Wednesday, July 3, 2013

IPL - சூதாட்டம்



மீண்டும் ஒரு முறையாக தற்போது .பி.எல் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்று வரும் சூதாட்டம் அம்பலமாகியுள்ளது. இந்த முறை ஐந்து விளையாட்டு வீரர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளனர். ஸ்ரீ வஸத்தவா, சுசிந்திரா, மோனிஷ் மிஸ்ரா, அமீத்யாதவ், அபினவ் பாலி என்ற இந்த ஐவருமே அவ்வளவு பிரபலமான வீரர்களுமல்ல... இவர்களுக்கே இவ்வளவு ரேட் என்றால் மற்றவர்களுக்கு... எவ்வளவோ...! என்ற சந்தேகமே தற்போது அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பேச்சாக உள்ளது. இந்த பேரத்தில் கிரிக்கெட் அணியின் உரிமையாளர்கள் சிலர், அமைப்பாளர்கள் சிலர் அம்பலப்பட்டுள்ளதும் அம்பலமானால் ஆச்சரியமில்லை.
விளையாட்டு என்பது உடல், மனம் என்ற இரண்டையுமே ஒருமுகப்படுத்தி ஆற்றலும், ஆரோக்கியமும் தரக்கூடியது என்பதே பொதுவான புரிதல். ஆனால் கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் அது விபரீத புரிதலாகி வெகுகாலமாகிறது... கற்பனைக் கெட்டா அளவிலான கரன்ஸிகளின் புழக்கம், கறுப்பு பணத்தை வெள்ளையாக்குதல், ஆடம்பரங்கள், ஆர்பாட்டங்கள், ஆபாசநடனங்கள், மனிதனையே ஏலம் எடுக்கும் மனப்போக்குகள், சட்டங்களை மீறிய வியாபார அணுகுமுறைகள், சதிகளை அரங்கேற்றும் சூதாட்ட பேரங்கள்... என்பதாக கிரிக்கெட் தற்போது அதன் உண்மையான ரசிகர்களையே உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது.
கிரிக்கெட் விளையாட்டு என்பது இவ்வளவு  விஸ்வரூபமெடுத்ததற்கும் விகாரமானதற்கும் காரணங்கள் என்ன? எத்தனையோ பல அற்புதமான, ஆரோக்கியமான, நம் மண்ணின் விளையாட்டுகள் இருக்க..., ஆங்கிலேயர்களால் 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்று வரை அவர்கள் அடிமையாய் வைத்திருந்த நாடுகளில் மட்டுமே ஆடப்பட்டு வருகிற-கிரிக்கெட் மட்டும் உச்சாணிக் கொம்பாக உயர்த்தப்பட்டும், ஆராதிக்கப்பட்டும் வருவது ஏன்?
உண்மையில் 1970களுக்குப் பிறகு கிரிக்கெட் ரசனை என்பது நமது மத்திய மாநில அரசுகளால் தூண்டப்பட்டு, வெறியாக வளர்த்தெடுக்கப்பட்டு வந்தது!
கிரிக்கெட் விளையாட்டின் போது விடுமுறை, கிரிக்கெட் வீரர்களுக்கு போட்டிபோட்டுக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் வழங்கிய பரிசுகள், சலுகைகள், அன்றைய அரசு தொலைகாட்சிகளில் தரப்பட்ட முக்கியத்துவங்கள், விளம்பரங்கள் போன்றவை மற்ற பல விளையாட்டுகளை பின்னுக்குத் தள்ளியதோடு, அவை சம்மந்தப்பட்ட விளையாட்டு வீரர்களையும் விரக்தி கொள்ளவைத்தது. இன்றும் அவை தொடர்வதை யாரும் மறுக்க முடியாது.
கிரிக்கெட்டில் சூதாட்டம் என்பது 1999 தொடங்கி தொடர்ந்து அம்பலப்பட்டுவருகிறது. முதலில் தென்ஆப்ரிக்கா கேப்டன் ஹன்சிகுரேனா அம்பலமானார். அதைத்தொடர்ந்து இந்தியாவில்  அசாருதின், அஜய் சடோஜா ஆகியோர் அகப்பட்டு தண்டிக்கப்பட்டனர். சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கேப்டன் சல்மான்பட், முகமதுஅமீர், முகமது சலீம் அம்பலமாகி சிறையில் தள்ளப்பட்டனர்.
முன்பெல்லாம் அரசல்புரசலாக நடந்து கொண்டிருந்த கிரிக்கெட் சூதாட்டம் 2008-ல் .பி.எல் வருகைக்கு பின்பு அங்கிகரிக்கப்பட்ட ஒன்றாக அபரிமித வளர்ச்சி பெற்றுவிட்டது..
அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டில் புழங்கும் பணம் சில நூறுகோடி என்றால் அங்கீகரிக்கப்படாத கிரிக்கெட் சூதாட்டத்தில் புழங்கும் பணமோ சில ஆயிரம் கோடி என்றார்கள்.
இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது மட்டுமே சுமார் 100 கோடியை தொடுகிறது இந்த சூதாட்ட பேரங்கள்! ஆனால் தற்போது .பி.எல் வந்த பிறகு நடக்கும் ஒரு நாள் போட்டிகளோ அதையும் தாண்டிவிட்டது என்கிறார்கள்.
உலகிலேயே மிகப்பெரிய பணக்கார விளையாட்டு அமைப்பாக நமது ஙிசிசிமி தான் திகழ்கிறது. கிரிக்கெட் சூதாட்டத்திற்கே தற்போது இந்தியா தாயகமாகிவிட்டது. இதனால் தான் சமீபத்தில் ஒரு பேட்டியில் .சி.சியின் தலைமை நிர்வாகி, பேசாமல் இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டத்தை சட்ட பூர்வ மாக்கிவிட்டுப் போகலாமே... என்று கமெண்ட் அடித்தார். நமது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரும் இதே கமெண்ட்டை கசப்புடன் கூறியுள்ளார். இது எதனால் என்றால் இந்த சூதாட்டங்கள் அனைத்தையும் தெரிந்தும்தெரியாதது போல் நமது அரசாங்கம் காட்டிகொள்வதால் தான்! கிரிக்கெட் சூதாட்டம் சட்டபூர்வமானால் அரசுக்கு வருமானம் பெருகலாம்! ஆனால் அது விரும்பத்தகாத பல விபரீதங்களை விளையாட்டுத்துறையில் ஏற்படுத்திவிடும்.
ஆகவே, குறைந்தபட்ச நடவடிக்கையாக .பி.எல் போட்டிகளுக்கு தடைபோடலாம்! மற்ற பல மண் சார்ந்த விளையாட்டுகளுக்கு அதிக நிதி தந்து ஊக்கப்படுத்தி முக்கியத்துவம் அளிக்கலாம்.

16.5.2012

No comments: