Saturday, January 24, 2009

அஸ்த்தமனமாகிக்கொண்டிருக்கும் அரசு கேபிள்...-

சாவித்திரிகண்ணன்

ஆரம்பித்த சிறிது நாட்களுக்குள்ளாகவே அஸ்த்தமனத்திற்கு தேதி குறித்துக் கொண்டதா அரசு கேபிள் நெட்வொர்க்...? முதலமைச்சரால் முன்முயற்சி எடுத்து உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆரம்பித்த சில மாதங்களுக்குள்ளாகவே அவராலயே அனாதையாக்கப்பட்ட அதிசயத்தை அல்லது அவலத்தை என்னென்பது? ஒரு கட்சிக்குள் ஏற்பட்ட அதிகாரமையத்திற்கான போட்டி அல்லது இரு குடும்பங்களுக்கிடையிலான வியாபாரரீதியான போட்டி இன்று ஆயிரக்கணக்கான கேபிள் ஆபரேட்டர்களை, லட்சக்கணக்கான தொலைகாட்சி பார்வையாளர்களை கடும் பாதிப்புக்கு ஆளாக்கிவிட்டது.மே- 2007-ல் நடந்த சன்குழுமத்திற்கும், தி.மு.க தலைமைக்குமான மோதலைத் தொடர்ந்து தமிழக தொலைகாட்சி உலகில் சில அதிகார மாற்றங்கள் அரங்கேறுவதற்கான சூழல் கணிந்தது.1993-ல் கேபிள் டிவி உலகில் கால்பதித்தது சன்குழுமம். முதல் மூன்றாண்டுகள் முன்னேற்றங்கள் ஏதுமின்றி முட்டிமோதி திணறியது. 96-ல் தி.மு,.க ஆட்சியைப் பிடித்ததும், அதைத் தொடர்ந்து மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் முரசொலிமாறன் மத்திய அமைச்சரானதும், சன்குழும வியாபார நலன்களுக்கு சாதகமான சூழல் உருவாக்கப்பட்டது. 2000 மாவது ஆண்டில் தயாநிதி மாறனால் சுமங்கலி கேபிள் விஷன் (scv) ஆரம்பிக்கப்பட்டு, அரசியல் அதிகாரபலம் கொண்டு ஆபரேட்டர்கள் மிரட்டப்பட்டு, சுமங்கலி கேபிள் விஷன் தமிழகத்தின் முக்கியநகரங்களை முற்றுகையிட்டது. எஸ்.சி.வியோடு சேராவிட்டால் எவரும் தமிழகத்தில் கேபிள் ஆபரேட்டர்களாக வியாபாரம் செய்யமுடியாது என்று அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரபலத்தால் நிர்பந்தம் செய்யப்பட்டது. சுயேட்சையாக செயல்பட்டவர்களும் மாற்று நிறுவனங்களை நடத்தியவர்களும் ஏறத்தாழ தொழிலையே துறந்தனர். கேபிள் ஆபரேட்டர்கள் கொத்தடிமைகளாக்கப்பட்டனர். தயாநிதி மாறன் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரானதும், தமிழகத்தில் வேறு எவரும் புதிய தொலைகாட்சி சேனல்களை துவங்க முடியாமல் முட்டுக்கட்டைபோட்டார். முன்பே துவங்கியிருந்தவர்களால் எஸ்.சி.வியின் தயவின்றி எந்த முக்கியநகரத்திலும் காலூன்ற முடியாது என்ற நிலைமை வலுவானது.மிகக்குறுகிய காலத்தில் சூது, வாது, அரசியல் வன்முறையால் வெற்றிகளை குவித்த மாறன் சகோதரர்கள் தமிழகத்தின் அரசியல் தலைமை பீடத்தை நோக்கி அடுத்த காய்களை நகர்த்தினர். அதற்கு கருணாநிதியின் குடும்பவாரிசுகளுக்கிடையிலான அதிகாரப்போட்டியை ஆயுதமாக்கிக் கொண்டனர். கூடவே அந்த வாரிசு வரிசையில் தயாநிதிமாறனும் தலையெடுத்திருப்பதை சூசமாக அறிவிக்கும் விதத்தில் கருத்து கணிப்பு என்ற ஒன்றை வெளியிட்டனர். அது மக்களிடையே எடுக்கப்பட்ட கருத்து கணிப்பல்ல, மக்களிடையே திணிக்க விரும்பிய கருத்து என்பதை தி.மு.க தலைமை திடமாக உணர்ந்தது.அழகிரி ஆவேசமாகப் பொங்கி எழுந்தார். அடித்து நொறுக்கப்பட்டது மதுரை தினகரன் அலுவலகம். வன்முறையாளர்களால் வைக்கப்பட்ட பெருநெருப்பில் வீழ்ந்து கருகின மூன்று மனிதஜீவன்கள்.'எல்லையை மீறி என் தலைமைக்கே குறிவைக்கிறாயா...?' என கருணாநிதி மாறன் சகோதரர்களுக்கு கருணைகாட்ட மறுத்தார்.தயாநிதி மாறன் தானே வலிந்து மத்திய அமைச்சர் பதவியைத் துறந்தார். 'உனக்கு வலுவான மீடியா பலம் இருப்பதால் தானே இந்த திமிர். இதோ நானும் வருகிறேன்' என கலைஞர் தொலைகாட்சி, இசையருவி, கலைஞர் நியூஸ் சேனல், முரசு என ஒன்றையடுத்து ஒன்றென நான்கு தொலைகாட்சி சேனல்கள் ஒரு ஆண்டுக்குள் உருவாக்கப்பட்டன. இவற்றை மக்களிடம் கொண்டுசெல்ல எஸ்.சி,வியின் தயவை எதிர்பார்க்க வேண்டியுள்ளதே... என்ற எரிச்சல் காரணமாக அரசே கேபிள் நெட்வொர்க் ஆரம்பிக்கும் என அறிவிப்பும் வெளியானது.எப்படியோ இந்த கலகத்தால் சன்குழுமத்தின் சர்வாதிகாரம் முடிவுக்கு வந்து, ஜனநாயகச் சூழல் தமிழக கேபிள் உலகத்திற்கு கனிந்தால் நல்லது தான் என பொதுமக்கள் தரப்பிலும், கேபிள் ஆபரேட்டர்கள் தரப்பிலும் நிம்மதி பெருமூச்சு வெளியானது.தமிழகம் முழுமையிலுமுள்ள கேபிள் ஆபரேட்டர்கள் அரசுக்கு ஆமோக ஆதரவு தந்தனர். சென்னையில் ஊர்வலம், மாநாடு, போன்றவை நடத்தி முதலமைச்சரை அழைத்தனர். முதலமைச்சரும் அதில் கலந்துகொண்டார். கேபிள் டிவி ஆபரேட்டரகள் தங்களுக்கொரு விடிவுகாலம் பிறந்துவிட்டதாக மெய்யாலுமே நம்பினர்.இதோ, அதோ என அறிவிப்புகள் தான் வெளியானது. ஆனால் அரசு கேபிள் டிவி தொடங்க அதீதகாலதாமதம் ஏற்பட்டது.ஏற்கெனவே எஸ்சிவி ஏற்படுத்தியுள்ள சம்ராஜ்யத்தில் சலசலப்பு உருவானது. இந்த சலசலப்பை சமாளிக்க ஆபரேட்டர்கள் உதவியின்றி 'சன்டைரக்ட்' என 'டிஸ் ஆன்டெனாவை' களத்தில் இறக்கியது சன்குழுமம்.ஆபரேட்டர்கள் அதிர்ந்தனர்.அரசு கேபிள் வந்தால் குறைந்த கட்டணம், தரமானசேவை, நிம்மதியான வியாபாரம், பாதுகாப்பு கிடைக்கும். மக்களை இழக்க வேண்டியிருக்காது என ஆறுதல் அடைந்து எதிர்பார்த்துகிடந்தனர்.ஒரு வருட தாமதத்திற்கு பிறகு வந்த அரசு கேபிளோ சரியான திட்டமிடலின்றி தயக்கத்துடன் கால்பதித்தது. முதற்கட்டமாக தஞ்சை, கோவை, திருநெல்வேலி, வேலூர் என்று அடித்தளம் போட்டனர். இதில் சென்னை, மதுரையை ஏன் சேர்க்கவில்லை? அல்லது தமிழகம் முழுமைக்குமான முயற்சி ஏன் மேற்கொள்ளப்படவில்லை என்பது புரியாத புதிராகத்தான் இருந்தது.அப்படியும் கூட கோவை, நெல்லை ஆகிய இடங்களில் ஆபரேட்டர்கள் ஆர்வத்துடன் அரசு கேபிளில் இணைந்தனர். வேலூர், தஞ்சையிலும் கூட நிறைய ஆபரேட்டர்கள் சேர்ந்தனர்.இந்நிலையில் சன்குழுமம் தன்சேனல்களை அரசுக்குத் தரமறுத்ததுடன் தன்னுடைய செல்வாக்கால் சோனி, ஸ்டார், போன்ற சேனல்களையும் அரசுக்கு ஆதரவு தரவிடாமல் செய்தது.இப்படி சன்குழும்ம் சண்டித்தனம் செய்யும் என்பதை அரசு முன்பே எதிர்பார்த்திருக்க வேண்டும். அதற்கேற்ப தன்வியூகங்களை வகுத்திருக்க வேண்டும். 'டிரா' சட்டப்படி ஒரு எம்.எஸ்.ஓ சேனல் கேட்டு விண்ணப்பித்தால் 90 நாட்களில் ஒளிபரப்பை தந்தாக வேண்டும். அரசு கேபிள் ஒளிபரப்பை தோல்வி அடையவைக்க சன்குழுமம் ஒளிபரப்பை தர மறுத்தது. ஆனால் தமிழ்நாட்டில் சன்குழுமத்தின் ஒத்துழைப்பின்றி கேபிள் நெட்வொர்க்கை செய்வது கடினம் என்பது மிகவும் ஒத்துக்கொள்ளப்பட்ட யதார்த்தம். ஆனபோதிலும் அரசு கேபிளில் ஆபரேட்டர்கள் இணைக்கப்பட்டனர். அரசு அதிகாரபலமிருக்கிறது என்பதால் ஆபரேட்டர்களில் சிலர்சட்டத்திற்கு புறம்பாக சன்குழுமச்சேனல்களை திருட்டுத்தனமாக மக்களுக்கு ஒளிபரப்பினர்.சண்டித்தனம் செய்யும் சன்குழுமத்தையும் சட்டப்படி பணியவைக்க அரசு முயற்சி எடுக்கவில்லை. சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஆபரேட்டர்களையும் தடுக்கவில்லை.கேபிள் ஆபரேட் நெட்வொர்க்கில் பழுத்த அனுபவமிக்க ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார். "சன்குழுமம் அரசு கேபிளுக்கு ஒளிபரப்பைத் தரமாட்டார்கள். ஆனால் சன்போன்ற கட்டணச் சேனல்களைத் தவிர்த்தால் ராஜ், ஜீ தமிழ், மக்கள், பொதிகை, விண், தமிழன், மெகா, வசந்த், கலைஞர், ஜெயா, முரசு, இமயம்... போன்ற ஏராமாள இலவச சேனல்களை மக்ளுக்கு தந்து மாதம் ரூ30 முதல் ரூ50வரை வசூலித்தால் அதில் சேருவதற்கு இலட்ச கணக்கான மக்கள் முன் வருவார்கள். கட்டண சேனல்கள் காரணமாக மாதம் ரூ150முதல் ரூ200வரை கட்டணம் செலுத்துவதை பெரும் சுமையாக கருதக்கூடிய ஏழை எளிய நடுத்தர பிரிவினர் அரசுக்கு அமோக ஆதரவு தருவார்கள். ஆனால் இதற்கு தேவை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் தான். அது இந்த அரசுக்கு இருந்தால் அரசு கேபிள் நெட்வொர்க்கிற்கு அபார வெற்றி கிடைத்திருக்கும். ஆனால் அரசு கேபிள் நெட்வொர்க் என்பது ஆரம்பித்து ஐந்து மாதங்கள் ஆகியும் ஒரு முறையான வழிமுறையின்றி, நிர்வாகத் தெளிவும், திடமுமின்றியே செயல்பட்டது.அரசு கேபிள் களத்திற்கு வந்த போது அதற்கு துணைநின்றிருக்க வேண்டிய அழகிரியோ மதுரைக்கு அரசு கேபிள் வராமல் தடுத்ததோடு, புதிதாக சொந்தமாக ராயல் கேபிள் விஷன் என்ற ஒன்றை தன் குடும்பத்தின் சார்பாக ஆரம்பித்தார்.வன்முறைவழியில் எஸ்.சி.வியின் பக்கமிருந்த ஆபரேட்டர்களை தன்னுடைய நெட்வொர்க்கில் சேரும்படி கட்டாயப்படுத்தினார். வர மறுத்த ஆபரேட்டர்களின் தொழிலையே அபகரித்தார். இப்படியாக ஒரு அராஜகத்தை அவர் மதுரையில் அரங்கேற்றிய போது அத்தனை தமிழக அரசியல்வாதிகளும் சன்குழுமத்தின் சார்பாக அறிக்கை தந்தனர். ஆனால் இன்று அந்த அரசியல்வாதிகள் எல்லாமே அரசு கேபிள் நெட்வொர்க் வயர்கள் அறுத்தெறியப்படும் போதும், அரசு கேபிள் ஆபரேட்டர்கள் மிரட்டப்பட்டு எஸ்.சி.வி பக்கம் சேர்க்கப்படுவது பற்றியும், மக்கள் வரிப்பணம் ரூ 100 கோடிக்குமேல் அரசு கேபிள் நெட்வொர்க்கில் அநியாயமாக விரயமாக்கப்பட்டு வீழலுக்கு இறைத்த நீராகிவிட்டது பற்றியும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் பொசுங்கியது பற்றியும் வாய்திறவாமல் மௌனம் சாதிப்பது ஏன்?இப்படி சுயநல கூட்டம் இன்றைய அரசியலை ஆக்கிரமித்திருப்பதால் தான் தார்மீகக் குரலை தமிழகத்தில் கேட்க முடியவில்லை. ஏதோ ஒரு அநியாயத்திற்கு எதிராக ஒரு அரசியல்வாதியின் குரல் ஒலிக்கிறதென்றால் அதில் அவர் சுயநலம்சம்பந்தப்பட்டிருக்கலாம் அல்லது அவரது சுயநலனுக்கு அதில் பாதிப்பு இருக்காது என்பதை அவர் உறுதிபடுத்தி கொண்டிருக்கலாம் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் அரசுகேபிள் இணைப்பில் வந்துவிட்ட பிறகு, சுமார் ஆயிரம் ஆபரேட்டர்கள் அரசுக்கு பணிபுரியத் தொடங்கிவிட்ட பிறகு அதிரடியாக அரசு கேபிள் வயர்களை களத்தில் இறங்கி அறுத்தெறியவும், அரசுகேபிள் ஆபரேட்டர்களை மரட்டவும் முடிகிறதென்றால் அதை முதலமைச்சரின் கீழிருக்கும் காவல்துறை வேடிக்கை பார்க்கிறதென்றால் என்ன பொருள்?முதலமைச்சர் மக்கள் பக்கம் நிற்கவில்லை. தன்னுடைய அரசாங்கத்தில் தன்னை நம்பி வந்த ஆபரேட்டர்களையும், மக்களையும் காப்பாற்ற அவர் அக்கறை காட்டுவதைவிடவும் தன்னுடைய குடும்ப நிறுவனம் சார்பாக அவர் நிற்கிறார் என்பதே பொருள்.அரசு கேபிள் நெட்வொர்க் தோற்றுவிட்டதென்றால் இந்த அரசுக்கு, இந்த முதலமைச்சருக்கு நிர்வாத்திறமையும், நிர்வாக உறுதியும் ஒரு சிறிதும் இல்லை என்பது மட்டுமல்ல, அவர் ஆட்சியில் அமர்ந்திருப்பதே தன் குடும்பத்தினர் சகல விதங்களிலும் சடடத்தை மீறியாவது செயல்பட்டு சொத்துசேர்பதை, தொழில் செய்வதை பாதுகாப்பதற்காகத்தானேயன்றி மக்கள் நலனை காப்பாற்றுவதற்கில்லை என்பது சற்றும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது.ஏனென்றால் இரு குடும்பங்களின் இணைப்புக்குப் பிறகு தமிழக அரசு கேபிள் டிவிக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியான உமாசந்திரனிடம் நிருபர்கள் கேட்டபோது "அரசு கேபிள் டிவி என்னாகும்? என்ற கேள்விக்கே இடமில்லை. முன்பைக் காட்டிலும் இன்னும் சிறப்பாகச் செயல்படும். இப்போது சுமார் ஒரு லட்சம் இணைப்புகள் அரசு கேபிளுக்கு கிடைத்துள்ளார்கள். இன்னும் இரண்டு வருடத்தில் சுமார் ஐம்பது லட்சம் இணைப்புகள் என்பதே எங்கள் இலக்கு. இன்னும் ஆறுமாதத்திலேயே தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் அரசு கேபிள் அமலுக்கு வரும். மிக நவீனதொழில்நுட்பம், அதே சமயம் குறைந்த கட்டணம் என்ற வகையில் தமிழகத்தில் மக்களுக்கு 50 லட்சம் செட் ஆப் பாக்ஸ்களை தருவோம்" என்றார்.அரசு கேபிள் டிவியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு இருந்த அக்கரையும், துடிப்பும் ஆளும் கட்சித் தலைமைக்கு இல்லை. அரசு கேபிள் டிவி வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் இராது. அதில் கல்வி ஒளிபரப்புகள் இருக்கும். பள்ளி ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் அரசு கேபிள் மூலமாக கல்வியை போதிக்க ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். என்றெல்லாம் உமாசந்திரன், கூறினாரே என்பதை நினைத்து பார்க்கையில் அரசு கேபிள் இன்று செயலிழந்துவிட்டதால் மக்கள் மட்டுமல்ல மாணவர்கள் சமுதாயத்திற்கும் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.ஒரு சில நாட்களுக்கு முன்பு அரசின் 'இலக்கு' பற்றி நம்பிக்கையுடன் பேட்டியளித்த அதே ஐ.ஏ.எஸ். அதிகாரி அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அரசு கேபிளின் 'இழப்பு' பற்றி அறிவிக்கும் நிலைக்கு ஆளானார்.கோயம்பத்தூரில் மட்டும் அரசு கேபிள் வயர்கள் அறுத்தெறியப்பட்டு அரசு கேபிளுக்கு எதிராக நடக்கும் வன்முறையால் பல இலட்சங்கள் இழப்பு உண்டாகியுள்ளதோடு அரசின் 90 சதவிகித பார்வையாளர்கள் அரசு கேபிளை பார்க்கவியலாமல் தடுக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது" என்றார்.ஆனால் காவல்துறை அரசு கேபிளுக்கு பாதுகாப்பும் தரவில்லை. வன்முறையாளர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கோவையில் அரசு கேபிளுக்கு கிடைத்த 300 ஆபரேட்டர்களில் மிகப்பெருவாரியானவர்கள் இன்று அரசு கேபிளில் இல்லை. அரசு வசமிருந்த 20,000 இணைப்புகளை இன்று ஆயிரத்திற்கும் குறைவாக போய்விட்டது. கோவையில் மட்டும் என்றில்லை, நெல்லை, வேலூர், தஞ்சையிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான். பாதிக்கப்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் அனைவரும் ஆங்காங்கே ஒன்று திரண்டு சுமார் 10 பேருந்துகளில் முதல்வரைச் சந்திக்க தலைநகர் வந்தனர். ஆனால் அவர்களை முதலமைச்சர் சந்திக்கவோ, குறைகளை காது கொடுத்து கேட்கவோ விரும்பவில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் கைது செய்யப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.இதே கேபிள் ஆபரேட்டர்கள் மாநாட்டில் சென்னை பல்கலைகழக மண்டபத்தில் முதலமைச்சர் பேசியவார்த்தைகள் இன்னும் காதில் ரீங்காரமிடுகிறது. அனைத்து கேபிள் ஆபரேட்டர்களும் அரசு கேபிளுக்கு வாருங்கள். கேபிள் தொழிலின் எதிர்காலத்தையும், அதில் ஈடுபட்டுள்ள உங்கள் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவது அரசின் பொறுப்பு" என்றார் முதல்வர்.ஆனால் இன்று நடப்பது என்ன?அரசு கேபிளுக்கு சன்குழுமச் சேனல்களை தரமறுப்பது தொடர்பான வழக்கு டிசம்பர் 15-ல் கோர்டுக்கு வந்த போது அரசு வழக்கறிஞர் வாதாடவில்லை. வாய்தா கேட்டு வழக்கை தள்ளிப்போடுகிறார். களத்தில் ஆயிரம் ஆபரேட்டர்கள் அடி உதை வாங்கி தொழில் செய்ய முடியாமல் தவித்து கொண்டிருக்க, அவர்களுக்கு ஆதரவை நல்கி உத்திரவாதம் செய்யவேண்டிய அரசோ நீதிமன்றத்தில் நீதியை பெற்றுத்தர ஆர்வம் காட்டாமல் பதுங்குகிறது. அதேசமயம் அழகிரிக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சன்குழுமத்திடம் சமரசம் பேசி வாபஸ் வாங்க வைத்தது ஆளும் கட்சித் தலைமை. அந்தத் தலைமை அதே சன்குழுமத்திடம் அரசு கேபிளுக்கு ஒளிபரப்பை கேட்டுப் பெறவில்லை. அன்று பத்திரிகை வாயிலாக, 'சன்குழுமச் சேனல்களை அரசுக்கு தர மறுக்கிறார்கள்' என அங்காலாய்த்த முதல்வர், இன்று தினசரி தன்னை நிழல்போலத் தொடரும் தயாநிதி மாறனிடம் ஏன் கேட்கவில்லை.கடும் எதிரிகளாக ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டிருந்த மாறன் சகோதரர்களும், மு.க.அழகிரியும் இன்று மதுரையில் தொழில் கூட்டாளிகளாகிவிட்டனர்.மதுரையில் சன்குழுமச் சேனல்களை அழகிரிக்கு தரமாட்டோம் என்ற மாறன் சகோதரர்கள் இன்று தந்துவிட்டனர். மதுரையில் சன்குழுமத் தயாரிப்பில் உருவான படங்களைக் கூட திரையிடவிடமாட்டேன் என தடுத்த அழகிரி இன்று மாறன் சகோதரர்களோடு தோளில் கைபோட்டு சிரிக்கிறார்.குடும்பங்களின் பகையில் சாதிக்க முடியாதிருந்த அரசு கேபிள் நெட்வொர்க் வெற்றியை குடும்பங்களின் ஒன்றிணைப்பிலாவது சாதித்து மக்களுக்கு ஒரேயொரு நன்மையாவது செய்துவிடலாம் என முதலமைச்சரோ அல்லது அவரது வாரிசான ஸ்டாலினோ கிஞ்சித்தும் எண்ணவில்லை.'இவர்கள் பகை கொண்டாலும் மக்கள் தான் பலிகடா உறவு கொண்டாலும் மக்கள் வளங்களைத்தான் உறிஞ்சுவார்கள்.'என்றால்... இது எவ்வளவு கசப்பான உண்மை. இந்த உண்மையை உணர்ந்ததறிய தமிழகம் தந்த விலை அளவிடற்கரியது.இந்த இரு குடும்பங்களுக்கிடையிலான பகை நெருப்பில் பொசுங்கி சாம்பலான உயிர்களுக்கும், இன்றைய உறவின் ஒருங்கிணைப்பில் கழுத்து நெறிபட்டு களபளியான கேபிள் ஆபரேட்டர்களுக்கும், லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் பணம் இழந்து நிற்கும் ஆபரேட்டர்களுக்கும், கண்ட்ரோல் ரூம் உரிமையாளர்களுக்கும், அரசு கேபிளுக்கு பணம் கட்டிய அப்பாவி பொதுமக்களுக்கும் கண்ணீர் அஞ்சலியை செலுத்துவதைத் தவிர கையாளாகாத நம்மால் என்ன செய்துவிட இயலும்?

அஸ்த்தமனமாகிக்கொண்டிருக்கும் அரசு கேபிள்...-

சாவித்திரிகண்ணன்

ஆரம்பித்த சிறிது நாட்களுக்குள்ளாகவே அஸ்த்தமனத்திற்கு தேதி குறித்துக் கொண்டதா அரசு கேபிள் நெட்வொர்க்...? முதலமைச்சரால் முன்முயற்சி எடுத்து உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆரம்பித்த சில மாதங்களுக்குள்ளாகவே அவராலயே அனாதையாக்கப்பட்ட அதிசயத்தை அல்லது அவலத்தை என்னென்பது? ஒரு கட்சிக்குள் ஏற்பட்ட அதிகாரமையத்திற்கான போட்டி அல்லது இரு குடும்பங்களுக்கிடையிலான வியாபாரரீதியான போட்டி இன்று ஆயிரக்கணக்கான கேபிள் ஆபரேட்டர்களை, லட்சக்கணக்கான தொலைகாட்சி பார்வையாளர்களை கடும் பாதிப்புக்கு ஆளாக்கிவிட்டது.மே- 2007-ல் நடந்த சன்குழுமத்திற்கும், தி.மு.க தலைமைக்குமான மோதலைத் தொடர்ந்து தமிழக தொலைகாட்சி உலகில் சில அதிகார மாற்றங்கள் அரங்கேறுவதற்கான சூழல் கணிந்தது.1993-ல் கேபிள் டிவி உலகில் கால்பதித்தது சன்குழுமம். முதல் மூன்றாண்டுகள் முன்னேற்றங்கள் ஏதுமின்றி முட்டிமோதி திணறியது. 96-ல் தி.மு,.க ஆட்சியைப் பிடித்ததும், அதைத் தொடர்ந்து மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் முரசொலிமாறன் மத்திய அமைச்சரானதும், சன்குழும வியாபார நலன்களுக்கு சாதகமான சூழல் உருவாக்கப்பட்டது. 2000 மாவது ஆண்டில் தயாநிதி மாறனால் சுமங்கலி கேபிள் விஷன் (scv) ஆரம்பிக்கப்பட்டு, அரசியல் அதிகாரபலம் கொண்டு ஆபரேட்டர்கள் மிரட்டப்பட்டு, சுமங்கலி கேபிள் விஷன் தமிழகத்தின் முக்கியநகரங்களை முற்றுகையிட்டது. எஸ்.சி.வியோடு சேராவிட்டால் எவரும் தமிழகத்தில் கேபிள் ஆபரேட்டர்களாக வியாபாரம் செய்யமுடியாது என்று அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரபலத்தால் நிர்பந்தம் செய்யப்பட்டது. சுயேட்சையாக செயல்பட்டவர்களும் மாற்று நிறுவனங்களை நடத்தியவர்களும் ஏறத்தாழ தொழிலையே துறந்தனர். கேபிள் ஆபரேட்டர்கள் கொத்தடிமைகளாக்கப்பட்டனர். தயாநிதி மாறன் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரானதும், தமிழகத்தில் வேறு எவரும் புதிய தொலைகாட்சி சேனல்களை துவங்க முடியாமல் முட்டுக்கட்டைபோட்டார். முன்பே துவங்கியிருந்தவர்களால் எஸ்.சி.வியின் தயவின்றி எந்த முக்கியநகரத்திலும் காலூன்ற முடியாது என்ற நிலைமை வலுவானது.மிகக்குறுகிய காலத்தில் சூது, வாது, அரசியல் வன்முறையால் வெற்றிகளை குவித்த மாறன் சகோதரர்கள் தமிழகத்தின் அரசியல் தலைமை பீடத்தை நோக்கி அடுத்த காய்களை நகர்த்தினர். அதற்கு கருணாநிதியின் குடும்பவாரிசுகளுக்கிடையிலான அதிகாரப்போட்டியை ஆயுதமாக்கிக் கொண்டனர். கூடவே அந்த வாரிசு வரிசையில் தயாநிதிமாறனும் தலையெடுத்திருப்பதை சூசமாக அறிவிக்கும் விதத்தில் கருத்து கணிப்பு என்ற ஒன்றை வெளியிட்டனர். அது மக்களிடையே எடுக்கப்பட்ட கருத்து கணிப்பல்ல, மக்களிடையே திணிக்க விரும்பிய கருத்து என்பதை தி.மு.க தலைமை திடமாக உணர்ந்தது.அழகிரி ஆவேசமாகப் பொங்கி எழுந்தார். அடித்து நொறுக்கப்பட்டது மதுரை தினகரன் அலுவலகம். வன்முறையாளர்களால் வைக்கப்பட்ட பெருநெருப்பில் வீழ்ந்து கருகின மூன்று மனிதஜீவன்கள்.'எல்லையை மீறி என் தலைமைக்கே குறிவைக்கிறாயா...?' என கருணாநிதி மாறன் சகோதரர்களுக்கு கருணைகாட்ட மறுத்தார்.தயாநிதி மாறன் தானே வலிந்து மத்திய அமைச்சர் பதவியைத் துறந்தார். 'உனக்கு வலுவான மீடியா பலம் இருப்பதால் தானே இந்த திமிர். இதோ நானும் வருகிறேன்' என கலைஞர் தொலைகாட்சி, இசையருவி, கலைஞர் நியூஸ் சேனல், முரசு என ஒன்றையடுத்து ஒன்றென நான்கு தொலைகாட்சி சேனல்கள் ஒரு ஆண்டுக்குள் உருவாக்கப்பட்டன. இவற்றை மக்களிடம் கொண்டுசெல்ல எஸ்.சி,வியின் தயவை எதிர்பார்க்க வேண்டியுள்ளதே... என்ற எரிச்சல் காரணமாக அரசே கேபிள் நெட்வொர்க் ஆரம்பிக்கும் என அறிவிப்பும் வெளியானது.எப்படியோ இந்த கலகத்தால் சன்குழுமத்தின் சர்வாதிகாரம் முடிவுக்கு வந்து, ஜனநாயகச் சூழல் தமிழக கேபிள் உலகத்திற்கு கனிந்தால் நல்லது தான் என பொதுமக்கள் தரப்பிலும், கேபிள் ஆபரேட்டர்கள் தரப்பிலும் நிம்மதி பெருமூச்சு வெளியானது.தமிழகம் முழுமையிலுமுள்ள கேபிள் ஆபரேட்டர்கள் அரசுக்கு ஆமோக ஆதரவு தந்தனர். சென்னையில் ஊர்வலம், மாநாடு, போன்றவை நடத்தி முதலமைச்சரை அழைத்தனர். முதலமைச்சரும் அதில் கலந்துகொண்டார். கேபிள் டிவி ஆபரேட்டரகள் தங்களுக்கொரு விடிவுகாலம் பிறந்துவிட்டதாக மெய்யாலுமே நம்பினர்.இதோ, அதோ என அறிவிப்புகள் தான் வெளியானது. ஆனால் அரசு கேபிள் டிவி தொடங்க அதீதகாலதாமதம் ஏற்பட்டது.ஏற்கெனவே எஸ்சிவி ஏற்படுத்தியுள்ள சம்ராஜ்யத்தில் சலசலப்பு உருவானது. இந்த சலசலப்பை சமாளிக்க ஆபரேட்டர்கள் உதவியின்றி 'சன்டைரக்ட்' என 'டிஸ் ஆன்டெனாவை' களத்தில் இறக்கியது சன்குழுமம்.ஆபரேட்டர்கள் அதிர்ந்தனர்.அரசு கேபிள் வந்தால் குறைந்த கட்டணம், தரமானசேவை, நிம்மதியான வியாபாரம், பாதுகாப்பு கிடைக்கும். மக்களை இழக்க வேண்டியிருக்காது என ஆறுதல் அடைந்து எதிர்பார்த்துகிடந்தனர்.ஒரு வருட தாமதத்திற்கு பிறகு வந்த அரசு கேபிளோ சரியான திட்டமிடலின்றி தயக்கத்துடன் கால்பதித்தது. முதற்கட்டமாக தஞ்சை, கோவை, திருநெல்வேலி, வேலூர் என்று அடித்தளம் போட்டனர். இதில் சென்னை, மதுரையை ஏன் சேர்க்கவில்லை? அல்லது தமிழகம் முழுமைக்குமான முயற்சி ஏன் மேற்கொள்ளப்படவில்லை என்பது புரியாத புதிராகத்தான் இருந்தது.அப்படியும் கூட கோவை, நெல்லை ஆகிய இடங்களில் ஆபரேட்டர்கள் ஆர்வத்துடன் அரசு கேபிளில் இணைந்தனர். வேலூர், தஞ்சையிலும் கூட நிறைய ஆபரேட்டர்கள் சேர்ந்தனர்.இந்நிலையில் சன்குழுமம் தன்சேனல்களை அரசுக்குத் தரமறுத்ததுடன் தன்னுடைய செல்வாக்கால் சோனி, ஸ்டார், போன்ற சேனல்களையும் அரசுக்கு ஆதரவு தரவிடாமல் செய்தது.இப்படி சன்குழும்ம் சண்டித்தனம் செய்யும் என்பதை அரசு முன்பே எதிர்பார்த்திருக்க வேண்டும். அதற்கேற்ப தன்வியூகங்களை வகுத்திருக்க வேண்டும். 'டிரா' சட்டப்படி ஒரு எம்.எஸ்.ஓ சேனல் கேட்டு விண்ணப்பித்தால் 90 நாட்களில் ஒளிபரப்பை தந்தாக வேண்டும். அரசு கேபிள் ஒளிபரப்பை தோல்வி அடையவைக்க சன்குழுமம் ஒளிபரப்பை தர மறுத்தது. ஆனால் தமிழ்நாட்டில் சன்குழுமத்தின் ஒத்துழைப்பின்றி கேபிள் நெட்வொர்க்கை செய்வது கடினம் என்பது மிகவும் ஒத்துக்கொள்ளப்பட்ட யதார்த்தம். ஆனபோதிலும் அரசு கேபிளில் ஆபரேட்டர்கள் இணைக்கப்பட்டனர். அரசு அதிகாரபலமிருக்கிறது என்பதால் ஆபரேட்டர்களில் சிலர்சட்டத்திற்கு புறம்பாக சன்குழுமச்சேனல்களை திருட்டுத்தனமாக மக்களுக்கு ஒளிபரப்பினர்.சண்டித்தனம் செய்யும் சன்குழுமத்தையும் சட்டப்படி பணியவைக்க அரசு முயற்சி எடுக்கவில்லை. சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஆபரேட்டர்களையும் தடுக்கவில்லை.கேபிள் ஆபரேட் நெட்வொர்க்கில் பழுத்த அனுபவமிக்க ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார். "சன்குழுமம் அரசு கேபிளுக்கு ஒளிபரப்பைத் தரமாட்டார்கள். ஆனால் சன்போன்ற கட்டணச் சேனல்களைத் தவிர்த்தால் ராஜ், ஜீ தமிழ், மக்கள், பொதிகை, விண், தமிழன், மெகா, வசந்த், கலைஞர், ஜெயா, முரசு, இமயம்... போன்ற ஏராமாள இலவச சேனல்களை மக்ளுக்கு தந்து மாதம் ரூ30 முதல் ரூ50வரை வசூலித்தால் அதில் சேருவதற்கு இலட்ச கணக்கான மக்கள் முன் வருவார்கள். கட்டண சேனல்கள் காரணமாக மாதம் ரூ150முதல் ரூ200வரை கட்டணம் செலுத்துவதை பெரும் சுமையாக கருதக்கூடிய ஏழை எளிய நடுத்தர பிரிவினர் அரசுக்கு அமோக ஆதரவு தருவார்கள். ஆனால் இதற்கு தேவை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் தான். அது இந்த அரசுக்கு இருந்தால் அரசு கேபிள் நெட்வொர்க்கிற்கு அபார வெற்றி கிடைத்திருக்கும். ஆனால் அரசு கேபிள் நெட்வொர்க் என்பது ஆரம்பித்து ஐந்து மாதங்கள் ஆகியும் ஒரு முறையான வழிமுறையின்றி, நிர்வாகத் தெளிவும், திடமுமின்றியே செயல்பட்டது.அரசு கேபிள் களத்திற்கு வந்த போது அதற்கு துணைநின்றிருக்க வேண்டிய அழகிரியோ மதுரைக்கு அரசு கேபிள் வராமல் தடுத்ததோடு, புதிதாக சொந்தமாக ராயல் கேபிள் விஷன் என்ற ஒன்றை தன் குடும்பத்தின் சார்பாக ஆரம்பித்தார்.வன்முறைவழியில் எஸ்.சி.வியின் பக்கமிருந்த ஆபரேட்டர்களை தன்னுடைய நெட்வொர்க்கில் சேரும்படி கட்டாயப்படுத்தினார். வர மறுத்த ஆபரேட்டர்களின் தொழிலையே அபகரித்தார். இப்படியாக ஒரு அராஜகத்தை அவர் மதுரையில் அரங்கேற்றிய போது அத்தனை தமிழக அரசியல்வாதிகளும் சன்குழுமத்தின் சார்பாக அறிக்கை தந்தனர். ஆனால் இன்று அந்த அரசியல்வாதிகள் எல்லாமே அரசு கேபிள் நெட்வொர்க் வயர்கள் அறுத்தெறியப்படும் போதும், அரசு கேபிள் ஆபரேட்டர்கள் மிரட்டப்பட்டு எஸ்.சி.வி பக்கம் சேர்க்கப்படுவது பற்றியும், மக்கள் வரிப்பணம் ரூ 100 கோடிக்குமேல் அரசு கேபிள் நெட்வொர்க்கில் அநியாயமாக விரயமாக்கப்பட்டு வீழலுக்கு இறைத்த நீராகிவிட்டது பற்றியும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் பொசுங்கியது பற்றியும் வாய்திறவாமல் மௌனம் சாதிப்பது ஏன்?இப்படி சுயநல கூட்டம் இன்றைய அரசியலை ஆக்கிரமித்திருப்பதால் தான் தார்மீகக் குரலை தமிழகத்தில் கேட்க முடியவில்லை. ஏதோ ஒரு அநியாயத்திற்கு எதிராக ஒரு அரசியல்வாதியின் குரல் ஒலிக்கிறதென்றால் அதில் அவர் சுயநலம்சம்பந்தப்பட்டிருக்கலாம் அல்லது அவரது சுயநலனுக்கு அதில் பாதிப்பு இருக்காது என்பதை அவர் உறுதிபடுத்தி கொண்டிருக்கலாம் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் அரசுகேபிள் இணைப்பில் வந்துவிட்ட பிறகு, சுமார் ஆயிரம் ஆபரேட்டர்கள் அரசுக்கு பணிபுரியத் தொடங்கிவிட்ட பிறகு அதிரடியாக அரசு கேபிள் வயர்களை களத்தில் இறங்கி அறுத்தெறியவும், அரசுகேபிள் ஆபரேட்டர்களை மரட்டவும் முடிகிறதென்றால் அதை முதலமைச்சரின் கீழிருக்கும் காவல்துறை வேடிக்கை பார்க்கிறதென்றால் என்ன பொருள்?முதலமைச்சர் மக்கள் பக்கம் நிற்கவில்லை. தன்னுடைய அரசாங்கத்தில் தன்னை நம்பி வந்த ஆபரேட்டர்களையும், மக்களையும் காப்பாற்ற அவர் அக்கறை காட்டுவதைவிடவும் தன்னுடைய குடும்ப நிறுவனம் சார்பாக அவர் நிற்கிறார் என்பதே பொருள்.அரசு கேபிள் நெட்வொர்க் தோற்றுவிட்டதென்றால் இந்த அரசுக்கு, இந்த முதலமைச்சருக்கு நிர்வாத்திறமையும், நிர்வாக உறுதியும் ஒரு சிறிதும் இல்லை என்பது மட்டுமல்ல, அவர் ஆட்சியில் அமர்ந்திருப்பதே தன் குடும்பத்தினர் சகல விதங்களிலும் சடடத்தை மீறியாவது செயல்பட்டு சொத்துசேர்பதை, தொழில் செய்வதை பாதுகாப்பதற்காகத்தானேயன்றி மக்கள் நலனை காப்பாற்றுவதற்கில்லை என்பது சற்றும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது.ஏனென்றால் இரு குடும்பங்களின் இணைப்புக்குப் பிறகு தமிழக அரசு கேபிள் டிவிக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியான உமாசந்திரனிடம் நிருபர்கள் கேட்டபோது "அரசு கேபிள் டிவி என்னாகும்? என்ற கேள்விக்கே இடமில்லை. முன்பைக் காட்டிலும் இன்னும் சிறப்பாகச் செயல்படும். இப்போது சுமார் ஒரு லட்சம் இணைப்புகள் அரசு கேபிளுக்கு கிடைத்துள்ளார்கள். இன்னும் இரண்டு வருடத்தில் சுமார் ஐம்பது லட்சம் இணைப்புகள் என்பதே எங்கள் இலக்கு. இன்னும் ஆறுமாதத்திலேயே தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் அரசு கேபிள் அமலுக்கு வரும். மிக நவீனதொழில்நுட்பம், அதே சமயம் குறைந்த கட்டணம் என்ற வகையில் தமிழகத்தில் மக்களுக்கு 50 லட்சம் செட் ஆப் பாக்ஸ்களை தருவோம்" என்றார்.அரசு கேபிள் டிவியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு இருந்த அக்கரையும், துடிப்பும் ஆளும் கட்சித் தலைமைக்கு இல்லை. அரசு கேபிள் டிவி வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் இராது. அதில் கல்வி ஒளிபரப்புகள் இருக்கும். பள்ளி ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் அரசு கேபிள் மூலமாக கல்வியை போதிக்க ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். என்றெல்லாம் உமாசந்திரன், கூறினாரே என்பதை நினைத்து பார்க்கையில் அரசு கேபிள் இன்று செயலிழந்துவிட்டதால் மக்கள் மட்டுமல்ல மாணவர்கள் சமுதாயத்திற்கும் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.ஒரு சில நாட்களுக்கு முன்பு அரசின் 'இலக்கு' பற்றி நம்பிக்கையுடன் பேட்டியளித்த அதே ஐ.ஏ.எஸ். அதிகாரி அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அரசு கேபிளின் 'இழப்பு' பற்றி அறிவிக்கும் நிலைக்கு ஆளானார்.கோயம்பத்தூரில் மட்டும் அரசு கேபிள் வயர்கள் அறுத்தெறியப்பட்டு அரசு கேபிளுக்கு எதிராக நடக்கும் வன்முறையால் பல இலட்சங்கள் இழப்பு உண்டாகியுள்ளதோடு அரசின் 90 சதவிகித பார்வையாளர்கள் அரசு கேபிளை பார்க்கவியலாமல் தடுக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது" என்றார்.ஆனால் காவல்துறை அரசு கேபிளுக்கு பாதுகாப்பும் தரவில்லை. வன்முறையாளர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கோவையில் அரசு கேபிளுக்கு கிடைத்த 300 ஆபரேட்டர்களில் மிகப்பெருவாரியானவர்கள் இன்று அரசு கேபிளில் இல்லை. அரசு வசமிருந்த 20,000 இணைப்புகளை இன்று ஆயிரத்திற்கும் குறைவாக போய்விட்டது. கோவையில் மட்டும் என்றில்லை, நெல்லை, வேலூர், தஞ்சையிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான். பாதிக்கப்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் அனைவரும் ஆங்காங்கே ஒன்று திரண்டு சுமார் 10 பேருந்துகளில் முதல்வரைச் சந்திக்க தலைநகர் வந்தனர். ஆனால் அவர்களை முதலமைச்சர் சந்திக்கவோ, குறைகளை காது கொடுத்து கேட்கவோ விரும்பவில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் கைது செய்யப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.இதே கேபிள் ஆபரேட்டர்கள் மாநாட்டில் சென்னை பல்கலைகழக மண்டபத்தில் முதலமைச்சர் பேசியவார்த்தைகள் இன்னும் காதில் ரீங்காரமிடுகிறது. அனைத்து கேபிள் ஆபரேட்டர்களும் அரசு கேபிளுக்கு வாருங்கள். கேபிள் தொழிலின் எதிர்காலத்தையும், அதில் ஈடுபட்டுள்ள உங்கள் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவது அரசின் பொறுப்பு" என்றார் முதல்வர்.ஆனால் இன்று நடப்பது என்ன?அரசு கேபிளுக்கு சன்குழுமச் சேனல்களை தரமறுப்பது தொடர்பான வழக்கு டிசம்பர் 15-ல் கோர்டுக்கு வந்த போது அரசு வழக்கறிஞர் வாதாடவில்லை. வாய்தா கேட்டு வழக்கை தள்ளிப்போடுகிறார். களத்தில் ஆயிரம் ஆபரேட்டர்கள் அடி உதை வாங்கி தொழில் செய்ய முடியாமல் தவித்து கொண்டிருக்க, அவர்களுக்கு ஆதரவை நல்கி உத்திரவாதம் செய்யவேண்டிய அரசோ நீதிமன்றத்தில் நீதியை பெற்றுத்தர ஆர்வம் காட்டாமல் பதுங்குகிறது. அதேசமயம் அழகிரிக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சன்குழுமத்திடம் சமரசம் பேசி வாபஸ் வாங்க வைத்தது ஆளும் கட்சித் தலைமை. அந்தத் தலைமை அதே சன்குழுமத்திடம் அரசு கேபிளுக்கு ஒளிபரப்பை கேட்டுப் பெறவில்லை. அன்று பத்திரிகை வாயிலாக, 'சன்குழுமச் சேனல்களை அரசுக்கு தர மறுக்கிறார்கள்' என அங்காலாய்த்த முதல்வர், இன்று தினசரி தன்னை நிழல்போலத் தொடரும் தயாநிதி மாறனிடம் ஏன் கேட்கவில்லை.கடும் எதிரிகளாக ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டிருந்த மாறன் சகோதரர்களும், மு.க.அழகிரியும் இன்று மதுரையில் தொழில் கூட்டாளிகளாகிவிட்டனர்.மதுரையில் சன்குழுமச் சேனல்களை அழகிரிக்கு தரமாட்டோம் என்ற மாறன் சகோதரர்கள் இன்று தந்துவிட்டனர். மதுரையில் சன்குழுமத் தயாரிப்பில் உருவான படங்களைக் கூட திரையிடவிடமாட்டேன் என தடுத்த அழகிரி இன்று மாறன் சகோதரர்களோடு தோளில் கைபோட்டு சிரிக்கிறார்.குடும்பங்களின் பகையில் சாதிக்க முடியாதிருந்த அரசு கேபிள் நெட்வொர்க் வெற்றியை குடும்பங்களின் ஒன்றிணைப்பிலாவது சாதித்து மக்களுக்கு ஒரேயொரு நன்மையாவது செய்துவிடலாம் என முதலமைச்சரோ அல்லது அவரது வாரிசான ஸ்டாலினோ கிஞ்சித்தும் எண்ணவில்லை.'இவர்கள் பகை கொண்டாலும் மக்கள் தான் பலிகடா உறவு கொண்டாலும் மக்கள் வளங்களைத்தான் உறிஞ்சுவார்கள்.'என்றால்... இது எவ்வளவு கசப்பான உண்மை. இந்த உண்மையை உணர்ந்ததறிய தமிழகம் தந்த விலை அளவிடற்கரியது.இந்த இரு குடும்பங்களுக்கிடையிலான பகை நெருப்பில் பொசுங்கி சாம்பலான உயிர்களுக்கும், இன்றைய உறவின் ஒருங்கிணைப்பில் கழுத்து நெறிபட்டு களபளியான கேபிள் ஆபரேட்டர்களுக்கும், லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் பணம் இழந்து நிற்கும் ஆபரேட்டர்களுக்கும், கண்ட்ரோல் ரூம் உரிமையாளர்களுக்கும், அரசு கேபிளுக்கு பணம் கட்டிய அப்பாவி பொதுமக்களுக்கும் கண்ணீர் அஞ்சலியை செலுத்துவதைத் தவிர கையாளாகாத நம்மால் என்ன செய்துவிட இயலும்?

அஸ்த்தமனமாகிக்கொண்டிருக்கும் அரசு கேபிள்...-

சாவித்திரிகண்ணன்

ஆரம்பித்த சிறிது நாட்களுக்குள்ளாகவே அஸ்த்தமனத்திற்கு தேதி குறித்துக் கொண்டதா அரசு கேபிள் நெட்வொர்க்...? முதலமைச்சரால் முன்முயற்சி எடுத்து உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆரம்பித்த சில மாதங்களுக்குள்ளாகவே அவராலயே அனாதையாக்கப்பட்ட அதிசயத்தை அல்லது அவலத்தை என்னென்பது? ஒரு கட்சிக்குள் ஏற்பட்ட அதிகாரமையத்திற்கான போட்டி அல்லது இரு குடும்பங்களுக்கிடையிலான வியாபாரரீதியான போட்டி இன்று ஆயிரக்கணக்கான கேபிள் ஆபரேட்டர்களை, லட்சக்கணக்கான தொலைகாட்சி பார்வையாளர்களை கடும் பாதிப்புக்கு ஆளாக்கிவிட்டது.மே- 2007-ல் நடந்த சன்குழுமத்திற்கும், தி.மு.க தலைமைக்குமான மோதலைத் தொடர்ந்து தமிழக தொலைகாட்சி உலகில் சில அதிகார மாற்றங்கள் அரங்கேறுவதற்கான சூழல் கணிந்தது.1993-ல் கேபிள் டிவி உலகில் கால்பதித்தது சன்குழுமம். முதல் மூன்றாண்டுகள் முன்னேற்றங்கள் ஏதுமின்றி முட்டிமோதி திணறியது. 96-ல் தி.மு,.க ஆட்சியைப் பிடித்ததும், அதைத் தொடர்ந்து மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் முரசொலிமாறன் மத்திய அமைச்சரானதும், சன்குழும வியாபார நலன்களுக்கு சாதகமான சூழல் உருவாக்கப்பட்டது. 2000 மாவது ஆண்டில் தயாநிதி மாறனால் சுமங்கலி கேபிள் விஷன் (scv) ஆரம்பிக்கப்பட்டு, அரசியல் அதிகாரபலம் கொண்டு ஆபரேட்டர்கள் மிரட்டப்பட்டு, சுமங்கலி கேபிள் விஷன் தமிழகத்தின் முக்கியநகரங்களை முற்றுகையிட்டது. எஸ்.சி.வியோடு சேராவிட்டால் எவரும் தமிழகத்தில் கேபிள் ஆபரேட்டர்களாக வியாபாரம் செய்யமுடியாது என்று அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரபலத்தால் நிர்பந்தம் செய்யப்பட்டது. சுயேட்சையாக செயல்பட்டவர்களும் மாற்று நிறுவனங்களை நடத்தியவர்களும் ஏறத்தாழ தொழிலையே துறந்தனர். கேபிள் ஆபரேட்டர்கள் கொத்தடிமைகளாக்கப்பட்டனர். தயாநிதி மாறன் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரானதும், தமிழகத்தில் வேறு எவரும் புதிய தொலைகாட்சி சேனல்களை துவங்க முடியாமல் முட்டுக்கட்டைபோட்டார். முன்பே துவங்கியிருந்தவர்களால் எஸ்.சி.வியின் தயவின்றி எந்த முக்கியநகரத்திலும் காலூன்ற முடியாது என்ற நிலைமை வலுவானது.மிகக்குறுகிய காலத்தில் சூது, வாது, அரசியல் வன்முறையால் வெற்றிகளை குவித்த மாறன் சகோதரர்கள் தமிழகத்தின் அரசியல் தலைமை பீடத்தை நோக்கி அடுத்த காய்களை நகர்த்தினர். அதற்கு கருணாநிதியின் குடும்பவாரிசுகளுக்கிடையிலான அதிகாரப்போட்டியை ஆயுதமாக்கிக் கொண்டனர். கூடவே அந்த வாரிசு வரிசையில் தயாநிதிமாறனும் தலையெடுத்திருப்பதை சூசமாக அறிவிக்கும் விதத்தில் கருத்து கணிப்பு என்ற ஒன்றை வெளியிட்டனர். அது மக்களிடையே எடுக்கப்பட்ட கருத்து கணிப்பல்ல, மக்களிடையே திணிக்க விரும்பிய கருத்து என்பதை தி.மு.க தலைமை திடமாக உணர்ந்தது.அழகிரி ஆவேசமாகப் பொங்கி எழுந்தார். அடித்து நொறுக்கப்பட்டது மதுரை தினகரன் அலுவலகம். வன்முறையாளர்களால் வைக்கப்பட்ட பெருநெருப்பில் வீழ்ந்து கருகின மூன்று மனிதஜீவன்கள்.'எல்லையை மீறி என் தலைமைக்கே குறிவைக்கிறாயா...?' என கருணாநிதி மாறன் சகோதரர்களுக்கு கருணைகாட்ட மறுத்தார்.தயாநிதி மாறன் தானே வலிந்து மத்திய அமைச்சர் பதவியைத் துறந்தார். 'உனக்கு வலுவான மீடியா பலம் இருப்பதால் தானே இந்த திமிர். இதோ நானும் வருகிறேன்' என கலைஞர் தொலைகாட்சி, இசையருவி, கலைஞர் நியூஸ் சேனல், முரசு என ஒன்றையடுத்து ஒன்றென நான்கு தொலைகாட்சி சேனல்கள் ஒரு ஆண்டுக்குள் உருவாக்கப்பட்டன. இவற்றை மக்களிடம் கொண்டுசெல்ல எஸ்.சி,வியின் தயவை எதிர்பார்க்க வேண்டியுள்ளதே... என்ற எரிச்சல் காரணமாக அரசே கேபிள் நெட்வொர்க் ஆரம்பிக்கும் என அறிவிப்பும் வெளியானது.எப்படியோ இந்த கலகத்தால் சன்குழுமத்தின் சர்வாதிகாரம் முடிவுக்கு வந்து, ஜனநாயகச் சூழல் தமிழக கேபிள் உலகத்திற்கு கனிந்தால் நல்லது தான் என பொதுமக்கள் தரப்பிலும், கேபிள் ஆபரேட்டர்கள் தரப்பிலும் நிம்மதி பெருமூச்சு வெளியானது.தமிழகம் முழுமையிலுமுள்ள கேபிள் ஆபரேட்டர்கள் அரசுக்கு ஆமோக ஆதரவு தந்தனர். சென்னையில் ஊர்வலம், மாநாடு, போன்றவை நடத்தி முதலமைச்சரை அழைத்தனர். முதலமைச்சரும் அதில் கலந்துகொண்டார். கேபிள் டிவி ஆபரேட்டரகள் தங்களுக்கொரு விடிவுகாலம் பிறந்துவிட்டதாக மெய்யாலுமே நம்பினர்.இதோ, அதோ என அறிவிப்புகள் தான் வெளியானது. ஆனால் அரசு கேபிள் டிவி தொடங்க அதீதகாலதாமதம் ஏற்பட்டது.ஏற்கெனவே எஸ்சிவி ஏற்படுத்தியுள்ள சம்ராஜ்யத்தில் சலசலப்பு உருவானது. இந்த சலசலப்பை சமாளிக்க ஆபரேட்டர்கள் உதவியின்றி 'சன்டைரக்ட்' என 'டிஸ் ஆன்டெனாவை' களத்தில் இறக்கியது சன்குழுமம்.ஆபரேட்டர்கள் அதிர்ந்தனர்.அரசு கேபிள் வந்தால் குறைந்த கட்டணம், தரமானசேவை, நிம்மதியான வியாபாரம், பாதுகாப்பு கிடைக்கும். மக்களை இழக்க வேண்டியிருக்காது என ஆறுதல் அடைந்து எதிர்பார்த்துகிடந்தனர்.ஒரு வருட தாமதத்திற்கு பிறகு வந்த அரசு கேபிளோ சரியான திட்டமிடலின்றி தயக்கத்துடன் கால்பதித்தது. முதற்கட்டமாக தஞ்சை, கோவை, திருநெல்வேலி, வேலூர் என்று அடித்தளம் போட்டனர். இதில் சென்னை, மதுரையை ஏன் சேர்க்கவில்லை? அல்லது தமிழகம் முழுமைக்குமான முயற்சி ஏன் மேற்கொள்ளப்படவில்லை என்பது புரியாத புதிராகத்தான் இருந்தது.அப்படியும் கூட கோவை, நெல்லை ஆகிய இடங்களில் ஆபரேட்டர்கள் ஆர்வத்துடன் அரசு கேபிளில் இணைந்தனர். வேலூர், தஞ்சையிலும் கூட நிறைய ஆபரேட்டர்கள் சேர்ந்தனர்.இந்நிலையில் சன்குழுமம் தன்சேனல்களை அரசுக்குத் தரமறுத்ததுடன் தன்னுடைய செல்வாக்கால் சோனி, ஸ்டார், போன்ற சேனல்களையும் அரசுக்கு ஆதரவு தரவிடாமல் செய்தது.இப்படி சன்குழும்ம் சண்டித்தனம் செய்யும் என்பதை அரசு முன்பே எதிர்பார்த்திருக்க வேண்டும். அதற்கேற்ப தன்வியூகங்களை வகுத்திருக்க வேண்டும். 'டிரா' சட்டப்படி ஒரு எம்.எஸ்.ஓ சேனல் கேட்டு விண்ணப்பித்தால் 90 நாட்களில் ஒளிபரப்பை தந்தாக வேண்டும். அரசு கேபிள் ஒளிபரப்பை தோல்வி அடையவைக்க சன்குழுமம் ஒளிபரப்பை தர மறுத்தது. ஆனால் தமிழ்நாட்டில் சன்குழுமத்தின் ஒத்துழைப்பின்றி கேபிள் நெட்வொர்க்கை செய்வது கடினம் என்பது மிகவும் ஒத்துக்கொள்ளப்பட்ட யதார்த்தம். ஆனபோதிலும் அரசு கேபிளில் ஆபரேட்டர்கள் இணைக்கப்பட்டனர். அரசு அதிகாரபலமிருக்கிறது என்பதால் ஆபரேட்டர்களில் சிலர்சட்டத்திற்கு புறம்பாக சன்குழுமச்சேனல்களை திருட்டுத்தனமாக மக்களுக்கு ஒளிபரப்பினர்.சண்டித்தனம் செய்யும் சன்குழுமத்தையும் சட்டப்படி பணியவைக்க அரசு முயற்சி எடுக்கவில்லை. சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஆபரேட்டர்களையும் தடுக்கவில்லை.கேபிள் ஆபரேட் நெட்வொர்க்கில் பழுத்த அனுபவமிக்க ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார். "சன்குழுமம் அரசு கேபிளுக்கு ஒளிபரப்பைத் தரமாட்டார்கள். ஆனால் சன்போன்ற கட்டணச் சேனல்களைத் தவிர்த்தால் ராஜ், ஜீ தமிழ், மக்கள், பொதிகை, விண், தமிழன், மெகா, வசந்த், கலைஞர், ஜெயா, முரசு, இமயம்... போன்ற ஏராமாள இலவச சேனல்களை மக்ளுக்கு தந்து மாதம் ரூ30 முதல் ரூ50வரை வசூலித்தால் அதில் சேருவதற்கு இலட்ச கணக்கான மக்கள் முன் வருவார்கள். கட்டண சேனல்கள் காரணமாக மாதம் ரூ150முதல் ரூ200வரை கட்டணம் செலுத்துவதை பெரும் சுமையாக கருதக்கூடிய ஏழை எளிய நடுத்தர பிரிவினர் அரசுக்கு அமோக ஆதரவு தருவார்கள். ஆனால் இதற்கு தேவை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் தான். அது இந்த அரசுக்கு இருந்தால் அரசு கேபிள் நெட்வொர்க்கிற்கு அபார வெற்றி கிடைத்திருக்கும். ஆனால் அரசு கேபிள் நெட்வொர்க் என்பது ஆரம்பித்து ஐந்து மாதங்கள் ஆகியும் ஒரு முறையான வழிமுறையின்றி, நிர்வாகத் தெளிவும், திடமுமின்றியே செயல்பட்டது.அரசு கேபிள் களத்திற்கு வந்த போது அதற்கு துணைநின்றிருக்க வேண்டிய அழகிரியோ மதுரைக்கு அரசு கேபிள் வராமல் தடுத்ததோடு, புதிதாக சொந்தமாக ராயல் கேபிள் விஷன் என்ற ஒன்றை தன் குடும்பத்தின் சார்பாக ஆரம்பித்தார்.வன்முறைவழியில் எஸ்.சி.வியின் பக்கமிருந்த ஆபரேட்டர்களை தன்னுடைய நெட்வொர்க்கில் சேரும்படி கட்டாயப்படுத்தினார். வர மறுத்த ஆபரேட்டர்களின் தொழிலையே அபகரித்தார். இப்படியாக ஒரு அராஜகத்தை அவர் மதுரையில் அரங்கேற்றிய போது அத்தனை தமிழக அரசியல்வாதிகளும் சன்குழுமத்தின் சார்பாக அறிக்கை தந்தனர். ஆனால் இன்று அந்த அரசியல்வாதிகள் எல்லாமே அரசு கேபிள் நெட்வொர்க் வயர்கள் அறுத்தெறியப்படும் போதும், அரசு கேபிள் ஆபரேட்டர்கள் மிரட்டப்பட்டு எஸ்.சி.வி பக்கம் சேர்க்கப்படுவது பற்றியும், மக்கள் வரிப்பணம் ரூ 100 கோடிக்குமேல் அரசு கேபிள் நெட்வொர்க்கில் அநியாயமாக விரயமாக்கப்பட்டு வீழலுக்கு இறைத்த நீராகிவிட்டது பற்றியும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் பொசுங்கியது பற்றியும் வாய்திறவாமல் மௌனம் சாதிப்பது ஏன்?இப்படி சுயநல கூட்டம் இன்றைய அரசியலை ஆக்கிரமித்திருப்பதால் தான் தார்மீகக் குரலை தமிழகத்தில் கேட்க முடியவில்லை. ஏதோ ஒரு அநியாயத்திற்கு எதிராக ஒரு அரசியல்வாதியின் குரல் ஒலிக்கிறதென்றால் அதில் அவர் சுயநலம்சம்பந்தப்பட்டிருக்கலாம் அல்லது அவரது சுயநலனுக்கு அதில் பாதிப்பு இருக்காது என்பதை அவர் உறுதிபடுத்தி கொண்டிருக்கலாம் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் அரசுகேபிள் இணைப்பில் வந்துவிட்ட பிறகு, சுமார் ஆயிரம் ஆபரேட்டர்கள் அரசுக்கு பணிபுரியத் தொடங்கிவிட்ட பிறகு அதிரடியாக அரசு கேபிள் வயர்களை களத்தில் இறங்கி அறுத்தெறியவும், அரசுகேபிள் ஆபரேட்டர்களை மரட்டவும் முடிகிறதென்றால் அதை முதலமைச்சரின் கீழிருக்கும் காவல்துறை வேடிக்கை பார்க்கிறதென்றால் என்ன பொருள்?முதலமைச்சர் மக்கள் பக்கம் நிற்கவில்லை. தன்னுடைய அரசாங்கத்தில் தன்னை நம்பி வந்த ஆபரேட்டர்களையும், மக்களையும் காப்பாற்ற அவர் அக்கறை காட்டுவதைவிடவும் தன்னுடைய குடும்ப நிறுவனம் சார்பாக அவர் நிற்கிறார் என்பதே பொருள்.அரசு கேபிள் நெட்வொர்க் தோற்றுவிட்டதென்றால் இந்த அரசுக்கு, இந்த முதலமைச்சருக்கு நிர்வாத்திறமையும், நிர்வாக உறுதியும் ஒரு சிறிதும் இல்லை என்பது மட்டுமல்ல, அவர் ஆட்சியில் அமர்ந்திருப்பதே தன் குடும்பத்தினர் சகல விதங்களிலும் சடடத்தை மீறியாவது செயல்பட்டு சொத்துசேர்பதை, தொழில் செய்வதை பாதுகாப்பதற்காகத்தானேயன்றி மக்கள் நலனை காப்பாற்றுவதற்கில்லை என்பது சற்றும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது.ஏனென்றால் இரு குடும்பங்களின் இணைப்புக்குப் பிறகு தமிழக அரசு கேபிள் டிவிக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியான உமாசந்திரனிடம் நிருபர்கள் கேட்டபோது "அரசு கேபிள் டிவி என்னாகும்? என்ற கேள்விக்கே இடமில்லை. முன்பைக் காட்டிலும் இன்னும் சிறப்பாகச் செயல்படும். இப்போது சுமார் ஒரு லட்சம் இணைப்புகள் அரசு கேபிளுக்கு கிடைத்துள்ளார்கள். இன்னும் இரண்டு வருடத்தில் சுமார் ஐம்பது லட்சம் இணைப்புகள் என்பதே எங்கள் இலக்கு. இன்னும் ஆறுமாதத்திலேயே தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் அரசு கேபிள் அமலுக்கு வரும். மிக நவீனதொழில்நுட்பம், அதே சமயம் குறைந்த கட்டணம் என்ற வகையில் தமிழகத்தில் மக்களுக்கு 50 லட்சம் செட் ஆப் பாக்ஸ்களை தருவோம்" என்றார்.அரசு கேபிள் டிவியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு இருந்த அக்கரையும், துடிப்பும் ஆளும் கட்சித் தலைமைக்கு இல்லை. அரசு கேபிள் டிவி வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் இராது. அதில் கல்வி ஒளிபரப்புகள் இருக்கும். பள்ளி ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் அரசு கேபிள் மூலமாக கல்வியை போதிக்க ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். என்றெல்லாம் உமாசந்திரன், கூறினாரே என்பதை நினைத்து பார்க்கையில் அரசு கேபிள் இன்று செயலிழந்துவிட்டதால் மக்கள் மட்டுமல்ல மாணவர்கள் சமுதாயத்திற்கும் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.ஒரு சில நாட்களுக்கு முன்பு அரசின் 'இலக்கு' பற்றி நம்பிக்கையுடன் பேட்டியளித்த அதே ஐ.ஏ.எஸ். அதிகாரி அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அரசு கேபிளின் 'இழப்பு' பற்றி அறிவிக்கும் நிலைக்கு ஆளானார்.கோயம்பத்தூரில் மட்டும் அரசு கேபிள் வயர்கள் அறுத்தெறியப்பட்டு அரசு கேபிளுக்கு எதிராக நடக்கும் வன்முறையால் பல இலட்சங்கள் இழப்பு உண்டாகியுள்ளதோடு அரசின் 90 சதவிகித பார்வையாளர்கள் அரசு கேபிளை பார்க்கவியலாமல் தடுக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது" என்றார்.ஆனால் காவல்துறை அரசு கேபிளுக்கு பாதுகாப்பும் தரவில்லை. வன்முறையாளர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கோவையில் அரசு கேபிளுக்கு கிடைத்த 300 ஆபரேட்டர்களில் மிகப்பெருவாரியானவர்கள் இன்று அரசு கேபிளில் இல்லை. அரசு வசமிருந்த 20,000 இணைப்புகளை இன்று ஆயிரத்திற்கும் குறைவாக போய்விட்டது. கோவையில் மட்டும் என்றில்லை, நெல்லை, வேலூர், தஞ்சையிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான். பாதிக்கப்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் அனைவரும் ஆங்காங்கே ஒன்று திரண்டு சுமார் 10 பேருந்துகளில் முதல்வரைச் சந்திக்க தலைநகர் வந்தனர். ஆனால் அவர்களை முதலமைச்சர் சந்திக்கவோ, குறைகளை காது கொடுத்து கேட்கவோ விரும்பவில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் கைது செய்யப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.இதே கேபிள் ஆபரேட்டர்கள் மாநாட்டில் சென்னை பல்கலைகழக மண்டபத்தில் முதலமைச்சர் பேசியவார்த்தைகள் இன்னும் காதில் ரீங்காரமிடுகிறது. அனைத்து கேபிள் ஆபரேட்டர்களும் அரசு கேபிளுக்கு வாருங்கள். கேபிள் தொழிலின் எதிர்காலத்தையும், அதில் ஈடுபட்டுள்ள உங்கள் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவது அரசின் பொறுப்பு" என்றார் முதல்வர்.ஆனால் இன்று நடப்பது என்ன?அரசு கேபிளுக்கு சன்குழுமச் சேனல்களை தரமறுப்பது தொடர்பான வழக்கு டிசம்பர் 15-ல் கோர்டுக்கு வந்த போது அரசு வழக்கறிஞர் வாதாடவில்லை. வாய்தா கேட்டு வழக்கை தள்ளிப்போடுகிறார். களத்தில் ஆயிரம் ஆபரேட்டர்கள் அடி உதை வாங்கி தொழில் செய்ய முடியாமல் தவித்து கொண்டிருக்க, அவர்களுக்கு ஆதரவை நல்கி உத்திரவாதம் செய்யவேண்டிய அரசோ நீதிமன்றத்தில் நீதியை பெற்றுத்தர ஆர்வம் காட்டாமல் பதுங்குகிறது. அதேசமயம் அழகிரிக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சன்குழுமத்திடம் சமரசம் பேசி வாபஸ் வாங்க வைத்தது ஆளும் கட்சித் தலைமை. அந்தத் தலைமை அதே சன்குழுமத்திடம் அரசு கேபிளுக்கு ஒளிபரப்பை கேட்டுப் பெறவில்லை. அன்று பத்திரிகை வாயிலாக, 'சன்குழுமச் சேனல்களை அரசுக்கு தர மறுக்கிறார்கள்' என அங்காலாய்த்த முதல்வர், இன்று தினசரி தன்னை நிழல்போலத் தொடரும் தயாநிதி மாறனிடம் ஏன் கேட்கவில்லை.கடும் எதிரிகளாக ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டிருந்த மாறன் சகோதரர்களும், மு.க.அழகிரியும் இன்று மதுரையில் தொழில் கூட்டாளிகளாகிவிட்டனர்.மதுரையில் சன்குழுமச் சேனல்களை அழகிரிக்கு தரமாட்டோம் என்ற மாறன் சகோதரர்கள் இன்று தந்துவிட்டனர். மதுரையில் சன்குழுமத் தயாரிப்பில் உருவான படங்களைக் கூட திரையிடவிடமாட்டேன் என தடுத்த அழகிரி இன்று மாறன் சகோதரர்களோடு தோளில் கைபோட்டு சிரிக்கிறார்.குடும்பங்களின் பகையில் சாதிக்க முடியாதிருந்த அரசு கேபிள் நெட்வொர்க் வெற்றியை குடும்பங்களின் ஒன்றிணைப்பிலாவது சாதித்து மக்களுக்கு ஒரேயொரு நன்மையாவது செய்துவிடலாம் என முதலமைச்சரோ அல்லது அவரது வாரிசான ஸ்டாலினோ கிஞ்சித்தும் எண்ணவில்லை.'இவர்கள் பகை கொண்டாலும் மக்கள் தான் பலிகடா உறவு கொண்டாலும் மக்கள் வளங்களைத்தான் உறிஞ்சுவார்கள்.'என்றால்... இது எவ்வளவு கசப்பான உண்மை. இந்த உண்மையை உணர்ந்ததறிய தமிழகம் தந்த விலை அளவிடற்கரியது.இந்த இரு குடும்பங்களுக்கிடையிலான பகை நெருப்பில் பொசுங்கி சாம்பலான உயிர்களுக்கும், இன்றைய உறவின் ஒருங்கிணைப்பில் கழுத்து நெறிபட்டு களபளியான கேபிள் ஆபரேட்டர்களுக்கும், லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் பணம் இழந்து நிற்கும் ஆபரேட்டர்களுக்கும், கண்ட்ரோல் ரூம் உரிமையாளர்களுக்கும், அரசு கேபிளுக்கு பணம் கட்டிய அப்பாவி பொதுமக்களுக்கும் கண்ணீர் அஞ்சலியை செலுத்துவதைத் தவிர கையாளாகாத நம்மால் என்ன செய்துவிட இயலும்?

அஸ்த்தமனமாகிக்கொண்டிருக்கும் அரசு கேபிள்...-

சாவித்திரிகண்ணன்

ஆரம்பித்த சிறிது நாட்களுக்குள்ளாகவே அஸ்த்தமனத்திற்கு தேதி குறித்துக் கொண்டதா அரசு கேபிள் நெட்வொர்க்...? முதலமைச்சரால் முன்முயற்சி எடுத்து உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆரம்பித்த சில மாதங்களுக்குள்ளாகவே அவராலயே அனாதையாக்கப்பட்ட அதிசயத்தை அல்லது அவலத்தை என்னென்பது? ஒரு கட்சிக்குள் ஏற்பட்ட அதிகாரமையத்திற்கான போட்டி அல்லது இரு குடும்பங்களுக்கிடையிலான வியாபாரரீதியான போட்டி இன்று ஆயிரக்கணக்கான கேபிள் ஆபரேட்டர்களை, லட்சக்கணக்கான தொலைகாட்சி பார்வையாளர்களை கடும் பாதிப்புக்கு ஆளாக்கிவிட்டது.மே- 2007-ல் நடந்த சன்குழுமத்திற்கும், தி.மு.க தலைமைக்குமான மோதலைத் தொடர்ந்து தமிழக தொலைகாட்சி உலகில் சில அதிகார மாற்றங்கள் அரங்கேறுவதற்கான சூழல் கணிந்தது.1993-ல் கேபிள் டிவி உலகில் கால்பதித்தது சன்குழுமம். முதல் மூன்றாண்டுகள் முன்னேற்றங்கள் ஏதுமின்றி முட்டிமோதி திணறியது. 96-ல் தி.மு,.க ஆட்சியைப் பிடித்ததும், அதைத் தொடர்ந்து மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் முரசொலிமாறன் மத்திய அமைச்சரானதும், சன்குழும வியாபார நலன்களுக்கு சாதகமான சூழல் உருவாக்கப்பட்டது. 2000 மாவது ஆண்டில் தயாநிதி மாறனால் சுமங்கலி கேபிள் விஷன் (scv) ஆரம்பிக்கப்பட்டு, அரசியல் அதிகாரபலம் கொண்டு ஆபரேட்டர்கள் மிரட்டப்பட்டு, சுமங்கலி கேபிள் விஷன் தமிழகத்தின் முக்கியநகரங்களை முற்றுகையிட்டது. எஸ்.சி.வியோடு சேராவிட்டால் எவரும் தமிழகத்தில் கேபிள் ஆபரேட்டர்களாக வியாபாரம் செய்யமுடியாது என்று அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரபலத்தால் நிர்பந்தம் செய்யப்பட்டது. சுயேட்சையாக செயல்பட்டவர்களும் மாற்று நிறுவனங்களை நடத்தியவர்களும் ஏறத்தாழ தொழிலையே துறந்தனர். கேபிள் ஆபரேட்டர்கள் கொத்தடிமைகளாக்கப்பட்டனர். தயாநிதி மாறன் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரானதும், தமிழகத்தில் வேறு எவரும் புதிய தொலைகாட்சி சேனல்களை துவங்க முடியாமல் முட்டுக்கட்டைபோட்டார். முன்பே துவங்கியிருந்தவர்களால் எஸ்.சி.வியின் தயவின்றி எந்த முக்கியநகரத்திலும் காலூன்ற முடியாது என்ற நிலைமை வலுவானது.மிகக்குறுகிய காலத்தில் சூது, வாது, அரசியல் வன்முறையால் வெற்றிகளை குவித்த மாறன் சகோதரர்கள் தமிழகத்தின் அரசியல் தலைமை பீடத்தை நோக்கி அடுத்த காய்களை நகர்த்தினர். அதற்கு கருணாநிதியின் குடும்பவாரிசுகளுக்கிடையிலான அதிகாரப்போட்டியை ஆயுதமாக்கிக் கொண்டனர். கூடவே அந்த வாரிசு வரிசையில் தயாநிதிமாறனும் தலையெடுத்திருப்பதை சூசமாக அறிவிக்கும் விதத்தில் கருத்து கணிப்பு என்ற ஒன்றை வெளியிட்டனர். அது மக்களிடையே எடுக்கப்பட்ட கருத்து கணிப்பல்ல, மக்களிடையே திணிக்க விரும்பிய கருத்து என்பதை தி.மு.க தலைமை திடமாக உணர்ந்தது.அழகிரி ஆவேசமாகப் பொங்கி எழுந்தார். அடித்து நொறுக்கப்பட்டது மதுரை தினகரன் அலுவலகம். வன்முறையாளர்களால் வைக்கப்பட்ட பெருநெருப்பில் வீழ்ந்து கருகின மூன்று மனிதஜீவன்கள்.'எல்லையை மீறி என் தலைமைக்கே குறிவைக்கிறாயா...?' என கருணாநிதி மாறன் சகோதரர்களுக்கு கருணைகாட்ட மறுத்தார்.தயாநிதி மாறன் தானே வலிந்து மத்திய அமைச்சர் பதவியைத் துறந்தார். 'உனக்கு வலுவான மீடியா பலம் இருப்பதால் தானே இந்த திமிர். இதோ நானும் வருகிறேன்' என கலைஞர் தொலைகாட்சி, இசையருவி, கலைஞர் நியூஸ் சேனல், முரசு என ஒன்றையடுத்து ஒன்றென நான்கு தொலைகாட்சி சேனல்கள் ஒரு ஆண்டுக்குள் உருவாக்கப்பட்டன. இவற்றை மக்களிடம் கொண்டுசெல்ல எஸ்.சி,வியின் தயவை எதிர்பார்க்க வேண்டியுள்ளதே... என்ற எரிச்சல் காரணமாக அரசே கேபிள் நெட்வொர்க் ஆரம்பிக்கும் என அறிவிப்பும் வெளியானது.எப்படியோ இந்த கலகத்தால் சன்குழுமத்தின் சர்வாதிகாரம் முடிவுக்கு வந்து, ஜனநாயகச் சூழல் தமிழக கேபிள் உலகத்திற்கு கனிந்தால் நல்லது தான் என பொதுமக்கள் தரப்பிலும், கேபிள் ஆபரேட்டர்கள் தரப்பிலும் நிம்மதி பெருமூச்சு வெளியானது.தமிழகம் முழுமையிலுமுள்ள கேபிள் ஆபரேட்டர்கள் அரசுக்கு ஆமோக ஆதரவு தந்தனர். சென்னையில் ஊர்வலம், மாநாடு, போன்றவை நடத்தி முதலமைச்சரை அழைத்தனர். முதலமைச்சரும் அதில் கலந்துகொண்டார். கேபிள் டிவி ஆபரேட்டரகள் தங்களுக்கொரு விடிவுகாலம் பிறந்துவிட்டதாக மெய்யாலுமே நம்பினர்.இதோ, அதோ என அறிவிப்புகள் தான் வெளியானது. ஆனால் அரசு கேபிள் டிவி தொடங்க அதீதகாலதாமதம் ஏற்பட்டது.ஏற்கெனவே எஸ்சிவி ஏற்படுத்தியுள்ள சம்ராஜ்யத்தில் சலசலப்பு உருவானது. இந்த சலசலப்பை சமாளிக்க ஆபரேட்டர்கள் உதவியின்றி 'சன்டைரக்ட்' என 'டிஸ் ஆன்டெனாவை' களத்தில் இறக்கியது சன்குழுமம்.ஆபரேட்டர்கள் அதிர்ந்தனர்.அரசு கேபிள் வந்தால் குறைந்த கட்டணம், தரமானசேவை, நிம்மதியான வியாபாரம், பாதுகாப்பு கிடைக்கும். மக்களை இழக்க வேண்டியிருக்காது என ஆறுதல் அடைந்து எதிர்பார்த்துகிடந்தனர்.ஒரு வருட தாமதத்திற்கு பிறகு வந்த அரசு கேபிளோ சரியான திட்டமிடலின்றி தயக்கத்துடன் கால்பதித்தது. முதற்கட்டமாக தஞ்சை, கோவை, திருநெல்வேலி, வேலூர் என்று அடித்தளம் போட்டனர். இதில் சென்னை, மதுரையை ஏன் சேர்க்கவில்லை? அல்லது தமிழகம் முழுமைக்குமான முயற்சி ஏன் மேற்கொள்ளப்படவில்லை என்பது புரியாத புதிராகத்தான் இருந்தது.அப்படியும் கூட கோவை, நெல்லை ஆகிய இடங்களில் ஆபரேட்டர்கள் ஆர்வத்துடன் அரசு கேபிளில் இணைந்தனர். வேலூர், தஞ்சையிலும் கூட நிறைய ஆபரேட்டர்கள் சேர்ந்தனர்.இந்நிலையில் சன்குழுமம் தன்சேனல்களை அரசுக்குத் தரமறுத்ததுடன் தன்னுடைய செல்வாக்கால் சோனி, ஸ்டார், போன்ற சேனல்களையும் அரசுக்கு ஆதரவு தரவிடாமல் செய்தது.இப்படி சன்குழும்ம் சண்டித்தனம் செய்யும் என்பதை அரசு முன்பே எதிர்பார்த்திருக்க வேண்டும். அதற்கேற்ப தன்வியூகங்களை வகுத்திருக்க வேண்டும். 'டிரா' சட்டப்படி ஒரு எம்.எஸ்.ஓ சேனல் கேட்டு விண்ணப்பித்தால் 90 நாட்களில் ஒளிபரப்பை தந்தாக வேண்டும். அரசு கேபிள் ஒளிபரப்பை தோல்வி அடையவைக்க சன்குழுமம் ஒளிபரப்பை தர மறுத்தது. ஆனால் தமிழ்நாட்டில் சன்குழுமத்தின் ஒத்துழைப்பின்றி கேபிள் நெட்வொர்க்கை செய்வது கடினம் என்பது மிகவும் ஒத்துக்கொள்ளப்பட்ட யதார்த்தம். ஆனபோதிலும் அரசு கேபிளில் ஆபரேட்டர்கள் இணைக்கப்பட்டனர். அரசு அதிகாரபலமிருக்கிறது என்பதால் ஆபரேட்டர்களில் சிலர்சட்டத்திற்கு புறம்பாக சன்குழுமச்சேனல்களை திருட்டுத்தனமாக மக்களுக்கு ஒளிபரப்பினர்.சண்டித்தனம் செய்யும் சன்குழுமத்தையும் சட்டப்படி பணியவைக்க அரசு முயற்சி எடுக்கவில்லை. சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஆபரேட்டர்களையும் தடுக்கவில்லை.கேபிள் ஆபரேட் நெட்வொர்க்கில் பழுத்த அனுபவமிக்க ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார். "சன்குழுமம் அரசு கேபிளுக்கு ஒளிபரப்பைத் தரமாட்டார்கள். ஆனால் சன்போன்ற கட்டணச் சேனல்களைத் தவிர்த்தால் ராஜ், ஜீ தமிழ், மக்கள், பொதிகை, விண், தமிழன், மெகா, வசந்த், கலைஞர், ஜெயா, முரசு, இமயம்... போன்ற ஏராமாள இலவச சேனல்களை மக்ளுக்கு தந்து மாதம் ரூ30 முதல் ரூ50வரை வசூலித்தால் அதில் சேருவதற்கு இலட்ச கணக்கான மக்கள் முன் வருவார்கள். கட்டண சேனல்கள் காரணமாக மாதம் ரூ150முதல் ரூ200வரை கட்டணம் செலுத்துவதை பெரும் சுமையாக கருதக்கூடிய ஏழை எளிய நடுத்தர பிரிவினர் அரசுக்கு அமோக ஆதரவு தருவார்கள். ஆனால் இதற்கு தேவை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் தான். அது இந்த அரசுக்கு இருந்தால் அரசு கேபிள் நெட்வொர்க்கிற்கு அபார வெற்றி கிடைத்திருக்கும். ஆனால் அரசு கேபிள் நெட்வொர்க் என்பது ஆரம்பித்து ஐந்து மாதங்கள் ஆகியும் ஒரு முறையான வழிமுறையின்றி, நிர்வாகத் தெளிவும், திடமுமின்றியே செயல்பட்டது.அரசு கேபிள் களத்திற்கு வந்த போது அதற்கு துணைநின்றிருக்க வேண்டிய அழகிரியோ மதுரைக்கு அரசு கேபிள் வராமல் தடுத்ததோடு, புதிதாக சொந்தமாக ராயல் கேபிள் விஷன் என்ற ஒன்றை தன் குடும்பத்தின் சார்பாக ஆரம்பித்தார்.வன்முறைவழியில் எஸ்.சி.வியின் பக்கமிருந்த ஆபரேட்டர்களை தன்னுடைய நெட்வொர்க்கில் சேரும்படி கட்டாயப்படுத்தினார். வர மறுத்த ஆபரேட்டர்களின் தொழிலையே அபகரித்தார். இப்படியாக ஒரு அராஜகத்தை அவர் மதுரையில் அரங்கேற்றிய போது அத்தனை தமிழக அரசியல்வாதிகளும் சன்குழுமத்தின் சார்பாக அறிக்கை தந்தனர். ஆனால் இன்று அந்த அரசியல்வாதிகள் எல்லாமே அரசு கேபிள் நெட்வொர்க் வயர்கள் அறுத்தெறியப்படும் போதும், அரசு கேபிள் ஆபரேட்டர்கள் மிரட்டப்பட்டு எஸ்.சி.வி பக்கம் சேர்க்கப்படுவது பற்றியும், மக்கள் வரிப்பணம் ரூ 100 கோடிக்குமேல் அரசு கேபிள் நெட்வொர்க்கில் அநியாயமாக விரயமாக்கப்பட்டு வீழலுக்கு இறைத்த நீராகிவிட்டது பற்றியும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் பொசுங்கியது பற்றியும் வாய்திறவாமல் மௌனம் சாதிப்பது ஏன்?இப்படி சுயநல கூட்டம் இன்றைய அரசியலை ஆக்கிரமித்திருப்பதால் தான் தார்மீகக் குரலை தமிழகத்தில் கேட்க முடியவில்லை. ஏதோ ஒரு அநியாயத்திற்கு எதிராக ஒரு அரசியல்வாதியின் குரல் ஒலிக்கிறதென்றால் அதில் அவர் சுயநலம்சம்பந்தப்பட்டிருக்கலாம் அல்லது அவரது சுயநலனுக்கு அதில் பாதிப்பு இருக்காது என்பதை அவர் உறுதிபடுத்தி கொண்டிருக்கலாம் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் அரசுகேபிள் இணைப்பில் வந்துவிட்ட பிறகு, சுமார் ஆயிரம் ஆபரேட்டர்கள் அரசுக்கு பணிபுரியத் தொடங்கிவிட்ட பிறகு அதிரடியாக அரசு கேபிள் வயர்களை களத்தில் இறங்கி அறுத்தெறியவும், அரசுகேபிள் ஆபரேட்டர்களை மரட்டவும் முடிகிறதென்றால் அதை முதலமைச்சரின் கீழிருக்கும் காவல்துறை வேடிக்கை பார்க்கிறதென்றால் என்ன பொருள்?முதலமைச்சர் மக்கள் பக்கம் நிற்கவில்லை. தன்னுடைய அரசாங்கத்தில் தன்னை நம்பி வந்த ஆபரேட்டர்களையும், மக்களையும் காப்பாற்ற அவர் அக்கறை காட்டுவதைவிடவும் தன்னுடைய குடும்ப நிறுவனம் சார்பாக அவர் நிற்கிறார் என்பதே பொருள்.அரசு கேபிள் நெட்வொர்க் தோற்றுவிட்டதென்றால் இந்த அரசுக்கு, இந்த முதலமைச்சருக்கு நிர்வாத்திறமையும், நிர்வாக உறுதியும் ஒரு சிறிதும் இல்லை என்பது மட்டுமல்ல, அவர் ஆட்சியில் அமர்ந்திருப்பதே தன் குடும்பத்தினர் சகல விதங்களிலும் சடடத்தை மீறியாவது செயல்பட்டு சொத்துசேர்பதை, தொழில் செய்வதை பாதுகாப்பதற்காகத்தானேயன்றி மக்கள் நலனை காப்பாற்றுவதற்கில்லை என்பது சற்றும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது.ஏனென்றால் இரு குடும்பங்களின் இணைப்புக்குப் பிறகு தமிழக அரசு கேபிள் டிவிக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியான உமாசந்திரனிடம் நிருபர்கள் கேட்டபோது "அரசு கேபிள் டிவி என்னாகும்? என்ற கேள்விக்கே இடமில்லை. முன்பைக் காட்டிலும் இன்னும் சிறப்பாகச் செயல்படும். இப்போது சுமார் ஒரு லட்சம் இணைப்புகள் அரசு கேபிளுக்கு கிடைத்துள்ளார்கள். இன்னும் இரண்டு வருடத்தில் சுமார் ஐம்பது லட்சம் இணைப்புகள் என்பதே எங்கள் இலக்கு. இன்னும் ஆறுமாதத்திலேயே தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் அரசு கேபிள் அமலுக்கு வரும். மிக நவீனதொழில்நுட்பம், அதே சமயம் குறைந்த கட்டணம் என்ற வகையில் தமிழகத்தில் மக்களுக்கு 50 லட்சம் செட் ஆப் பாக்ஸ்களை தருவோம்" என்றார்.அரசு கேபிள் டிவியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு இருந்த அக்கரையும், துடிப்பும் ஆளும் கட்சித் தலைமைக்கு இல்லை. அரசு கேபிள் டிவி வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் இராது. அதில் கல்வி ஒளிபரப்புகள் இருக்கும். பள்ளி ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் அரசு கேபிள் மூலமாக கல்வியை போதிக்க ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். என்றெல்லாம் உமாசந்திரன், கூறினாரே என்பதை நினைத்து பார்க்கையில் அரசு கேபிள் இன்று செயலிழந்துவிட்டதால் மக்கள் மட்டுமல்ல மாணவர்கள் சமுதாயத்திற்கும் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.ஒரு சில நாட்களுக்கு முன்பு அரசின் 'இலக்கு' பற்றி நம்பிக்கையுடன் பேட்டியளித்த அதே ஐ.ஏ.எஸ். அதிகாரி அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அரசு கேபிளின் 'இழப்பு' பற்றி அறிவிக்கும் நிலைக்கு ஆளானார்.கோயம்பத்தூரில் மட்டும் அரசு கேபிள் வயர்கள் அறுத்தெறியப்பட்டு அரசு கேபிளுக்கு எதிராக நடக்கும் வன்முறையால் பல இலட்சங்கள் இழப்பு உண்டாகியுள்ளதோடு அரசின் 90 சதவிகித பார்வையாளர்கள் அரசு கேபிளை பார்க்கவியலாமல் தடுக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது" என்றார்.ஆனால் காவல்துறை அரசு கேபிளுக்கு பாதுகாப்பும் தரவில்லை. வன்முறையாளர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கோவையில் அரசு கேபிளுக்கு கிடைத்த 300 ஆபரேட்டர்களில் மிகப்பெருவாரியானவர்கள் இன்று அரசு கேபிளில் இல்லை. அரசு வசமிருந்த 20,000 இணைப்புகளை இன்று ஆயிரத்திற்கும் குறைவாக போய்விட்டது. கோவையில் மட்டும் என்றில்லை, நெல்லை, வேலூர், தஞ்சையிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான். பாதிக்கப்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் அனைவரும் ஆங்காங்கே ஒன்று திரண்டு சுமார் 10 பேருந்துகளில் முதல்வரைச் சந்திக்க தலைநகர் வந்தனர். ஆனால் அவர்களை முதலமைச்சர் சந்திக்கவோ, குறைகளை காது கொடுத்து கேட்கவோ விரும்பவில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் கைது செய்யப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.இதே கேபிள் ஆபரேட்டர்கள் மாநாட்டில் சென்னை பல்கலைகழக மண்டபத்தில் முதலமைச்சர் பேசியவார்த்தைகள் இன்னும் காதில் ரீங்காரமிடுகிறது. அனைத்து கேபிள் ஆபரேட்டர்களும் அரசு கேபிளுக்கு வாருங்கள். கேபிள் தொழிலின் எதிர்காலத்தையும், அதில் ஈடுபட்டுள்ள உங்கள் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவது அரசின் பொறுப்பு" என்றார் முதல்வர்.ஆனால் இன்று நடப்பது என்ன?அரசு கேபிளுக்கு சன்குழுமச் சேனல்களை தரமறுப்பது தொடர்பான வழக்கு டிசம்பர் 15-ல் கோர்டுக்கு வந்த போது அரசு வழக்கறிஞர் வாதாடவில்லை. வாய்தா கேட்டு வழக்கை தள்ளிப்போடுகிறார். களத்தில் ஆயிரம் ஆபரேட்டர்கள் அடி உதை வாங்கி தொழில் செய்ய முடியாமல் தவித்து கொண்டிருக்க, அவர்களுக்கு ஆதரவை நல்கி உத்திரவாதம் செய்யவேண்டிய அரசோ நீதிமன்றத்தில் நீதியை பெற்றுத்தர ஆர்வம் காட்டாமல் பதுங்குகிறது. அதேசமயம் அழகிரிக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சன்குழுமத்திடம் சமரசம் பேசி வாபஸ் வாங்க வைத்தது ஆளும் கட்சித் தலைமை. அந்தத் தலைமை அதே சன்குழுமத்திடம் அரசு கேபிளுக்கு ஒளிபரப்பை கேட்டுப் பெறவில்லை. அன்று பத்திரிகை வாயிலாக, 'சன்குழுமச் சேனல்களை அரசுக்கு தர மறுக்கிறார்கள்' என அங்காலாய்த்த முதல்வர், இன்று தினசரி தன்னை நிழல்போலத் தொடரும் தயாநிதி மாறனிடம் ஏன் கேட்கவில்லை.கடும் எதிரிகளாக ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டிருந்த மாறன் சகோதரர்களும், மு.க.அழகிரியும் இன்று மதுரையில் தொழில் கூட்டாளிகளாகிவிட்டனர்.மதுரையில் சன்குழுமச் சேனல்களை அழகிரிக்கு தரமாட்டோம் என்ற மாறன் சகோதரர்கள் இன்று தந்துவிட்டனர். மதுரையில் சன்குழுமத் தயாரிப்பில் உருவான படங்களைக் கூட திரையிடவிடமாட்டேன் என தடுத்த அழகிரி இன்று மாறன் சகோதரர்களோடு தோளில் கைபோட்டு சிரிக்கிறார்.குடும்பங்களின் பகையில் சாதிக்க முடியாதிருந்த அரசு கேபிள் நெட்வொர்க் வெற்றியை குடும்பங்களின் ஒன்றிணைப்பிலாவது சாதித்து மக்களுக்கு ஒரேயொரு நன்மையாவது செய்துவிடலாம் என முதலமைச்சரோ அல்லது அவரது வாரிசான ஸ்டாலினோ கிஞ்சித்தும் எண்ணவில்லை.'இவர்கள் பகை கொண்டாலும் மக்கள் தான் பலிகடா உறவு கொண்டாலும் மக்கள் வளங்களைத்தான் உறிஞ்சுவார்கள்.'என்றால்... இது எவ்வளவு கசப்பான உண்மை. இந்த உண்மையை உணர்ந்ததறிய தமிழகம் தந்த விலை அளவிடற்கரியது.இந்த இரு குடும்பங்களுக்கிடையிலான பகை நெருப்பில் பொசுங்கி சாம்பலான உயிர்களுக்கும், இன்றைய உறவின் ஒருங்கிணைப்பில் கழுத்து நெறிபட்டு களபளியான கேபிள் ஆபரேட்டர்களுக்கும், லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் பணம் இழந்து நிற்கும் ஆபரேட்டர்களுக்கும், கண்ட்ரோல் ரூம் உரிமையாளர்களுக்கும், அரசு கேபிளுக்கு பணம் கட்டிய அப்பாவி பொதுமக்களுக்கும் கண்ணீர் அஞ்சலியை செலுத்துவதைத் தவிர கையாளாகாத நம்மால் என்ன செய்துவிட இயலும்?