும்.முதலில்ஆஸ்த்துமாவந்துவிட்டதால்கொதிநீரில்தான்குளிக்கவேண்டும்என்றமூடநம்பிக்கையிலிருந்துவெளியேறுபவர்கள்தான்முழுநிவாரணத்திற்கானமுதல்படியில்கால்வைப்பவர்களாவர்.அதிகாலையும், மாலையும்பச்சைத்தண்ணீர்குளியலானதுபஞ்சபூதசக்திகளில்ஒன்றானநீர்சக்தியின்ஆற்றலைநமக்குள்நிறைத்துக்கொள்வதாகும்.குளித்தபிறகுதலையைஈரமில்லாமல்நன்குதுவட்டவேண்டியதுஅவசியம்.
பிறகுசூரியநமஸ்காரஆசனத்தை 10 முறையேனும்செய்யவேண்டும்.பிறகுபிராணாயமங்களைகுறைந்தது 30 நிமிடங்கள்செய்யவேண்டும்.அத்துடன்தினசரி 2 முறை 10 முதல் 15 நிமிடங்கள்தியானம்செய்யவேண்டும்.
இவைநம்சுவாசத்தைஒழுங்குபடுத்துவதோடு, ஆக்சிஜன்மூலமாகநம்உடல்பெறவேண்டியஆற்றல்களைமுழுமையாகப்பெற்றுத்தரும்.எவ்வளவுக்குஎவ்வளவுமனிதன்நிதானமாகவும், ஆழ்ந்தும்மூச்சுஇழுத்துவிடுகின்றானோஅவ்வளவுக்குஆரோக்கியமாகத்திகழ்வான்!
நம்மில்பலர்ஆழ்ந்துசுவாசிப்பதில்லை.ஒவ்வொருசுவாசத்திலும்நாம்உள்ளிழுக்கும்காற்றின்அளவுகுறைந்தது 500 மில்லியாவதுஇருக்கவேண்டும்.நல்லஆரோக்கியமானமனிதன்ஒருநிமிடத்திற்கு 15 முதல் 18 தடவைசுவாசிக்கிறான்.
ஆனால்பிராணாயாமம், யோகா, தியானம், முதலியவற்றில்பயிற்சிஉள்ளவர்களின்சுவாசத்தின்எண்ணிக்கைஇன்னும்குறைவாகஇருக்கும்.சுவாசத்தின்எண்ணிக்கைகுறையக்குறையஆயுள்அதிகரிக்கும்! நிமிடத்திற்கு 38 முறைமூச்சிழுத்துவிடும்முயலின்ஆயுள் 8 ஆண்டுகளே! ஆனால், நிமிடத்திற்கு 5 முறைமூச்சிழுக்கும்ஆமையின்ஆயுள் 155 ஆண்டுகளாகும்!
பிரணாயாமத்தால்உடலின்இயங்குசக்திஅதிகரிப்பதோடுகாற்றுமண்டலத்தின்காந்தசக்திநம்முள்கலக்கிறது.நம்மூக்கில்சுமார் 6 கோடிநுகர்நரம்புசெல்களைஆண்டவன்சிருஷ்டித்துள்ளான்.அவற்றின்ஆற்றல்அளப்பரியது.ஆனால், அவற்றைஉணராமலேயேஅனேகரின்ஆயுள்முடிந்துவிடுகிறது.
நமதுமூக்கிற்குதேவைதூயகாற்றுமட்டும்தான்! விதவிதமானவாசனைகளால்அதுவலுப்பெறுவதில்லை.எனவேவாசனைதிரவியங்கள்அவசியமில்லை.நாக்குசுவைக்காகநாளெல்லாம்அலைந்துதேடித்தின்றுசுகமடையும்நாம்மூக்கின்ஆழ்ந்தசுவாசத்திற்காகஒருநாளில்அரைமணிநேரம்செலவழிக்கக்கூடாதா?
ஆஸ்த்துமாநோயாளிகள்தூங்கும்நேரம்தவிரபடுக்கையைத்தவிர்க்கவும்! ஓய்வுஎன்பதுஉட்கார்ந்தநிலையில்அமைவதுநல்லது.காரணம்படுத்தநிலையில்எப்போதும்நம்சுவாசம்பாதிஅளவில்தான்நடக்கும்.ஆனால்உட்கார்ந்தநிலையிலோமுழுமையாகநடக்கிறது.
சரி, இனிஉணவுக்குவருவோம்.
ஆஸ்த்துமாவிற்குஅறவேதவிர்க்கவேண்டியவை;
பால், தயிர், நிலக்கடலை, கடலைமிட்டாய், பொறித்தமற்றும்வறுத்தஉணவுகள், செரிமானத்தைசிரமமாக்கும்அதீதபுரதம், கொழுப்புமற்றும்கார்போஹைட்ரேட்அதிகமுள்ளஉணவுகள், முட்டைஉள்ளிட்டமாமிசஉணவுகள், வெள்ளைச்சீனி, டால்டா, ரீபைன்ட்ஆயில், அவரைக்காய், உருளைக்கிழக்கு, பீன்ஸ், பீட்ரூட், செவ்வாழை, நாட்டுப்பழம்தவிரஅனைத்துவாழைப்பழங்களையும்தவிர்க்கவும், கருணைக்கிழங்கைதவிரஅனைத்துகிழங்குகளையும்தவிர்க்கவும். கேக், சாக்லேட், பிரட், பிஸ்கட்உள்ளிட்டஅனைத்துபேக்கரிஅயிட்டங்களையும்தவிர்க்கவும்! பழங்களில்செரிமானத்திற்குசிரமம்தரும்பலாப்பழத்தைதவிர்க்கவும், புளிப்புத்தன்மையுள்ளஆரஞ்சு, திராட்சைபழங்கள்ஆகாது.
சாப்பிடவேண்டியஉணவுகள்;
குதிரைவாலி, சாமை, காய்கறிகள், பழங்கள், இஞ்சி, மிளகு, சீரகம், சுக்கு, பூண்டு, பாகற்காய், முட்டைக்கோஸ், வாழைக்காய், பச்சைசுண்டைக்காய், வெண்டைக்காய், நெல்லிக்காய், நாட்டுகொய்யா, கொருக்காய்புள்ளி, முந்திரிப்பழம், இலந்தைப்பழம், பப்பாளி, புளிப்பில்லாதஆரஞ்சு, சாத்துகுடி, அன்னாசி, தூதுவளை, முசுமுசுக்கை, முருக்கைக்கீரை, கல்யாணமுருங்கை, கற்பூரவல்லி, துளசி, கரிசலாங்கன்னி, அகத்திக்கீரை, மணத்தக்காளி, கொத்தமல்லி, புதினா, தேன்… இவைஆஸ்த்துமாவைகாணாமலாக்கும்கண்கண்டஉணவாகியமருந்துகளாகும்!
இளஞ்சுடானதண்ணீரைஅடிக்கடிபருகலாம்.அதில்துளசிஇலைகளைபோட்டுகுடிக்கலாம்.கரிசலாங்கண்ணியைஅரைத்துதண்ணீரில்கொதிக்கவிட்டுசிறிதுபனைவெல்லம்சேர்த்துபருகுவதுநல்லபலனளிக்கும்.
அரிசிமற்றும்கோதுமைஉணவுகளைமிகஅளவோடுஎடுத்துக்கொள்ளலாம்.பொதுவாகவயிறுமுட்டஎப்போதுமேசாப்பிடக்கூடாதுஎன்பதைமனதில்ஆழமாகப்பதிவுசெய்துகொள்ளவும்.அரிசிமற்றும்கோதுமைஉணவுகளைமிகஅளவோடுஎடுத்துக்கொள்ளலாம்.பொதுவாகவயிறுமுட்டஎப்போதுமேசாப்பிடக்கூடாதுஎன்பதைமனதில்ஆழமாகப்பதிவுசெய்துகொள்ளவும்.அடிக்கடிசிறுஅளவில்உண்ணாவிரதம்இருப்பதும், ஆகமட்டும்இயற்கையானசமைக்காதஉணவுகளைசாப்பிடுவதும்மிகநல்லபலனைத்தரும்!
எலுமிச்சைப்பழத்தைஇளஞ்சூடானதண்ணீரில்பிழிந்து, சிறிதுதேன்சேர்த்துஉட்கொள்ளலாம்.லவங்கபட்டைதேநீர்சாப்பிடலாம்.மிளகுரசம், பூண்டுக்குழம்பு, சிவப்பரிசிஅவல், குதிரைவாலி, சாமையில்சோறுஅல்லதுகஞ்சிசாப்பிடலாம்!
வெற்றிலையில்காம்பைக்கிள்ளிஎறிந்துவிட்டுமிளகுத்தூள்சிறிதுசேர்த்துசாப்பிடலாம்.ஆஸ்த்துமாகாரர்கள்அனைத்துசோப்புகளையும், ஷாம்புகளையும், வாசனைதிரவியங்களையும்தவிர்த்து, நலங்குமாவு, மஞ்சள்சேர்த்தகுளியல்பொடிகளைபயன்படுத்தவேண்டும்.பொதுவாகஅனைவருக்குமேஇதுநல்லதாகும்!

ஆஸ்த்துமாவந்தால்ஆயுள்முழுக்கஅவதிக்குள்ளாவதுஎன்பதுஎழுதப்படாதவிதியாகவுள்ளது.ஆனால்ஆஸ்த்துமாவைஅறவேஒழிக்கமுடியும்என்பதுஇயற்கைவாழ்வியல்சார்ந்தஅறக்கோட்பாடுகளால்அனுபவபூர்வமாகநிரூபணமாகியுள்ளது.ஆயிரக்கணக்கானவர்கள்இதற்குஅத்தாட்சியாகும்! 

நன்றி: ரௌத்திரம்.

உணவில் உறையும் வாழ்வியல் அறம் விதவிதமான உணவுகள்; விதவிதமான வியாதிகள்!

                                                                                                            -    சாவித்திரி கண்ணன்





எண்ணிலடங்கா உணவு வகைகள்…!
பெயர் உச்சரிக்கச் சிரம்ப்படுமளவுக்கான உணவு மெனுக்கள்….!
கண்ணைக் கவர்கின்றன…, காட்சியில் அசத்துகின்றன…!
பார்வையின் வழியிலான பசி பார்ப்பவரைத் தொற்றுகிறது…!
ஆசை பிறக்கிறது… ஆசைக்கு அறிவேது? நாணமேது? என்ன ருசியோ…? சுவையோ தெரியாத நிலையில் கேட்டும் பணத்தைத் தந்து புசிக்கின்றனர் பலர்! தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஏகப்பட்ட புதுப்புதுவகை சமையல்கள் நாள்தோறும் அறிமுகப்படுத்தப்படுகிறது….
எதனோடு எதை சேர்க்கக் கூடாதோ அதை சேர்த்துச் செய்வது புதுமை என்ற பெயரில் பிரபலமாகிறது. யார் வேண்டுமானாலும் சமையல் நிபுணர்களாகிவிடுகிறார்கள் தொலைக்காட்சி புகழுக்குப் பிறகு!

ஆம்! முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமூகம் தற்போது உணவுப் பண்பாட்டில் உருக்குலைந்து வருகிறது….!

கல்யாண வீடுகளில் தங்கள் அந்தஸ்த்தை வெளிப்படுத்த பகட்டான, விதவிதமான உணவுகளை இலையில் நிரப்புகிறார்கள்! ஒரு இனிப்பு பலகாரம், ஒரு பாயாசம் என்ற நிலையெல்லாம் ஏதோ கதியற்றவர்களின் வீட்டு கல்யாணமாக கருதும் நிலை ஏற்பட்டுவருகிறது. நாலைந்து இனிப்புவகைகள் போடு பன் நடுத்தர குடும்பமென்றால் பத்து, பன்னிரெண்டு இனுப்புவகைகளை இலைபரப்பி பணக்காரர்கள் தங்கள் பகட்டை வெளிப்படுத்துகிறார்கள்.
இத்துடன் நான்கைந்து பலகார வகைகள், நாலைந்து சாப்பாடுவகைகள், மூன்று நான்கு அப்பளம், சிப்ஸ் வகைகள், வடை, கட்லெட்டு வகையறாக்கள் இதற்கு மேலும் வெள்ளைச்சோறு, ரசம், கூட்டு, பொறியல்… இத்யாதிகள் இத்துடன் முடிந்தால், கல்யாண வீட்டாரின் கௌரவம் முழுமை பெறாது என நினைத்தோ என்னவோ மீண்டும் ஒரு பக்கம் பழக்கலவை கிண்ணங்கள், ஐஸ்கிரீம் கிண்ணங்கள், பீடா, வெத்தலை வகையறாக்கள்… என அமர்களம் தான்!

இத்தனை வகைகளை உண்டால் ஆரோக்கியம் அதோகதி தான்! ஒரு வகையில் ஆடம்பர திருமணவிருந்துகளை நான் வயிற்றின் மீது செலுத்தப்படும் வன்முறையாகத்தான் நான் பாவிக்கிறேன்.

மகாபாரதத்தில் கௌரவர்களின் மத்தியில் மாட்டிக்கொண்டு சுற்றிலும் அம்புகளின் தாக்குதலை எதிர்கொண்ட அபிமன்யூவைப் போல நம் ஜீரண உறுப்புகளை இந்த கல்யாண விருந்துகளின் அயிட்டங்கள் தாக்கி நிலைகுலைய வைக்கின்றன!.

இது மிகைப்படுத்தப்பட்ட உவமையல்ல…!
இத்தகைய விருந்துகளால் நமது உணவுப்பாதையே ஸ்தம்பிக்கிறது. சிறுகுடல் சின்னாபின்னப்பட…
பெருங்குடல் பிதுங்கி திணற…,
கல்லீரல் கதிகலங்க….,
மண்ணீரல் மன்றாட…,
எதுக்களிப்பால் நெஞ்சு நிலைதடுமாற…,
கழிவுகளின் தேக்கத்தால் உடல் சூடேற…,
மொத்தத்தில் ஆரோக்கியத்தின் மீதான பலமான அடியாக பல திருமண விருஃந்துகள் சாப்பிடுபவர்களை திக்குமுக்காட வைக்கிறது. பொதுவாக உண்ணும் உணவு உடலுக்கு புத்துணர்ச்சி தர வேண்டும் ஆனால் அதீத உணவோ நம்மிடம் இருந்து கொண்டிருக்கும் ஆற்றலை, இழக்கும்படி செய்து விடுகிறது.

பலமான விருந்தின் இறுதியில் ஐஸ்கிரீம் சாப்பிடும்போது இந்த ஐஸ்கிரிமானது முன் உண்ட அனைத்து உணவுகளையும் செரிமானமாகாமல் தடுக்கும் பணியை செய்கிறது. ஏற்கெனவே அதீத உணவு உள்ளே போயுள்ளதால் சிரமப்படும் ஜீரண உறுப்புகளை மேலும் செயலிழக்க செய்யும் இந்த ஐஸ்கிரீமை ஏன் விருந்தின் இறுதியில் சேர்க்கிறார்கள்? இது எவ்வளவு விவஸ்தைகெட்ட அணுகுமுறை…! இந்த உச்சகட்ட முட்டாள்தனத்தை கறுப்புபணத்தை அழிப்பதற்கென்றே கல்யாணவிருந்தை நடத்தும் கொழுத்த பணக்காரர்கள் சிலர்தான் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும்.

புளிச்ச ஏப்பக்காரர்கள் சிலரின் புரையோடிய உணவு கலாச்சாரம் சமூக கலாச்சாரமாக மாறிவருவது சாபக்கேடு! இப்படிப்பட்ட ஆடம்பரமான திருமணவிருந்து உணவு கலாச்சாரம் இன்று நடுத்தரவர்க்கத்தினரையும், எளிய மக்களையும் கூட தொற்றிக்கொண்டு வருகிறது. தங்கள் வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் போட்டாலும் போதாது என்று பெரும் கடன்பட்டும் திருமணவிருந்து நடத்துகிறார்கள். திருமணவிருந்து, மஞ்சள் நீராட்டுவிழா, பிறந்தநாள் விழா… என்று நாள்தோறும் ஏகதடபுடலாக நடந்தேறும் உணவு விருந்துகள் அதை நடத்துபவர்களுக்கும் நஷ்டத்தையும், கஷ்டத்தையும் தருவதோடு, வந்து சாப்பிட்டுச் செல்பவர்களின் ஆரோக்கியத்திற்கும் உலைவைக்கிறது. தானும் இது போல் தன் வீட்டு விசேஷங்களை நடத்த வேண்டும் என்ற விஷத்தையும் விதைக்கிறது.

இத்துடன் ஒவ்வொரு விஷேஷத்திலும் விரயமாகும் உணவுப் பலகாரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒவ்வொரு இலையிலும் 20 முதல் 40% உணவுகள் விரயமென்றால், எண்ணிக்கை தெரியாமல் சமைப்பதன் மூலம் சுமார் 30 முதல் 50% உணவுகள் விரயமாகிறது. உணவின் மீது இந்த சமூகத்திற்கு இருக்கும் அலட்சியத்திற்கு இந்த விருந்துகளே அத்தாட்சி.

‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’
அளவுக்கு மீறி உட்கொண்ட உணவு மாத்திரம் நஞ்சாவதில்லை, உட்கொண்ட அத்துனை உணவுமே நஞ்சாகிவிடும். உடலும் நலிவடையும். இயற்கை உணவை மட்டுமே உட்கொண்டபோதிலுமே கூட ஒரே நேரத்தில் பற்பல காய்கறிகளையோ, பழங்களையோ உட்கொள்ளக் கூடாது.

ஏனெனில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தன்மை இருக்கும். செரிமானத்திறன் வேறுபடும். இதுமட்டுமின்றி ஒன்றுடன் ஒன்று சேர முடியாத காய்கறிகளும் உள்ளன.
உதாரணத்திற்கு முள்ளங்கி, முட்டைகோஸ், காளிளெவர், வாழைத்தண்டு போன்று காய்கறிகளை உட்கொள்ளும் போது மற்ற காய்கறிகளை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் மற்ற காய்கறிகளிலுள்ள அயோடின் சத்தை உடலில் சேராத வண்ணம் தடுத்துவிடும் இயல்பு இக்காய்கறிகளுக்குள்ளது.

இது மட்டுமின்றி காய்கறிகலவையாக சமைக்கும் போது உடனே வெந்துவிடக் கூடிய காய்களையும், தாமதமாக வேகும் காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்து சமைக்கக் கூடாது. அப்படி சமைத்தால் சீக்கிரமாக வெந்த காய்கறிகளில் உள்ள தாது உப்புகள் எனப்படும் மினரல்ஸ் அதீத சூட்டில் அழிந்துபோவதோடு, அமிலத்தன்மை கொண்டதாக மாறிவிடும். குறிப்பாக பூரணிக்காய், வெள்ளரி, வெண்டை, முள்ளங்கி, காளிபிளவர், வாழைப்பூ போன்றவற்றை அடுப்பில் அதிக நேரம் சூடேற்றக் கூடாது.

தற்போது உணவகங்களில் காளிபிளவரை சிக்கன் 65 போல மசாலா தடவி பொறித்து தருகிறார்கள். இது காளிபிளவரிலுள்ள சத்துகளை காலியாக்கிவிடும். பொதுவாக நமது தமிழ் உணவு கலாச்சாரத்தில் பொறிப்பது, வறுப்பது என்பது கிடையாது. ஆவியில் வேகவைப்பது தான் நம் மரபார்ந்த உணவு கலாச்சாரமாகும்.

நம் உணவு கலாச்சாரத்தின் ஒவ்வொரு அணுகுமுறையும் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டதாகும்!  ஆவியில் வெந்த உணவு செரிமாணத்திற்கு துணைபுரியும்! வறுத்த உணவும், பொறித்த உணவும் செரிமாணத்தை சிரமத்திற்குள்ளாக்கும். அருமையாக ஆவியில் வெந்தெடுத்த உணவை சட்டியில் போட்டு வதைத்து, வறுத்து ‘பிரைடுரைஸ்’ எனப்பெயரிட்டு தக்காளி சாஸை ஊற்றிக்கொடுப்பது நவீனமல்ல, அறிவீனம். இதற்கு பிரைடுரைஸ் எனப்பெயரிடுவதற்கு மாறாக ‘பிராடுரைஸ்’ எனப் பெயரிடுவது பொருத்தமாகும். அதுவும் ரசாயனக் கலப்பிலான ரீபைண்ட் ஆயில், பாமாயில், டால்டா போன்றவை கொண்டு உருவாக்கப்படும் உணவுகள் நம் உடலுக்குள் சென்ற பின்பு முழுவதுமாக செரித்து பயன்தருவதுமில்லை, கழிவுகளாக முற்றிலும் வெளியேறிவிடுவதுமில்லை, இவை கழிவுகளாகி ரத்த நானங்களில் படிகிறது. இதனால் ரத்தநாளங்கள் நெகிழ்வு தன்மை மறைந்து விரைப்பு பெற்றுவிடுகின்றன. ரத்தம் அடர்த்தியாகிவிடுகிறது. ரத்த ஓட்டம் தடைபடுகிறது. உடலினுள் ரத்த ஓட்டத்திற்கு துணைபுரியும் வியான வாயு வீரியம் இழக்கிறது. ஜீரணத்திற்கு ஆதாரமான சமான வாயு சஞ்சாரம் செய்ய வழியின்றி சங்கடத்திற்குள்ளாகிறது. இதன் விளைவாக கைகால் வலி, கழுத்துவலி, மூட்டுவலி என உடல் பிரச்சினைக்குள்ளாகிறது.

எனவே அடிப்படையில் அறம் சார்ந்த உணவு கலாச்சாரமாக திகழ்ந்த தமிழ் சமூகம் அறம் கொன்ற உணவு கலாச்சாரத்திற்கு  வேகமாக நகர்ந்து கொண்டிருப்பது வேதனையாகவும், வியப்பாகவும் உள்ளது.

‘’பசிகொல்லா விரதமே அறத்தின் முதல் படி நிலை’’ எனக் கருதி வாழ்ந்த தமிழ் சமூகம் பசிகொன்று புசிப்பதில் பேராசைக் கொண்டே சமூகமாக மாறுவது தடுக்கப்பட்டாக வேண்டும்.

நன்றி: ரௌத்திரம், ஏப்ரல் 2016



இதய நோயை தீர்க்கும் இன்றியமையாத உணவுகள்!


                                                                   -    ‘தேவாமிர்தம்’ சாவித்திரி கண்ணன்

எப்போது வருமென்று தெரியாது
சட்டென்று வரும், பொட்டென்று உயிர்பிரியும்
‘’நேற்றுவரை நல்லாயிருந்தாரே…’’
‘’ஒரு மணி நேரம் முன்புகூட சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாரே…’’
என்றெல்லாம் நாம் பேசிப்பேசி அயர்வோம்!

ஆம் நம் உடலின் மிக முக்கிய உறுப்பான இதயம் நின்றுவிட்டால் உடனே மரணம் தான்!

இன்றைய தினம் நமது சீர்கெட்ட உணவு கலாச்சாரத்தால் உணர்வுகளை சீராக கையாளததாலும் இதய பாதிப்பு இல்லாதவர்களை காண்பதே அரிது தான்!

கோடிக்கணக்கானவர்களை இந்த நோய் பாதித்துள்ளபோதிலும் சில லட்சக் கணக்கானவர்களுக்கே மருந்துவம் பெறும் வாய்ப்புள்ளது.  ஏழை, எளிய மக்களில் பெரும்பாலோருக்கு இதயநோய்க்கான மருத்துவ செலவுகளை சமாளிப்பது இயலாததாகும்.

தற்போது நவீன மருத்துவத்தில் இதய அடைப்பு ஏற்பட்டுள்ளவர்களை காப்பாற்ற பல நுட்பமான அணுகுமுறைகளும், கருவிகளும் வந்துவிட்டன! எனினும் இந்தியாவில் ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர் இதயபாதிப்பால் மரணிக்கிறார்கள் என்பது அரசு தரும் புள்ளிவிபரம். ஆனால் இந்த எண்ணிக்கை இதைக் காட்டிலும் கூடுதலாக இருக்கவே வாய்ப்புள்ளது.

பொதுபுத்தியில் உள்ளது போல் இதயபாதிப்பு என்பது சடாரென வருவதில்லை. அது பாதிக்கப்பட்டுவருவதை நமக்கு பல வழிகளிலும் உணர்த்திய பின்பே வருகிறது. எனினும் இருப்பது போல் இருந்து இறந்தவர்களே அநேகம் இதை 1500 ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் பாடிவைத்துள்ளார்!
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடியாளோடு மந்தணங் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப்படுத்தார் கிடந்தொழிந்தாரே!

இப்படி உடனே மரணம் சம்பவிக்கும் என்றாலும் கூட நமக்கு பல முன்எச்சரிக்கைகளை அது தரத்தான் செய்கிறது.

அவ்வப்போது ஏற்படும் சோர்வு, மயக்கம், படபடப்பு, மூச்சிரைப்பு, தூக்கமின்மை, இதன் தொடர்சியாக வந்துபோகும் இதயவலியை அலட்சியப்படுத்தும்போது தான் பெரிய தாக்குதலை சந்திக்க வேண்டியாகிறது.

இயற்கை தத்துவப்படி நம் இதயம் என்பது பஞ்சபூதங்களில் நெருப்போடு தொடர்புடையது. இதயபாதிப்பு பலருக்கு நாக்கில் அடிக்கடி வரும் புண் மூலமாகவும் வெளிப்படும். இதயபாதிப்பு சிலருக்கு முழங்கால் வலியை தரும். இதய பாதிப்பு கல்லீரலிலும் பிரதிபலிக்கும், நுரையீரலையும் பாதிக்கும். இதயபாதிப்பால் ரத்த அழுத்தங்களும், சித்த தடுமாற்றங்களும் இணைந்தே ஏற்படும்! எனவே அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் சுதாரித்துக் கொண்டு உணவு ஒழுக்கம் மூலமாகவும், உணர்வுகளை ஒழுங்கு படுத்துவதன் மூலமாகவும் நாம் நலம் பெறலாம்.

இதயத்திற்கு பாதிப்பு தரும் உணவுகள்:

டால்டா இது ரத்தத்தில் கரையாமல் ரத்த நாளங்களில் நிரந்தரமாக படிந்து அடைப்பு ஏற்படுத்தும். மைதா – இதில் நார்சத்தே இல்லாததால் உடலில் கழிவாகத் தேங்கும். இதிலுள்ள ஹாலோஜன் காம்பவுண்டு நம் கணையத்திலுள்ள பீட்டா செல்களை அழித்துவிடும். செயற்கையாக அயோடின் சேர்க்கப்பட்ட நைஸ் உப்பு நமக்கு ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். உணவில் அதீதமாக சேர்க்கப்படும் புளி நெஞ்செரிச்சல் தரும். ரத்தத்தை அமிலத்தன்மையாக்கும். இதய பாதிப்புள்ளவர்கள் கல் உப்பு, இந்துப்பு, கொடம்புளி ஆகியவற்றை உணவில் சேர்க்கலாம்.

இதயபாதிப்புள்ளவர்களுக்கு கொழுப்புச் சத்து ஆகாது என காரணம் கூறி ரீபைண்டு ஆயில்களை பயன்படுத்துகிறார்கள். உண்மையில் ரீபைண்டு ஆயில் தான் ஆபத்தானது. ஏனெனில், ரீபைண்டு செய்வதற்காக சோடியம் ஹைடிராக்சைடு, அடர்கந்தக அமிலம், பிளீச்சிங் பவுடர்… போன்ற ஏழு வேதிப்பொருள்களை சேர்த்து கொதிக்க வைக்கிறார்கள். இதனால் தாவர எண்ணையில் உள்ள உடலுக்கு நன்மை செய்யும் தாதுக்கள், விட்டமின்கள் அழிந்துவிடுவதோடு அதீத வெப்பத்தால் எண்ணெய் நச்சுத்தன்மை கொண்டதாகிவிடுகிறது. எனவே, செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய்தான் இதயத்திற்கு பாதிப்பில்லாதது அன்றி பிராண்டட் எண்ணெய்கள் அனைத்துமே தவிர்க்கவேண்டியதே!

இதயநோயாளிகள் நிலக்கடலை, முந்திரி, கடலைஎண்ணெய், தேங்காய் எண்ணெய், தேங்காயில் செய்யப்பட்ட சமையல், எண்ணெயில் பொறித்த உணவுகள், மாமிசம் முட்டை, ஐஸ்கிரீம், பாட்டிலில் அடைத்த குளிர்பானங்கள்.. போன்றவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மது, புகையிலை, பாக்கு அறவே கூடாது. அத்துடன் எப்போதுமே அதீத உணவை தவிர்த்து மிக அளவுடன் மட்டுமே உண்ண வேண்டும்.

வெள்ளைப்பூண்டு, இஞ்சி, கருஞ்சீரகம், துளசி, தேன், சின்னவெங்காயம் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்ப்பது இதய பாதுகாப்புக்கு உகந்ததாகும்.

ஆவாரம்பூ தேனீர், அருகம்புல்சாறு தினசரி பருக வேண்டும். பால்கலந்த தேநீரைத் தவிர்த்து பச்சை தேயிலை தேனீர் அருந்தலாம். மண்பானையில் துளசி இலையைப் போட்டுவைத்து அந்தத் தண்ணீரை எடுத்துப் பருகலாம். இளநீர் இதயத்திற்கு இதமானது. தினசரி இரவில் ஐந்து சின்ன வெங்காயத்தை மோரில் ஊறப்போட்டு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரும் யாருக்குமே ஆயுள்முழுக்க இதயபாதிப்பு ஏற்படாது.

தினசரி இரவு படுக்கும் முன்பு பாலோடு வெள்ளைபூண்டு இரண்டு பத்தைகளை சேர்த்து காய்ச்சி சாப்பிடலாம். பூண்டு குழம்பு, பூண்டு ரசம் இப்படியாக பூண்டை பல விதங்களில் சாப்பிட்டால் இதய அடைப்பு எப்போதும் வராது. தக்காளியை சமைக்காமல் துண்டாக நறுக்கியோ, ஜூஸாகவோ உட்கொள்ளலாம்.  முட்டைகோஸ், வெள்ளை பூசணி, அகத்திக்கீரை, வெண்டைக்காய், சுரக்காய் புதினா, எலுமிச்சை, நெல்லிக்காய், முள்ளங்கி, மணத்தக்காளி, காளான் போன்ற காய்கறிகள், கீரைகள் தினசரி உணவில் மாறி மாறி இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

பழங்களில் அத்திப்பழம், மாதுளை, திராட்சை, கொய்யா பழம், விளாம்பழம் பேரிக்காய், ஆப்பிள் ஆகியவை இதயத்திற்கு பலம் தரும். பேரிச்சம் பழத்தை முதல் நாள் இரவில் தண்ணீரில் ஊறப்போட்டு அடுத்தநாள் காலை கொட்டையை எடுத்துவிட்டு மிக்சியில் அடித்து கூழாக்கி சாப்பிடலாம்! இவை அனைத்தையும் கடைபிடித்தாலும், உணர்ச்சிகளை சரியாக கையாளத் தெரியாவிட்டால் பயன் இல்லை.

யோகா, பிராணாயாமம், ஆழ்நிலை தியானம், போன்றவை உணர்ச்சிகளை கையாள பேருதவியாக இருப்பதோடு இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். இதயநோயாளிகள் உடல்பருமனாகாமல் ஏதேனும் சிறு, சிறு வேலைகளை செய்வது, நடைபயிற்சி போவது ஆகியவற்றோடு மனதில் கவலைக்கோ, கோபத்திற்கோ சிறிதும் இடம் தராமல் மகிழ்ச்சியாக இருந்தே தீரவேண்டும்.

சில துரோகங்களும், ஏமாற்றங்களும் சிலரை இதயநோயாளிகளாக்கி விடுவதுண்டு. அதனால் ஏப்படிப்பட்ட துரோகத்தையும் மன்னிக்கவும், எப்பேர்பட்ட இழப்பென்றாலும் மறக்கவும் வேண்டுவது ஆரோக்கியமாக வாழ கடைபிடித்தே தீரவேண்டிய நிர்பந்தமாகும்.

நெஞ்சம் நிறைய அன்பை நிறைத்து
முகம் மலர அன்பைப் பொழிந்து
வாய் மணக்க அன்பைச் சொரிந்து
வாழ்வாரோருக் கென்றும் நோயில்லை
துன்பமில்லை, துயரில்லை, துவழுதலில்லை
ஏனெனில் பாரதி வாக்கின்படி
அன்புடையார் இன்புற்று இருத்தல் இயல்பு


காசநோயை கருவறுப்போம்



மூட்டுவலியிலிருந்து முற்றிலும் விடுபட




புற்றுநோயை புறந்தள்வோம்




உணவில் உறையும் வாழ்வியல் அறம்

காற்றும் ஓர் உணவே



எந்தெந்த உணவுகள் நன்மை தரும்
எந்தெந்த உணவுகள் தீமை தரும்
என்ற அடிப்படைப் புரிதல்கள் அவசியம்!
அத்துடன் அவரவர் உடல்வாகுக்கு ஏற்ப நன்மை எனச் சொல்லப்படுபவை தீமையாகிப் போகும்! தீமை என கருதத்தக்கவை நன்மையாகிவிடும் என்ற யதார்த்தத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

வேர்கடலை மிக நல்லுணவு. புரதம் அதிகமுள்ளது சந்தேகமேயில்லை ஆனால் பித்த உடம்புக்காரர்கள் அறவே தவிர்க்க வேண்டியுள்ளதே! தினையும், கேழ்வரகும் ஆகச்சிறப்பான ஆகாரங்கள்; ஆனால், சூடு உடம்பு கொண்டவர்களுக்கு நல்லதல்ல! இதெல்லாம் அவரவர் அனுபவம் சார்ந்து, உடல் உணர்த்தும் உண்மைகளின் வழியே தெளிந்து பின்பற்ற வேண்டும். சிலபேர் புத்தகங்கள், அல்லது இணையதளத்தில் வழியே அளப்பரிய தகவல்களைப் படித்து நல்லநல்ல சத்தான உணவுகளை சாப்பிடுகிறேன் என அதீத உணவெடுத்துக் கொண்டு அவஸ்த்தைக்கு ஆளாகிறார்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே!

இவர்கள் எந்நாளும் நோய்களிலிருந்து மீளவே முடியாமல் நிரந்தர நோயாளிகளாயிருப்பார்கள். வெளியிலிருந்து எவ்வளவு அரிய தகவல்கள் கிடைத்தாலும் நம் உடலும், உள் உணர்வும் கூறவரும் உண்மைகளுக்கு மட்டுமே செவி சாய்க்க வேண்டும்.  தற்போது ‘பேலியோ டயட்’ என்ற பெயரிலான ஒரு உணவு முறையை கடைப்பிடிப்போரின் கூட்டம் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இதைத் தமிழில் ‘ஆதிமனிதன் உணவு முறை’ என்றழைக்கிறார்கள் ‘’மாமிசம் மற்றும் புரதம் நிறைந்த கொட்டைபருப்புகள் தான் மனிதனின் பிரதான உணவு’’ என்பது இந்த தரப்பினரின் நம்பிக்கை! அந்த நம்பிக்கை பலருக்கு கைகொடுத்துள்ளது. நோய்களை வெல்ல உதவியுள்ளது. விஞ்ஞான பூர்வமாக நிருபித்துள்ளனர். ஆனால், இந்த விதியை அனைவருக்கும் பொதுவாக்கிவிடவே முடியாது. உணவுத்துறையில் நாளுக்குநாள் புதியபுதிய உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.  ஒவ்வொன்றுக்கும் ஒரு வியாக்யானம் தரப்படுகிறது… இதை உண்டால் இந்தப் பலன், அதை உண்டால் அந்தப் பலன்…! பார்ப்பதையெல்லாம், கேட்பதையெல்லாம் சாப்பிட்டு பார்க்கும் ஆர்வமும், தேடலும் அதிகமாகவே காணப்படுகிறது. உடல்கெட்டு, நோய் முற்றி, நாக்குமரத்து… எந்த உணவுமே உட்கொள்ளமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட பிறகுதான் சிலருக்கு ஞானம் பிறக்கிறது!

மாறுபாடு இல்லா உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு
என்றார் வள்ளுவர்.

அறிமுகமில்லாத உணவை, குறிப்பாக நம் மரபில் இல்லாத உணவை தயக்கமில்லாமல் மறுத்துவிட வேண்டும். பார்வைபசிக்கு ஆட்பட்டோ, பகட்டுக்காகவோ வேறுபட்ட உணவுகலாச்சாரத்தில் காலடிவைப்பது வேரறுமட்ட நிலைக்கு நம் உடலையும், உள்ளத்தையும் வைத்துவிடும்.

சமையல் கலையில் நவீனபகட்டுத்தனம், நுகர்வு கலாச்சாரத்தை அதிகரித்து, நோய்களை பெருக்கியவண்ணமுள்ளது.
‘’உணவு ஒழுக்கத்தால் உணர்ச்சிகள் கட்டுக்குள் வரும்
உணவின் தூய்மை அறிவை மெருகேற்றும்
இதனால் நினைவு தூய்மையாகும்
தூய நினைவுகள் துன்பங்களிலிருந்து விடுதலை தரும்
வீடுபேறும், மோட்ச நிலையும் கைகூடும்’’
என்பது சாந்தியோக உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது.

‘’மாறுபட்ட உணவை தவிர்ப்பதும்
பசியில்லா நிலையில் உணவை மறுப்பதும்
நூறு வைத்தியர்களால் பெறமுடியாத நன்மையைத் தரும்’’
என்பது நம் ஆன்றோர்களின் வாக்காகும்.

உணவு ஒழுக்கம் மட்டும் போதுமானதல்ல, உள்ளதுதூய்மை இல்லாத நிலையில் உட்கொள்ளப்டும் அமிர்தம் கூட விஷமாகிவிடும்!
இதற்கு நல்லதொரு உதாரணத்தை முத்தமிழ் அறிஞரும், உணவியல் நிபுணருமான கி.ஆ.பெ. விசுவநாதம் கூறுகிறார்.
‘’தாய்பாலை விடவும் உன்னதமான, உயர்வான உணவு, குழந்தைகளுக்கு கிடையாது! ஆனால் ஒரு பெண் தன் கணவனிடம் சல்லாபித்திருக்கும் நிலையில் இடையே வெளியேறியோ, அல்லது சல்லாபித்து முடித்த சிறிது நேரத்திலோ குழந்தைக்கு பாலூட்ட நேர்ந்தால் அப்போது அந்த தாய்பால் குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். குழந்தைக்கு இதனால் மந்தபேதி ஏற்படும். இதிலிருந்து குழந்தையை மீட்க படாதபாடு படவேண்டியதாகிவிடும்’’. என எச்சரித்துள்ளார். ஆக, ஏற்கனவே நாம் வலியுறுத்திய படி உணவை பரிமாறுபவர்க்கும், உணவை ஏற்பவருக்கும் உடல்தூய்மை, உள்ளத்தூய்மை இன்றியமையாததாகும்.

அடுத்ததாக நம் உடலுக்கு வாயால் நுகரப்படும் திட உணவு, திரவ உணவை விடவும் முக்கியமான வேறொரு உணவு உள்ளது. அது நம் நாசியால் நுகர்ந்து நுரையீரலுக்கு உணவாகும் காற்றாகும்.

நம்மில் எத்தனைபேருக்கு நுரையீரலுக்கு தூய ஆரோக்கியமான காற்றுணவை தரும் வாய்ப்புள்ளது…?
நுரையீரலால் பெறப்படும் காற்றுணவே நம் உடலுக்கு மிகப் பெரும் பலத்தைத் தருகிறது! மூளையை சுறுசுறுப்பாக்குகிறது! சித்தத்தை தெளிவாக வைக்கிறது! மலைபோன்ற உறுதியை மனத்திற்குத் தருகிறது ! தன்னைத்தான்றியும் நுண் உணர்வை மேம்படுத்துகிறது. நம் உடலுக்கும், உள்ளத்திற்கும் ஓய்வில்லாமல் உழைக்கும் அளப்பரிய ஆற்றலை அள்ளி வழங்குகிறது. ஆனால் இவ்வளவு பெருமைவாய்ந்த, செலவில்லாத காற்றுணவை நம்மில் எத்தனைபேர் முறையாகவும், முழுமையாகவும் உட்கொள்கிறோம்?

நம்மில் பலர் நம் நுரையீரலின் மொத்த கொள்ளவுக்கு மூன்றில் ஒரு பங்கு காற்றையே சுவாசிக்கிறோம். அதாவது மேலெழுந்தவாரியாகத் தான் சுவாசிக்கிறோம். ஆனால் நாம் எந்த அளவுக்கு அதிகமாக காற்றை நுகர்ந்து நுரையீரலுக்கு பரிமாறுகிறோமோ அந்த அளவுக்கு பலம் பெறுவோம் ஆழ்ந்தும், நிதானமாகவும் சுவாசிப்பவனின் ஆயுள் அதிகரிக்கிறது. இது மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரினங்களுக்கும் பொருந்தும் கோட்பாடாகும். நிமிடத்திற்கு 38 முறை மூச்சிழுத்து விடும் முயலின் ஆயுள்காலம் 8 ஆண்டுகளே! ஆனால், நிமிடத்திற்கு 5 முறை மட்டுமே சுவாசிக்கும் ஆமையின் ஆயுட்காலம் 150 ஆண்டுகளுக்கும் மேலாகும்! நீர்வாழ் விலங்கினமான ஆமையை தெய்வாம்சம் பொருந்தியதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆமையின் நீர் வழித்தடத்தை பின்பற்றியே பல நாடுகளை கண்டறிவார்கள் ஆராய்ச்சியாளர்கள். சராசரி மனிதன் நிமிடத்திற்கு 18 முறை சுவாசிக்கிறான். மனிதன் நடக்கும்போது வேகத்திற்கேற்ப சுவாசம் 50% அதிகரிக்கும். படுத்தாலோ சுவாம் பாதியளவாகிவிடும். ஆகவே ஒருவர் படுக்கும் நேரத்தை எவ்வளவுக்கெவ்வளவு குறைக்கிறாரோ அந்த அளவுக்கு ஆயுளும் ஆரோக்கியமும் பெறுவார். நிமிடத்திற்கு 9 முறை சுவாசிப்பவர் ஓங்கிய ஆயுள் பெறுவார் அதனால்தான் இன்றும் கூட வள்ளலார் வழியில் மரணமில்லா பெருவாழ்வுக்கு முயற்சிப்பவர்கள் தூக்கத்தை கணிசமாகவோ அல்லது முற்றாகவோ துறந்துவிடுகிறார்கள். (படுத்த படுக்கையாய் இருக்கும் நோயாளியும் கூட ஓரளவு உடல்தேறியவுடன் முதலில் உட்கார்ந்து ஓய்வெடுக்கவும், பிறகு உலாத்தியபடியே உடலைத் தேற்றவும் வேண்டும்.)  ஆன்மிகத்தில் இருப்பவர்களின் முதல்படியே வாயால் உட்கொள்ளும் உணவுகளைக் குறைத்து நாசியால் நுகரும் காற்றின் அளவை அதிகப்படுத்துவதுதான். சராசரியாக நாம் ஒருமுறை சுவாசத்தில் 500 மில்லி காற்றை உள் இழுக்கிறோம் என்றால் ஆன்மீகத்தில் இருப்பவர்கள் இதைக்காட்டிலும் ஒரு மடங்கு கூடுதலாக மூச்சிழுப்பார்கள்!

நம் நுரையிரலில் காற்றையடைத்து வெளியேற்றும் கலை ஒன்று தெரிந்தால் போதும் கடையி காலம் வரை காலனை காலால் மிதிக்கும் பேராற்றலோடு திகழலாம்!
சித்தர்களும், யோகிகளும், தவஞானிகளும் இந்தக் கலையை கைவசப்படுத்தியவர்களே!

உடம்பை பேண முடியாதவர்களால் அறிவில் உயர்ந்தோங்க முடியாது. இதனால்தான் திருமூலர்,
உடம்பால் அழியில், உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
என்றெழுதினார்.
நம்மிள் பெரும்பாலோர் உடம்பினை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை உடம்பு விஷயத்தில் அவ்வளவு அலட்சியமாக உள்ளனர். அப்படி அலட்சியப்படுத்தியவர்கள் எவ்வளவு பெரிய பதவி, அந்தஸ்த்து, செல்வம், பெருமை பெற்றிருந்தாலும் அது எதனாலும் அவர்கள் இழந்த உடல் நலனை மீட்டெடுக்கவே முடியாது.

நம் உடல் என்பது மிக உன்னதமானது. அண்ட சராசரங்களின் அம்சமும் இந்த எண்ஜான் உடம்பிற்குள் உள்ளது. இயற்கையின் பேராற்றல் நிறைந்த பொக்கிஷமே இவ்வுடல். இவ்வுடலை பேண உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருத்தல் அவசியம். உடல் நலத்திற்கான நிபந்தனையாகவே உள்ளத்தூய்மையை அறிந்துகொள்வோம்.
கனிகளை தின்று பிணிகளைக் கொன்று
காய்களை செறித்து நோய்களைத் தவிர்த்து
இயற்கையை ஏற்று இசைபட வாழ்ந்து
மூச்சினை உண்டு முதுமையை வென்று
தொண்டெனப்படுவதே தொழிலாய்க் கொண்டு
வண்டெனப் பறப்பதே வாழ்விய்யல் அறமாம்.

இயற்கையின் பேராற்றலும், மனித உடலும் வேறுவேற்றல்ல, இயற்கையின் பேராற்றலே இணையற்ற மருத்துவராய் நம் உடலில் வீற்றிருந்து நம்மை இயக்கிக் கொண்டுள்ளது….

உணவுக்கு மிஞ்சிய மாத்திரை மருந்துகள் இல்லை




தீராத நோய்களையும் தீர்க்கும் உண்ணாவிரதம்




அசைவ உணவால் ஆரோக்கியம் சிறக்குமா?