Saturday, September 4, 2010

உமாசங்கரின் உறுதிமிக்க போராட்டமும், ஊழல் அரசாங்கத்தின் பின்வாங்களும்

-சாவித்திரிகண்ணன்

ண்மைக்கும், நேர்மைக்கும் முன் அரசாங்கம் தோற்றுப்போய்விட்டது. அரசாங்காம் என்ற அசுர பலததால் ஏவப்பட்ட ஆள், படை, அம்புகள் அனைத்தும் முனைமுழுங்கி இலக்கை எட்டு முன் இயற்கை மரணமெய்தின. உமாசங்கர் ஐ.ஏ.எஸ்ஸின் மீதான அரசாங்கத்தின் பழிவாங்கும் போக்கு பரிதாபகரமான தோல்வியை அடைந்து விட்டது.

எல்காட் நிறுவனத்தின் (தமிழ்நாடு அரசு எலட்ரானிக்ஸ் கார்பரேஷன்) நிர்வாக இயக்குநராக இருந்த போதும், அரசு தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநராக இருந்தபோதும் அரசு சொத்துகளின் பாதுகாவலராக நின்று முதலமைச்சர் குடும்பத்தின் அதிகார மையங்களுக்கு அடிபணிய மறுத்தார் உமாசங்கர்.

இதன் பின்னணியில் இருந்தது மாறன் சகோதரர்கள் என்று அரசாங்க வட்டராத்தில் அதிகாரிகள் மட்டத்தில் ஒரு பேச்சு அடிபடுகிறது. அரசு கேபிள் டி.வி கார்பரேஷனில் நிர்வாக இயக்குநராக உமாசங்கர் இருந்தபோது அரசு கேபிள் டி.வியை வலுவுள்ளதாக்க அரும்பாடுபட்டார். சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட சந்தாதரர்கள் அதில் சேர்ந்தனர் கோவை, தஞ்சை, நெல்லை, வேலூர் என நான்கு இடங்களில் முதற்கட்டமாக அரசு கேபிள் நெட்வொர்க் இயங்க ஆரம்பித்தது.

அரசு கேபிள் டி.வி நெட்வொர்க்கை அதிரடியாக களத்தில் இறங்கி செயல்படுத்த துணிந்த உமாசங்கரை கண்டு அதிர்ந்து போன மாறன் சகோதரர்கள், அரசு கேபிள் ஆப்ரேட்டர்களை மிரட்டினர். அது பலிக்கவில்லை. எனவே ரவுடிகளின் பட்டாளத்தை கொண்டு அரசு கேபிள் வயர்களை ஏராளமான இடங்களில் வெட்டி எறிந்தனர். இந்த சமூக விரோத சக்திகளின் மீது நடவடிக்கை கோரி உமாசங்கர் எழுதிய எண்ணற்ற கடிதங்கள், வேண்டுகோள்களை அரசு பொருட்படுத்தவேயில்லை. மாறாக அப்பாவி அரசு கேபிள் ஆபரேட்டர்களை மீது போலீஸ் பொய்வழக்குள் போட்டனர்.

அதாவது, ஒரு தனியார் நிறுவனமான சுமங்கலி கேபிள் விஷனுக்கு (scv) ஆதரவாக அரசு இயந்திரங்களும், அதிகார பலமும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது.

இந்தச்சூழலில் தான், பிரிந்திருந்த மாறன் குடும்பமும், முதலமைச்சர் குடும்பமும் இணைந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அசாதாரண சூழலை அவதானித்த உமாசங்கர் முதலமைச்சரிடம் நேரடியாகச் சென்று, தன்னை அரசு கேபிள் கார்ப்பரேஷன் பொறுப்பில் இருந்து விடுவிக்க கோரியுள்ளார். ஆனால் முதலமைச்சரோ, ''நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறேன். முன்னிலும் இரண்டு மடங்கு வேகத்துடன் நீங்கள் செயல்பட வேண்டும்'' என்கிறார். உமாசங்கரும் இதை நம்பிவிடுகிறார்.

அனால் யதார்ததமோ வேறுவகை அனுபவத்தை அவருக்குத் தந்தது. அரசு கேபிளை மீண்டும் வெட்டி எறியத் தொடங்கிய ரவுடிகளை தி.மு.க அமைச்சரான பொங்கலூர் பழனிச்சாமி பாதுகாத்தார்.

எனவே கொதித்துப்போன உமாசங்கர், இதை மீண்டும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டுவந்து, 'ஒரு தனியார் நிறுவனமானது அரசு நிறுவனத்தையே அழித்துவிட்டு தனிக்காட்டு ராஜாவாக இயங்குமென்றால் அந்த தனியார் நிறுவனத்தை (எஸ்.சி.வியை) ஏன் தேசியமயமாக்கி அரசு எடுத்துக்கொள்ளக்கூடாது? அரசு சொத்துகளை அழித்தவர்கள் மீதும்,அவர்களை ஏவிய சக்திகள் மீதும் ஏன் குண்டர் சட்டம் பாயக்கூடாது; என கேள்வி கேட்டார்.

விளைவு, இந்தச்செய்தி வெளியான மூன்றே மணிநேரத்தில் அவர் அரசு கேபிள் கார்பரேஷன் நிர்வாக இயக்குநர் பொறுப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இதனால் அவரை பணிமாற்றம் செய்து கடைசியில் சிறுசேமிப்புத்துறை இயக்குநராக நியமித்தனர்.

கிங்மேக்கர்களாக செயல்படும் கே.டி.பிரதர்ஸ்:

தங்களுக்கு எதிராக சுண்டுவிரலை அசைத்தாலும் அவர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரியே ஆனாலும் அவர்கள் ஒரு நாளும் அந்தப் பதவியில் தொடர முடியாது. உடனே பணிமாற்றம் செய்யப்படுவார்கள் என்பதை அப்பட்டமாக கே.டி.பிரதர்ஸ் (கலாநிதி, தயாநிதி) நிறுபித்த நிகழ்ச்சியாக அதிகாரிகள் இதை பார்த்து அதிர்ந்தனர்.

அதோடு விடாமல் அடுத்தகட்டமாக கே.டி பிரதர்ஸ் எய்த அம்பு தான் உமாசங்கரின் மனைவி தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததை பிரச்சினையாக்கிய விவகாரம்.

அச்சமயம் அவரது மனைவி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். உயர்ந்த கல்வித் தகுதியும், திறமையும் மிக்க ஒருவர் அதற்கேற்ற பணியைப் பெறுவதில் யாரும் குறைகூறமுடியாது என்பதே யதார்த்தம். ஆனால் இது குறித்து அரசாங்கம் அதிருப்தி தெரிவித்தது. அந்த தனியார் நிறுவனம் சிறுசேமிப்புத்துறையோடு ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், தன் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த வேலையை அவர் தன் மனைவிக்கு பெற்றுத் தந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. சுயமரியதைக்காரரான உமாசங்கர் தன் மனைவியை ராஜீனாமா செய்ய வைத்துவிட்டார்.

இந்த அம்பும் வீணாகிப்போனது. ஏனெனில் துறப்பதற்கு தயாரனவனிடம் துன்பப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றாகிவிட்டது.

எனவே அடுத்த கட்டமாக கே.டி.பிரதர்ஸ் உமாசங்கரின் மீது ஏதாவது ஒரு கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என கருணாநிதியை வற்புறுத்தத் தொடங்கினர். கருணாநிதி முதலில் இதற்கு இசையை மறுத்தார். ஆனால் கே.டி.பிரதர்ஸ் தங்களின் அசுரத்தமான மீடியா பலத்தால் கருணாநிதியை கொஞ்சம் கொஞ்சமாக அசைக்கத் தொடங்கினர். இறுதியில் கருணாநிதி கே.டி. பிரதர்ஸின் கட்டளைக்கு பணிந்து விட்டார்.

கருணாநிதி பணிந்தது எப்படி?

மீடியாவிற்குள் முதன்முதலாக நுழைந்த காலகட்டத்தில் மாறன் சகோதரர்கள் கருணாநிதியின் அரசியல் பின்புலத்திலேயே அதன் அடித்தளத்தைப் போட்டனர். தி.மு.கழகத்தின் கட்சி நிதியையும், கட்சித் தலைமையகத்தையும் தந்து உதவினார் கருணாநிதி. அதோடு போட்டியாளர்களை அழிக்க, நசுக்க, மிரட்டிபணிய வைக்க முழுக்க, முழுக்க மாறன் சகோதரர்கள் கருணாநிதியை சார்ந்திருந்தனர்.ஆனால் இப்போதோ இவர்கள் ஆசியா கண்டத்தின் மிகப்பெரும் பணமுதலைகள்.

சக்தி வாய்ந்த சன்.டி.வி உட்பட 20க்கு மேற்பட்ட டி.வி, சேனல்களையும், 45 எப்.எம் வானொலி ஒலிபரப்புகளையும், 13 லட்சம் பிரதிகள் விற்பனையாகும் தினகரன் மற்றும் தமிழ் செய்தி நாளிதழ்களையும் குஙுகுமம் உள்ளிட்ட நான்கு பருவ இதழ்களையும் கொண்டு மக்களிடம் கருத்துருவாக்கம் ஏற்படுததுவதில் தன்நிகரற்று விளங்குகின்றனர். இந்த ஊடகங்கள் மூலமாக நடத்தும் செய்தி சித்து விளையாட்டுகளைக் கொண்டே அவர்கள் கருணாநிதியை தங்கள் நிர்பந்தத்திற்கு பணியவைப்பது வழக்கம். தங்கள் மீடியாக்களில் அ.தி.மு.க விற்கோ, விஜயகாந்திற்கோ அவர்கள் அவ்வப்போது அதிக முக்கியத்துவம் தந்து கருணாநிதியின் ரத்த அழுததத்தை ஏகத்துக்கும் எகிறச் செய்து பணிய வைப்பது இவர்களுக்கு கைவந்த கலையாகிவிட்டது. அதுவும் தேர்தல் நெருங்கும் நேரம்... அதனால் கருணாநிதிக்கு மாறன் சகோதரர்களின் ஊடக பலத்தோடு பணபலமும் தேவைப் படுகிற இக்கட்டான சூழல் நிர்பந்தத்தினாலேயே அவர் மாறன் சகோதரர்களின் நிர்பந்த்திற்கு கடைசியில்பணியவேண்டியதாகிவிட்டது.

உமாசங்கர் மீது பாய்ந்த ஏவுகணைகள்:

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துவிட்டதாக உமாசங்கருக்கு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை (dvac) மூலம் நோடடீஸ் அனுப்பட்டது. இந்தச் செய்தி பத்திரிக்கைகளுக்கும் அரசு மூலம் அனுப்பபட்டது.

உமாசங்கர் ஏற்கனவே தன் சொத்துவிவரங்களை அரசிடம் முழுமையாகவும், முறையாகவும் தெரியப்படுத்தியுள்ள அதிகாரி. ஆதலால் இப்படி ஒரு நோட்டீஸ் அனுப்பியதன் காரணத்தையும், விளக்கத்தையும் சம்பந்தப்பட்ட துறையிடம் கேட்டார். அதோடு dvac யை தமிழக முதல்வர் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் தந்திரோபாயத்தையும் அவர் சட்டத்தின் வாயிலாக கேள்விக்குள்ளாக்கினார்.

இதனால் ஆத்திரமடைந்த முதல்வரும், அவர் தம் குடும்ப அதிகாரமையமும் உமாசங்கர் தாழ்த்தப்பட்டவர் என்று போலிச்சான்றிதழ் தந்து பணியில் சேர்த்ததாக புதிய குற்றச்சாட்டை நிதானமின்றி சுமத்தியதோடு இதை விசாரணை செய்து முடிவு தெரியும் காலம் வரையில் உமாசங்கரை இந்திய அரசுப் பணியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்தவதாக பகிரங்கமாக அறிவித்தனர்.

இப்போது வாபஸ் பெற்றது ஏன்?உமாசங்கர் சஸ்பென்ஸ் செய்யப்பட்டு சுமார் 45 நாட்களான நிலையில் அவர் மீதான விசாரணைகள் முடிவைட்யாத நிலையில் , குற்றச்சாட்டுகள் குறித்த இறுதி முடிவுக்கு வராத நிலையில் இப்போது அவர் மீதான சஸ்பென்ஸை தன்னிச்சையாக அரசு விலக்கிக் கொண்டதோடு, அவரை டான்சி இயக்குநராகவும் நியமித்துள்ளது.

இதைத்தான் இந்தத் கட்டுரையின் ஆரம்பத்தில் நான் உண்மைக்கும், நேர்மைக்கும் முன் அரசாங்கம் தோற்றுப் போய்விட்டது என்றேன். இந்த தோல்வியின் பின்னணியை அம்பலப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

  • upscஎனப்படும் மத்திய அரசு தேர்வாணையத்தின் மூலம் முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஐ.ஏ.எஸ் பணியில் சேர்ந்து 20 வருடங்களாக சிறப்பாக பணியாற்றிய ஒரு இந்திய அரசு அதிகாரியின் மீதான ஒரு மாநில அரசின் தன்னிச்சையான, ஆதாரமில்லாத அவசர நடவடிக்கைகான காரணத்தை மத்திய அரசிடம் தமிழக அரசால் நியாயப்படுத்த முடியவில்லை.

  • sc/st கமிஷனுக்கு உமாசங்கரால் அனுப்பப்பட்டுள்ள அதிர்ச்சியான தகவல்களும், அதன் மூலம் அம்பலப்பட்டு நிற்கும் தமிழக அரசின் பழிவாங்கும் அணுகுமுறைகளுக்குமான விளக்கத்தை தமிழக அரசாங்காத்தால் தரமுடியவில்லை.

  • கடந்த 45 நாட்களுக்கும் மேலாக எவ்வளவோ பகீரத முயற்சிகளை மேற்கொண்டும், அரசு அதிகாரபலத்தை முழுமையாக பிரயோகித்தும் அரசாங்கத்தால் உமாசங்கரின் மீதான குற்றச்சாட்டை நிறுவ முடியவில்லை. இதற்காக உமாசங்கர் பிறந்த ஊர், படித்த பள்ளிகூடம் மற்றும் கல்லூரிகளில் விசாரணை, நண்பர்களிடம் விசாரணை, உறவினர்கள் மற்றும் உடன்பிறப்புகளிடம் விசாரணை... என அலையோ அலைவென அதிகார வர்க்கம் அலைந்து திரிந்தது. தாங்கள் விரும்பும் ஸ்டெட்மெண்ட்டை பெற மிரட்டியும் பார்த்தனர். அதிலும் பலன்கிடைக்கவில்லை.

  • உமாசங்கர் கடந்த 20 ஆண்டுகளாக மக்களை மிகவும் நேசித்து நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்பட்டு அளப்பரிய நல்ல பணிகளை ஆற்றியவர் என்ற வகையில் மக்களும், மக்கள் இயக்கங்களும், ஊடஙகங்களும் , அரசியல் கட்சிகளும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். போராட்டங்களை நடத்தினர். உமாசங்கர் அம்பலப்படுத்திய எல்காட் மற்றும் அரசு கேபிள் கார்பரேசன் விவகாரங்கள் மக்கள் மன்றத்தில் பகிரங்க விவாதப் பொருளாகி அரசாங்கத்தை தர்மசங்கடத்திற்குள்ளாக்கியது. ஆகவே இந்த சங்கடங்களிலிருந்து விடுபட்டு இதற்கொரு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்ற அரசின் தவிப்பும் இதற்கு காரணமாகும்.

  • உமாசங்கர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் தான் என்று அச்சமூகத்தினரே ஆங்காங்கே திரண்டு எழுந்து பற்பலபோராட்டங்கள் நடத்தி வந்தனர். இது செல்வம் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்து ஐ.ஏ.எஸ் அதிகாரி சீனியரிட்டிபடி தலைமைச் செயலாளர் ஆவதிலிருந்து தடுக்கபட்ட விவகாரத்தில் தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் மேலும் அதிருப்தி வெளிப்படக் காரணமாயிற்று.ஆகவே இது, 'தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான அரசல்ல' என நிரூபிக்க வேண்டிய நிர்பந்த சூழலுக்கு அரசு தள்ளப்பபட்டது.

  • எந்த சன்குழுமச் சகோதரர்களுக்காக கருணாநிதி இவ்வளவு சட்டவிரோத, மக்கள்விரோத செயல்பாடுகளுக்கு துணைபோனாரோ அந்த சன்குழும சகோதரர்களின் நெருங்கிய நட்பு தந்த பலத்தால் சன்குழும நிர்வாகி சக்சேனா ரவுடிகள் புடைசூழ நட்சத்திர ஓட்டலை சூறையாடியும், இளம்பெண்ணையும், அவரது வீட்டையும் தாக்கிய அராஜகச் செயல்பாடுகளால் கருணாநிதிக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழல். அதோடு அரசுகேபிள் கார்பரேசனை சன்குழும சகோதரர்களுக்கான அடக்கம் செய்ததால் ஏற்ப்ட்ட விமர்சனங்கள். அரசுக்கு ஏற்பட்ட கெட்டபெயர்...

ஆக upsc யின் கேள்விக்கணைகள், sc/st கமிஷனின் தார்மீக கோபம், அரசின் முழுபலத்தை பிரயோகித்தும் உமாசங்கர் மீதான நிருபிககமுடியாத பலவீனம், மக்கள் திரண்டெழுந்து நடத்திய போராட்டங்கள், ஊடகங்கள், அரசியல் கட்சிகளின் தாக்குதல்கள், தாழ்த்தப்பட்ட மக்களிடையே எழுந்த எழுச்சி, தாழ்த்தப்பட்ட மக்களின் கோபத்திற்கு ஆளாகிவிடக்கூடாதே என்ற பயம், சன்குழுமச் சகோதரர்கள் மீதான அதிருப்தி.... போன்றவையே உமாசங்கர் ஐ.ஏ.எஸின் பணி இடைநீக்கம் வாபஸ் பெறப்பட்டு அவர் மீண்டும் பணி அமந்த்ப்பட்டதற்கான காரணங்களாகும்.

இதன் மூலம் ம்க்களை நேசித்து , மக்களுக்காகப் பணியாற்றும் யாருமே தனிமனிதரல்ல. எப்படிப்பட்ட அரசாங்கத்தின் அசுரபலத்தாலும் அவர்களை அழிக்கமுடியாது என்பது தான் நிருபணமாகியுள்ளது.

நேர்மையாக. உண்மையாக செயலாற்றினால் இது தான் கதியோ... என்றில்லாமல், 'நிச்சயம் நீதி கிடைக்கும்' என ஐ.ஏ.எஸ்ஸாகவிருக்கும் இளைஞர்கருக்கும், பணியில் இருக்கும் அனைத்து நேர்மையாளர்களுக்கும் உணர்த்திய சம்பவமாகவும் இதை நாம் பார்க்க வேண்டும்.

ஆனால் அதே சமயம் ஏதோ மீண்டும் உமாசங்கரை பணியில் அமர்த்தி விட்டதன் மூலம் எல்லாவற்றிற்கும் முற்றுமுள்ளி வைத்ததாக அரசு கருதியிருந்தால் அது அறியாமை என்று தான் சொல்ல வேண்டும்.

  • தனது தவறான முடிவுகளுக்கு அரசாங்கம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

  • நேர்மையான அதிகாரியை 'கேரக்டர் அசாசினேஷன்' செய்து பொய்களை பரப்புரை செய்ததற்கான எதிர்வினைகளை சந்தித்தே ஆக வேண்டும்.

  • உமாசங்கரால் அம்பலப்பட்டுபோன சுமார் 1000கோடி ஊழல்கள், ம்றறும் குடும்ப அதிகார மையங்களின் அத்துமீீறல்கள் குறித்த அதிர்வுகள் அடங்கிப் போவதில்லை.

தீவினைகளை விதைத்தவர்கள் அதற்கான விளைவுகளை சந்தித்தேயாக வேண்டும். வினைப் பயன்களிலிருந்து ஒருவரை விலக்கி காப்பாற்றும் அதிகாரம் அந்த ஆண்டவனுக்கே இல்லை!