Tuesday, November 12, 2013

உலகதமிழர்கள் ஒன்றுபடவேண்டும்.

                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

உலகின் முக்கிய நாடுகளிலெல்லாம் புலம்பெயர்ந்து தங்கள் உழைப்பாலும், அறிவாற்றாலாலும் தங்களுக்கென முக்கிய இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர் நம் தமிழர்கள்.

சென்னை வந்துள்ள யுனேஸ்கோவின் முன்னாள் இயக்குநர் ஆறுமுகம் பராசுராமன் ஒரு இனிய செய்தியை, அரிய முயற்சியை தெரிவித்துள்ளார். உலகில் 52நாடுகளில் பரந்து விரிந்துள்ள தமிழர்களை ஒரே குடையின் கீழ் திரட்டி மாநாடு ஒன்றை ஜீலை யில் மொரிசியசில் நடத்த இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

உலகில் எங்கு சென்று வாழ்ந்தாலும், பல தலைமுறைகளைக் கடந்தாலும் தாய்மண்ணோடும், தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தோடும், மரபுவழியாகப் பின்பற்றி வரும் மகத்தோடும் தமிழர்களுக்குள்ள தொடர்புகள் இன்னும் இற்றுப்போகாமல் இருக்கத்தான் ணெய்கின்றது. அந்த இணைப்பை இன்னும் வலுப்படுத்தவும், வளப்படுத்தவும் இப்படி ஒரு மாநாடு காலத்தின் கட்டாயமாகிறது.

இந்த மாநாடு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் இணக்கமான, இசைவான வரவேற்பும், ஒத்துழைப்பும் கிடைக்கும் என நம்பப்டுகிறது.

ஏற்கெனனவே புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் கல்விகற்க பாடப்புத்தகங்களை இலவசமாக கேட்குமளவு தமிழக அரசு தந்து கொண்டு உள்ளது. ஆனால் இது மட்டுமே போதுமானதல்ல.

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தருவதற்கும், பெறுவதற்குமான பரஸ்பர தேவைகள், அவசியங்கள் தாய்தமிழகத்திற்கு நிறையவே உள்ளன.

நமது தமிழர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தங்கள் கலாணியாதிக்க நாடுகளான ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை, தெற்காப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு 100, 150 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு செல்லப்பட்டன்ர். இந்த நாடுகளில் மலைகளைக் குடைந்து சாலைகள், இருப்புபாதைகள் அமைக்கவும், தேயிலை தோட்டங்களில் வேலைபார்க்கவும் சென்ற தமிழர்கள் தங்கள் உழைப்பால் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி உள்ளனர்.

இதற்கு அடுத்த கட்டத்தில் படித்து பட்டம் பெற்ற தமிழர்கள் பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மன், பிரான்ஸ்... போன்ற நாடுகளுக்குச் சென்றனர். இலங்கைத் தமிழர்களும் உலகெங்கும் கணிசமாக புலம்பெயர்ந்துள்ளனர். இன்று இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ்,... ஆகிய நாடுகளில் தமிழ் ஆட்சி முழியாகவும், தமிழர்கள் ஆட்சியில் பங்கு பெற்றுள்ளவர்களாகவும் உள்ளனர்.


உலகில் புலம் பெயர்ந்துள்ள தமிழர்களின் எண்ணிக்கையும் நாடுகளும்:

மலேசியா - 21லட்சம்,
சிங்கப்பூர் - 2லட்சம்,
மியான்மர் - 2லட்சம்
மொரிசியஸ் - 1,50,000
பிரிட்டன் -1,60,000
பீஜீ - 1,10,000,
தெற்கு ஆப்பிரிக்கா, 6,00000,
கன்னடா - 3லட்சம்,
பிரான்ஸ் 5லட்சம்,
அமெரிக்கா - 4,40,000,
நெதர்லேண்ட் - 2லட்சம்,
அரபுநாடுகள் 1லட்சம்,
இந்தோனேசியா 50,000,
ஜெர்மனி - 50,000
ஸ்விட்சர்லாந்து - 40,000,
இத்தாலி 25,000
செசல்ஸ் 6000
என இந்தப்பட்டியல் வெகு நீளமானது.

இது தவிர இலங்கையில் பூர்வீக குடிகளாகவும், 10ஆம் நூற்றாண்டில் சோழப்பேரரசு ஆண்டபோது சென்றவர்களும், பிறகு பிரிட்டிஷ் ஆட்சியில் மலையகப்பகுதியில் குடி அமர்த்தப்பட்டவர்களுமாக சுமார் 30,00,000 தமிழர்கள் வாழ்கிறார்கள். இந்த வகையில் உலகில் ஒரு கோடி எண்ணிக்கைக்கும் அதிகமாகத் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

இவர்கள் தாய் தமிழகத்திலிருந்து மொழி வழிக்கல்வி, பண்பாடு, கலாச்சாரம் பழக்கவழக்கங்கள், மரபுரீதியான மத வழிபாட்டு சடங்குகள்.... போன்றவற்றை கற்கவும், கடைபிடிக்கவும் பேரார்வம் காட்டி வருகின்றனர். இதற்கு அரசும், அமைப்புகளும், அறிஞர்களும் உதவவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இதேபோல் நாமும் அவர்களிடமிருந்து தொழில்நுட்ப அறிவையும், கலாச்சார பரிவர்த்தனைகளையும் பெறலாம். வியாபார ரீதியிலும் பரஸ்பரம் பயனடையலாம்.
நடக்க இருக்கும் மாநாடு இதற்கெல்லாம் உதவிகரமாக அமையு எனத்தெரியவில்லை. அத்துடன் புலம்பெயர்ந்த நாடுகளில் அம்மக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளுக்கு கை கொடுக்கவும், துயர்துடைக்கவும் ஒரு அதிகாரமிக்க - அரசு தொடர்புகளோடு இயங்கக்கூடிய - புதிய அமைப்பு ஒன்றும் தேவைப்படுகிறது. நமது தமிழக அரசாங்கமே இதற்காக முயற்சி எடுத்து அக்கறைகாட்டவேண்டும். இதில் அரசியல் பார்வை தவிர்த்த அணுகுமுறை மிகவும் அவசியம்.

தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
22.10 .2013

No comments: