Thursday, September 12, 2013

நடைபாதை வியாபாரிகள் பாதுகாப்பு மசோதா



"இவர்கள் சமுதாயத்திற்கு தேவையானவர்களாகவும் உள்ளார்கள். அதே சமயம் தொந்தரவானவர்களாகவும் உள்ளனர்" - இது தான் நடைபாதை வியாபாரிகள் குறித்த பொதுமக்களின் பார்வை.

பட்ஜெட்டுக்கு ஏற்ப குறைந்த விலைக்கு பல தரப்பட்ட பொருட்களை வாங்கவும், உடனடியாக ஒரு பொருளை வாங்கிச் செல்வதற்கும் மிகப்பெரும்பாலான மக்கள் நடைபாதைக் கடைகளையே நாடுகின்றனர்.
அதேசமயம் குறைந்த முதலீட்டில் ஏராளமானோர் சுயமாக வாழ்வதற்கும் நடைபாதை வாயாபாரமே ஆதாரமாகிறது.

இந்தியாவில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான நடைபாதை வாயாபாரிகள் இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமே ஏழெட்டு லட்சம் நடைபாதை வியாபாரிகள் இருக்ககூடும் என நம்பப்படுகிறது.

இவர்கள் உள்ளூர் போலீஸ் மற்றும் 'தாதாக்களின் தொந்தரவுகளையும், உள்ளாட்சி அமைப்புகளின் இடையூறுகளையும் அடிக்கடி சந்திக்கிறார்கள் அதேபோதில், 'நடைபாதைகளை ஆக்கிரமிக்கிறார்கள்' என்ற குற்றசாட்டுகளுக்கு ஆளாகிறார்கள்!

எனவே இவர்களை ஒழுங்குபடுத்த, இத்தொழிலை சட்டப்படி முறைபடுத்த பல முயற்சிகள் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டன. நடைபாதைவியாபாரிகள் தரப்பில் இதற்கான வேண்டுகோள் நீண்ட நாட்களாகவே வலியுறுத்தப்பட்டு வந்தது.

நடைபாதை வியாபாரிகளுக்கான கொள்கை - 2004ல் உருவானது. மீண்டும் இது நகரங்களின் நடைபாதை வியாபாரிகளுக்கான தேசிய கொள்கையாக -2009ல் செழுமை பெற்றது.

நடைபாதை கடைகள் பெரும்திரள் மக்களின் வாழ்வியல் ஆதாரமாக உள்ளது. என்பதை - 2010ல் உச்சநீதிமன்றம் அங்கீகரித்தது. இதை தொடர்ந்தது இவர்களுக்காக உருவாக்கப்பட மசோதாவுக்கு ஆகஸ்ட் -17-2012ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் உச்சமாக செப்டம்பர் 2013ல் தற்போதைய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
நடைபாதை வியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் முறைபடுத்தல் மசோதாவின் முக்கிய அம்சங்கள்;
  • நடைபாதை வியாபாரத்திற்கான இடங்களை வரையறுப்பது

  • நடைபாதை வியாபாரிகளுக்கு உரிய உரிமம் வழங்குவது

  • நடைபாதை வியாபாரம் தொடர்பான விவகாரங்களை ஒழுங்குபடுத்த அந்தந்த ஊர்களிலேயே குழு அமைப்பது.

  • அக்குழுவில் நடைபாதை வியாபாரிகள் சங்கம், குடியிருப்போர் சங்கம், உள்ளாட்சி அமைப்பின் பிரிதிநிதி, காவல்துறை, முனிசிபல் கமிஷனர் ஆகியோர் இடம்பெறுவர்.

  • சூழலுக்கேற்ப பொதுமக்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளின் நலன் ஆகிய இரண்டையும் கவனத்தில் கொண்டு இவர்கள் முடிவுகளை எடுப்பர்

  • இனி உள்ளூர் ரவுடிகள் போலீசார் போன்றோர் நடைபாதை வியாபாரிகளிடம் 'மாமுல்' வாங்க முடியாது.

  • நடைபாதை வியாபாரிகளுக்கான சமூக அந்தஸ்த்தை இம்மசோதா உறுதி செய்கிறது.

  • மாநில அரசும், உள்ளாட்சி அமைப்பும் நடைபாதை வியாபாரிகள் விஷயத்தில் முறையாக திட்டமிடவேண்டும்.

  • ரயில்வே துறைக்கான இடங்கள், ரயில்கள் போன்றவற்றில் கடை போடும் வியாபாரிகள் தண்டிக்கப்படுவார்கள்.

  • அனுமதி வழங்கப்படாத இடங்களில் நடைபாதை வியாபாரம் செய்யக்கூடாது.

2 comments:

Unknown said...

நடைபாதை வியாபாரிகளுக்கு உரிய உரிமம் எவ்வாறு பெறுவது

Unknown said...

நடைபாதை வியாபாரிகளுக்கு உரிய உரிமம் எவ்வாறு பெறுவது