Monday, October 22, 2007

மீடியா யுத்தம்

சாவித்திரிகண்ணன்
தி.மு.கவிற்கும், சன்குழுமத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரிவைத் தொடர்ந்து பல பிரம்மாண்டமான மாற்றங்கள் மளமளவென்று விஷூவல் மீடியாவில் விரியத் தொடங்கியுளளது. அரசாங்கமே கேபிள் டி.வி கார்ப்பரேஷன் ஆரம்பிக்கும் என்ற அறிவிப்பு வெளியானது. தமிழ்நாட்டில் சுமார் 80% கேபிள் இணைப்புகள் எஸ்.சி.வி எனப்படும் சுமங்கலிகேபிள் விஷனில் நேரடி மற்றம் மறைமுக கட்டுப்பாட்டில் தான் உளளன. இந்நிலையில் அரசு அறிவிப்பிற்கு அனைத்து கேபிள் ஆபரேட்டர்களும் பெரும் ஆதரவு தெரிவித்தனர். தமிழக அரசின் கேபிள் இனைப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இச்சூழலில் தொழில் நுட்பத்தின் அடுத்தகடடமான டிஷ்ஆண்டெனா மூலம் (டிடி.ஹெச்) தொலைக்காட்சி ஒளிபரப்புகளை நேரடியாக செயற்கைகோளிலிருந்து வீடுகளுக்கு பெறும் முறையை சன்குழுமம் மார்கெட்டிங் செய்ய ஆரம்பித்து இந்த விற்பனையும் சூடுபிடித்துளளது. ஏற்கெனவே ஜீ.டி.வி.யின் டிஷ் ஆண்டெனாவும், டாடாஸ்கையும் மார்கெட்டில் உள்ளன. இவை சமுமார் 4000ரூபாய் செலவில் செயல்படுத்தக்கூடியதாக்கும். ஆனால் சன்குழுமம் சுமார் ஆயிரம் ரூபாய் முதலீட்டில்மடிஷ்ஆண்டெனா தருவதாகவும் மாதம் 75ரூபாய் கட்டினால் போதுமென்றும் களத்திற்கு வந்துள்ளது. கேபிள் ஆபரேட்டர்கள் கதி கலங்கிபோய் சன்குழுமத்திற்கு எதிராக ஒருநாள் ஒளிபரப்பை நிறுத்தி போராடினார்கள். எவ்வளவுதான் டிஷ்ஆண்டெனா வந்தாலும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலேயே 60சதவிகிதத்தினர் கேபிள் இணைப்பு மூலம் தான் தொலைக்காட்சிபார்க்கின்றனர். காரணம் அங்கே பைபர் ஆப்டிகலில், பிராட்பேண்டில், டிஜிட்டல் கேபிள் இணைப்பு தரப்படுகிறது. இதன் மூலம்இன்டர்ணெட் தொலைபேசி உள்ளிடட மற்றும்பல சேவைகளையும் துல்லியமாகப் பெறமுடிகிறது. ஆகவே அப்படிப்படட தொழில்நுட்பத்தை எந்த நிறுவனம் எடுத்து வருகிறதோ அதற்குத் தான் எதிர்காலம் இருக்கிறது. தமிழ்நாட்டில் இப்படி பைபர்ஆப்டிகல் மூலமான கேபிள் இணைப்புக்கு ரிலையன்ஸ், ஹாத்வே போன்ற நிறுவனங்கள் தயாராக உளளனவாம். ஆக பலரும் களத்திற்கு வந்தால் அதில் தரமான, விலை நியாயமான சேவையை தேர்ந்தெடுக்கும் உரிமை திருவாளர் பொது ஜனத்தின் வசம் வந்துவிடும்.

No comments: